MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2.4 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
    அற்புதத் திருவந்தாதி (பாசுரங்கள் 44- 144)
    >
    44. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
    சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
    மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
    எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 1
    45 இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
    படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
    என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
    கன்பறா தென்னெஞ் சவர்க்கு. 2
    46 அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
    அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்
    பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
    காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். 3
    47 ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
    கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம்
    செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம்
    எம்மைஆட் கொண்ட இறை. 4
    48. இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
    இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே
    எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
    வந்தால் அது மாற்றுவான். 5
    49 வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
    தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
    முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
    என்நெஞ்சத் தானென்பன் யான். 6
    50. யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
    யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக்
    கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
    அம்மானுக் காளாயி னேன். 7
    51 ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
    ஆயினேன் அஃதன்றே யாமாறு - தூய
    புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
    அனற்கங்கை ஏற்றான் அருள். 8
    52 அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
    அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
    மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
    எப்பொருளு மாவ தெனக்கு. 9
    53 எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
    மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
    கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
    உண்டே யெனக்கரிய தொன்று. 10
    54. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
    ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
    கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
    அங்கையாற் காளாம் அது. 11
    55. அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
    அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே
    பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர்
    தனிக்கணங்கு வைத்தார் தகவு. 12
    56. தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
    புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
    ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
    சார்ந்திடுமே லேபாவந் தான். 13
    57. தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்
    தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
    பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
    நீணாகத் தானை நினைந்து. 14
    58. நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
    புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
    மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
    கென்செய்வான் கொல்லோ இனி. 15
    59. இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
    இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர்
    வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
    கனைக்கடலை நீந்தினோம் காண். 16
    60. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
    காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
    சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
    காதியாய் நின்ற அரன். 17
    61 அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
    பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
    தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை
    யானவனை எம்மானை இன்று. 18
    62 இன்று நமக்கௌிதே மாலுக்கும் நான்முகற்கும்
    அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
    மூவா மதியானை மூவே ழுலகங்கள்
    ஆவானைக் காணும் அறிவு. 19
    63 அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
    அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
    மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
    அப்பொருளுந் தானே அவன். 20
    64. அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
    அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
    இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
    மயனாகி நின்றானும் வந்து. 21
    65. வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின்
    சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர்
    இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
    பிரானீர்உம் சென்னிப் பிறை. 22
    66. பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
    இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
    எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
    எந்தையா உள்ள மிது. 23
    67 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
    றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
    மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
    இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 24
    68 இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
    எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
    ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
    நாமவனைக் காணலுற்ற ஞான்று. 25
    69 ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
    போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
    மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
    அக்கயலே வைத்த அரவு. 26
    70. அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
    பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
    ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
    பொன்னாரம் மற்றொன்று பூண். 27
    71. பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
    நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
    பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
    கென்முடிவ தாக இவர். 28
    72. இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
    இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது
    பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
    பேய்க்கோலங் கண்டார் பிறர். 29
    73. பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
    பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
    என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
    வன்பேயும் தாமும் மகிழ்ந்து. 30
    74. மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
    திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
    யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
    பேரன்பே இன்னும் பெருக்கு. 31
    75. பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
    ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
    முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
    நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். 32
    76. நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
    நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த
    தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும்
    அக்கோலத் தவ்வுருவே ஆம். 33
    77. ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
    நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
    ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
    அருகணையா தாரை அடும். 34
    78 அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந்
    திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
    அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
    மணிமிடற்றின் உள்ள மறு. 35
    79. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
    தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
    தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
    வளருமோ பிள்ளை மதி. 36
    80. மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட
    மதியார் வளர்சடையி னானை - மதியாலே
    என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
    என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. 37
    81 ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம்
    தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
    தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
    கூரேறு காரேனக் கொம்பு. 38
    82 கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
    அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
    அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
    மணிவரையே போலும் மறித்து. 39
    83 மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
    குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
    கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட்
    டுள்ளாதார் கூட்டம் ஒருவு. 40
    84 ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
    ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
    நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
    நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. 41
    85 நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
    ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
    வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
    இளங்குழவித் திங்கள் இது. 42
    86 திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல்
    எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
    வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
    தானே அறிவான் தனக்கு. 43
    87 தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
    எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய
    சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
    பேராளன் வானோர் பிரான். 44
    88. பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
    பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
    எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
    இங்குற்றான் காண்பார்க் கௌிது. 45
    89 எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும்
    அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
    றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
    சிந்தையராய் வாழுந் திறம். 46
    90 திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
    பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
    இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
    திருவடிக்கட் சேருந் திரு. 47
    91 திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
    பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
    இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
    ததுமதியொன் றில்லா அரா. 48
    92 அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
    விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்
    பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
    தன்னோடே யொப்பான் சடை. 49
    93 சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
    புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
    வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின்
    குலப்பாவை நீலக் குழல். 50
    94. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்
    தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
    பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும்
    ஆரழல்வாய் நீயாடும் அங்கு. 51
    95 அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
    தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
    திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
    சிரமாலை தோன்றுவதோர் சீர். 52
    96. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
    நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த
    நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
    காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53
    97 காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
    ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ
    மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய
    பாகத்தான் காணாமே பண்டு. 54
    98 பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
    கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு
    பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே
    மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55
    99 வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
    சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
    புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ
    நிலாத்தலையிற் சூடுவாய் நீ. 56
    100 நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய
    தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
    மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
    விடஅரவம் மேலாட மிக்கு. 57
    101 மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
    ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
    ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
    பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 58
    102 பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
    கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
    அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
    தெவ்வுருவோ நின்னுருவ மேல். 59
    103 மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
    போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
    கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
    தம்மான் திருமேனி அன்று. 60
    104 அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
    இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
    எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
    எவ்வுருவோ நின்னுருவம் ஏது. 61
    105 ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
    தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
    வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
    வல்வேட னான வடிவு. 62
    106 வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
    நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
    சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
    நின்முடிமேல் திங்கள் நிலா. 63
    107 நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
    உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
    செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
    புக்கரவங் காலையே போன்று. 64
    108 காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
    வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
    தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
    வீங்கிருளே போலும் மிடறு. 65
    109 மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
    மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
    மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
    பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. 66
    110 பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
    தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன்
    உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
    திருவடியின் மேய சிலம்பு. 67
    111 சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
    சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
    றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
    முதிரா மதியான் முடி. 68
    112 முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
    அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற்
    குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
    இனிஅவலம் உண்டோ எமக்கு. 69
    113 எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா
    தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
    போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
    ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 70
    114 இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
    மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங்
    கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
    கண்டாயே முக்கண்ணாய் கண். 71
    115 கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
    அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
    விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
    கண்ணாளா ஈதென் கருத்து. 72
    116 கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
    திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க
    வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி
    உள்ளமே எப்போதும் ஓது. 73
    117 ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
    ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
    எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
    கண்ணார் கபாலக் கமலம். 74
    118 கலங்கு புனல்கங்கை ஊடால லாலும்
    இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள்
    பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும்
    விரிசடையாங் காணில் விசும்பு. 75
    119 விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
    பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
    எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
    அந்தா மரைபோல் அடி. 76
    120 அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
    முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்
    மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும்
    அறிந்தாடும் ஆற்றா தரங்கு. 77
    121 அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
    இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
    என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
    பன்னாள் இரந்தாற் பணிந்து. 78
    122 பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
    அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
    எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
    சிந்தையார்க் குள்ள செருக்கு. 79
    123 செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள்
    அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
    மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
    காலனையும் வென்றுதைத்த கால். 80
    124 காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
    மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
    அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
    சரணார விந்தங்கள் சார்ந்து. 81
    125 சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
    பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
    தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
    வீழ்சடையே என்றுரைக்கும் மின். 82
    126 மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
    என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
    பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
    நிற்கின்ற போலும் நெடிது. 83
    127 நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
    கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
    விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்
    கண்டாலும் முக்கணான் கண். 84
    128 கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
    எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
    எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
    பெரியானைக் காணப் பெறின். 85
    129 பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ
    துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
    மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
    நற்கணத்தி லொன்றாய நாம். 86
    130 நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
    பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
    அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
    எறிவினையே என்னும் இருள். 87
    131 இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
    மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
    நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
    ஒன்றுடையாய் கண்டத் தொளி. 88
    132 ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித்
    தௌிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
    உண்டவா யஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
    கொண்டவா றென்இதனைக் கூறு. 89
    133 கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட்
    டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
    விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
    தெழித்தோடுங் கங்கைத் திரை. 90
    134 திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
    உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
    இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
    எம்மைப் புறம்உரைப்ப தென். 91
    135 என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
    தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
    சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க்
    கருளாக வைத்த அவன். 92
    136 அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
    அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய்
    மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
    மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93
    137 விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
    இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
    மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
    அஞ்சுமோ சொல்லாய் அவள். 94
    138 அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
    இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
    றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
    அன்பணியார் சொல்லுமின்இங் கார். 95
    139 ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
    போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
    தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
    மாயத்தால் வைத்தோம் மறைத்து. 96
    140 மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
    உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட்
    டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
    களைந்தெழுந்த செந்தீ யழல். 97
    141 அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
    அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
    பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
    தீயாடு வாயிதனைக் செப்பு. 98
    142 செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
    டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
    றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
    நாகத்தா யாடுன் நடம். 99
    143 நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம்
    இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற்
    பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே
    றுருமேறோ ஒன்றா உரை. 100
    144 உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
    கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
    ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
    பேராத காதல் பிறந்து. 101

    திருச்சிற்றம்பலம்