MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    சகலகலாவல்லிமாலை
    (ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)

    கட்டளைக் கலித்துறை

    வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
    தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
    துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
    கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 3

    அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
    குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
    தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
    களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

    தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
    வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
    தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
    காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

    பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
    நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
    தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
    கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

    பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
    எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
    விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
    கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

    பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
    கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
    தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
    காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

    சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
    நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
    செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
    கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

    சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
    நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
    நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
    கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

    மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
    பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
    விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
    கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10