MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    திருவருட்பா
    இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
    ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி
    பாடல்கள் (5064 -5818)

    113. அம்பலத்தரசே (5064 - 5155)
    114 சம்போ சங்கர (5156 - 5177)
    115 சிவபோகம் (5178 - 5217)
    116 அம்பலத்தமுதே (5218 - 5225)
    117 திருநட மணியே (5226 - 5240)
    118 ஞான சபாபதியே (5241 - 5250)
    119.விரைசேர் சடையாய் (5251 - 5254)
    120 ஜோதி ஜோதி (5255 - 5257)
    121 கண்புருவப் பூட்டு (5258 - 5268)
    122 ஊதூது சங்கே (5269 - 5284)
    123 சின்னம் பிடி (5285 - 5294)
    124 முரசறைதல் (5295)
    125 தனித்திரு அலங்கல் (5296 - 5456)
    126 சிற்சத்தி துதி (5457 - 5466)
    127 இன்பத் திறன் (5467 - 5476)
    128 உற்ற துரைத்தல் (5477 - 5486)
    129 சுத்த சிவநிலை ( 5487 - 5533)
    130 உலகப் பேறு (5534 - 5543)
    131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் (5544 - 5555)
    132. உலகர்க்கு உய்வகை கூறல் (5556 - 5565)
    133 புனிதகுலம் பெறுமாறு புகலல் (5566 - 5575)
    134 மரணமிலாப் பெருவாழ்வு (5576 - 5603)
    135 சமாதி வற்புறுத்தல் (5604 - 5613)
    136 சன்மார்க்க உலகின் ஒருமைநிலை (5614 - 5624)
    137 திருவடிப் பெருமை (5625 - 5669)
    138.தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல் (5670 - 5679)
    139.நற்றாய் செவிலிக்குக் கூறல் (5680 - 5689)
    140 தோழிக்குரிமை கிளத்தல் (5690 - 5703)
    141 தலைவி கூறல் (5704 - 5713)
    142 அனுபவ மாலை (5714 - 5813)
    143 சத்திய வார்த்தை (5814)
    144 சத்திய அறிவிப்பு (5815 - 5818)

    அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை

    திருச்சிற்றம்பலம்
    ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)

    113. அம்பலத்தரசே


    நாமாவளி

    சிந்து

    5064. சிவசிவ கஜமுக கணநா தா
    சிவகண வந்தித குணநீ தா. 1
    5065 சிவசிவ சிவசிவ தத்துவ போதா
    சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374) 2
    (374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும்
    அம்பலத்தரசே முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும்
    இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று அம்பலத்தரசே மூன்றாவதாக
    வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார்
    அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு
    நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும்,
    அவற்றில் அம்பலத்தரசே என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார்.
    இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக்
    காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும்
    காப்பாகக் கொள்ளலாம்.
    5066 அம்பலத் தரசே அருமருந் தே
    ஆனந்தத் தேனே அருள்விருந் தே. 1
    5067 பொதுநடத் தரசே புண்ணிய னே
    புலவரெ லாம்புகழ் கண்ணிய னே. 2
    5068 மலைதரு மகளே மடமயி லே
    மதிமுக அமுதே இளங்குயி லே. 3
    5069 ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
    அற்புதத் தேனே மலைமா னே. 4
    5070 சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
    சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா. 5
    5071 படன விவேக பரம்பர வேதா
    நடன சபேச சிதம்பர நாதா. 6
    5072 அரிபிர மாதியர் தேடிய நாதா
    அரகர சிவசிவ ஆடிய பாதா. 7
    5073 அந்தண அங்கண அம்பர போகா
    அம்பல நம்பர அம்பிகை பாகா. 8
    5074 அம்பர விம்ப சிதம்பர நாதா
    அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா. 9
    5075 தந்திர மந்திர யந்திர பாதா
    சங்கர சங்கர சங்கர நாதா. 10
    5076 கனக சிதம்பர கங்கர புரஹர
    அனக பரம்பர சங்கர ஹரஹர. 11
    5077 சகல கலாண்ட சராசர காரண
    சகுண சிவாண்ட பராபர பூரண. 12
    5078 இக்கரை கடந்திடில் அக்கரை யே
    இருப்பது சிதம்பர சர்க்கரை யே. 13
    5079 என்னுயிர் உடம்பொடு சித்தம தே
    இனிப்பது நடராஜ புத்தமு தே. 14
    5080 ஐயர் திருச்சபை ஆடக மே
    ஆடுதல் ஆனந்த நாடக மே. 15
    5081 உத்தர ஞான சிதம்பர மே
    சித்திஎ லாந்தரும் அம்பரமே. 16
    5082 அம்பல வாசிவ மாதே வா
    வம்பல வாவிங்கு வாவா வா. 17
    5083 நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
    நல்லஎ லாம்செய வல்லவ னே. 18
    5084 ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
    மானந்த போனகம் கொண்டோ மே. 19
    5085 சகள உபகள நிட்கள நாதா
    உகள சததள மங்கள பாதா. 20
    5086 சந்தத மும்சிவ சங்கர பஜனம்
    சங்கிதம் என்பது சற்சன வசனம். 21
    5087 சங்கர சிவசிவ மாதே வா
    எங்களை ஆட்கொள வாவா வா. 22
    5088 அரகர சிவசிவ மாதே வா
    அருளமு தம்தர வாவா வா. 23
    5089 நடனசி காமணி நவமணி யே
    திடனக மாமணி சிவமணி யே. 24
    5090 நடமிடும் அம்பல நன்மணி யே
    புடமிடு செம்பல பொன்மணி யே. 25
    5091 உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
    தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே. 26
    5092 நடராஜ வள்ளலை நாடுத லே
    நம்தொழி லாம்விளை யாடுத லே. 27
    5093 அருட்பொது நடமிடு தாண்டவ னே
    அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே. 28
    5094 நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
    நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே. 29
    5095 நடராஜ பலமது நம்பல மே
    நடமாடு வதுதிரு அம்பல மே. 30
    5096 நடராஜர் பாட்டே நறும்பாட்டு
    ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு. 31
    5097 சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
    ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு. 32
    5098 அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு. 33
    5099 அம்பல வாணனை நாடின னே
    அவனடி யாரொடும் கூடின னே. 34
    5100 தம்பத மாம்புகழ் பாடின னே
    தந்தன என்றுகூத் தாடின னே. 35
    5101 நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
    ஞான சிதம்பர நாட்டா ரே. 36
    5102 இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
    என்குரு மேல்ஆணை இட்டே னே. 37
    5103 இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
    என்னப்பன் மேல்ஆணை இட்டே னே. 38
    5104 சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
    சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம். 39
    5105 நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
    நடராஜ ரேசபா நாயக ரே. 40
    5106 நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
    நடராஜ எனில்வரும் நித்திய மே. 41
    5107 நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
    நல்வரம் ஈயும் தயாநிதி யே. 42
    5108 நடராஜர் தம்நடம் நன்னட மே
    நடம்புரி கின்றதும் என்னிட மே. 43
    5109 சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
    திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே. 44
    5110 சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
    சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே. 45
    5111 இறவா வரம்தரு நற்சபை யே
    எனமறை புகழ்வது சிற்சபை யே. 46
    5112 என்இரு கண்ணுள் இருந்தவ னே
    இறவா தருளும் மருந்தவ னே. 47
    5113 சிற்சபை அப்பனை உற்றே னே
    சித்திஎ லாம்செயப் பெற்றே னே. 48
    5114 அம்பல வாணர்தம் அடியவ ரே
    அருளர சாள்மணி முடியவ ரே. 49
    5115 அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
    ஆனந்தத் தெள்ளமு துண்டே னே. 50
    5116 இருட்பெரு மாயையை விண்டே னே
    எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே. 51
    5117 கருணா நிதியே குணநிதி யே
    கதிமா நிதியே கலாநிதி யே. 52
    5118 தருணா பதியே சிவபதி யே
    தனிமா பதியே சபாபதி யே. 53
    5119 கருணா நிதியே சபாபதி யே
    கதிமா நிதியே பசுபதி யே. 54
    5120 சபாபதி பாதம் தபோப்ர சாதம்
    தயாநிதி போதம் சதோதய வேதம். 55
    5121 கருணாம் பரவர கரசிவ பவபவ
    அருணாம் பரதர ஹரஹர சிவசிவ. 56
    5122 கனகா கரபுர ஹரசிர கரதர
    கருணா கரபர சுரவர ஹரஹர. 57
    5123 கனக சபாபதி பசுபதி நவபதி
    அனக உமாபதி அதிபதி சிவபதி. 58
    5124 வேதாந்த பராம்பர ஜயஜய(375)
    நாதாந்த நடாம்பர ஜயஜய. 59
    (375). சவுதய - ஆ. பா. பதிப்பு.
    5125 ஏகாந்த சர்வேச சமோதம
    யோகாந்த நடேச நமோநம. 60
    5126 ஆதாம்பர ஆடக அதிசய
    பாதாம்புஜ நாடக ஜயஜய. 61
    5127 போதாந்த புரேச சிவாகம
    நாதாந்த நடேச நமோநம. 62
    5128 ஜால கோலகன காம்பர சாயக
    கால காலவன காம்பர நாயக. 63
    5129 நாத பாலசு லோசன வர்த்தன
    ஜாத ஜாலவி மோசன நிர்த்தன. 64
    5130 சதபரி சதவுப சதமத விதபவ
    சிதபரி கதபத சிவசிவ சிவசிவ. 65
    5131 அரகர வரசுப கரகர பவபவ
    சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ. 66
    5132 உபல சிரதல சுபகண வங்கண
    சுபல கரதல கணபண கங்கண. 67
    5133 அபயவ ரதகர தலபுரி காரண
    உபயப ரதபத பரபரி பூரண. 68
    5134 அகரஉ கரசுப கரவர சினகர
    தகரவ கரநவ புரசிர தினகர. 69
    5135 வகரசி கரதின கரசசி கரபுர
    மகரஅ கரவர புரஹர ஹரஹர. 70
    5136 பரமமந் திரசக ளாகன கரணா
    படனதந் திரநிக மாகம சரணா. 71
    5137 அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
    அகண்டவே தசிர கரதர பலிதா. 72
    5138 பரிபூரண ஞானசி தம்பர
    பதிகாரண நாதப ரம்பர. 73
    5139 சிவஞானப தாடக நாடக
    சிவபோதப ரோகள கூடக. 74
    5140 சகல லோகபர காரக வாரக
    சபள யோகசர பூரக தாரக. 75
    5141 சத்வ போதக தாரண தன்மய
    சத்ய வேதக பூரண சின்மய. 76
    5142 வரகே சாந்த மகோதய காரிய
    பரபா சாந்த சுகோதய சூரிய. 77
    5143 பளித தீபக சோபித பாதா
    லளித ரூபக ஸ்தாபித நாதா. 78
    5144 அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா
    அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா. 79
    (376). அனுர்த - ச. மு. க. பதிப்பு.
    5145 அம்போ ருகபத அரகர கங்கர
    சம்போ சிவசிவ சிவசிவ சங்கர. 80
    5146 சிதம்பிர காசா பரம்பிர கா சா
    சிதம்ப ரேசா சுயம்பிர கா சா. 81
    5147 அருட்பிர காசம் பரப்பிர காசம்
    அகப்பிர காசம் சிவப்பிர காசம். 82
    5148 நடப்பிர காசம் தவப்பிர காசம்
    நவப்பிர காசம் சிவப்பிர காசம். 83
    5149 நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே
    நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே. 84
    5150 ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
    ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே. 85
    5151 ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
    தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே. 86
    5152 புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
    நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா. 87
    5153 நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
    நடராஜ நடராஜ நடராஜ நிதியே. 88
    5154 நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
    நடராஜ நடராஜ நடராஜ குருவே. 89
    5155 நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
    நடராஜ நடராஜ நடராஜ பலமே. 80

    திருச்சிற்றம்பலம்

    114. சம்போ சங்கர


    சிந்து

    5156. தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
    சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு. 1
    5157 சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
    சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு. 2
    5158 நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
    தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி. 3
    5159 நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி
    நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
    அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி
    அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி. 4
    5160. உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி
    உவப்புறுவேதி நவப்பெருவாதி
    அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி
    அருட்சிவஜோதி அருட்சிவஜோதி. 5
    5161 ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது
    ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
    சூதமலங் காதுவிலங் காதுகலங் காது
    ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. 6
    5162 ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
    ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
    சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
    ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி. 7
    5163 அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
    மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி. 8
    5164 அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
    நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி. 9
    5165 பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
    திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே. 10
    5166 அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
    எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே. 11
    5167 அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
    அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
    தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
    சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா. 12
    5168 எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
    என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
    சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
    சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. 13
    5169 நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
    நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
    தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
    சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர. 14
    5170 பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
    பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
    அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
    அரஅர அரஅர அரஅர அரஅர. 15
    5171 நவநிலை தருவது நவவடி வுறுவது
    நவவெளி நடுவது நவநவ நவமது
    சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ. 16
    5172 சந்திர தரசிர சுந்தர சுரவர
    தந்திர நவபத மந்திர புரநட
    சங்கர சிவசிவ சங்கர சிவசிவ
    சங்கர சிவசிவ சங்கர சிவசிவ. 17
    5173 வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
    வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
    ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண
    நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர. 18
    5174 பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ
    பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
    நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி
    நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர. 19
    5175 பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு
    பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
    சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர
    சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர. 20
    5176 கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
    கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
    சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
    சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். 21
    5177 எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
    இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
    தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
    சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம். 22

    திருச்சிற்றம்பலம்

    115. சிவபோகம்


    சிந்து

    5178. போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
    ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம். 1
    5179 நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
    பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம். 2
    5180 சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
    கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே. 3
    5181 அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
    இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே. 4
    5182 ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
    வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே. 5
    5183 நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
    தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா. 6
    5184 பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
    பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே. 7
    5185 ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
    தூயவாய காயதேய தோயமேய ஜோதியே. 8
    5186 ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
    சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே. 9
    5187 அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
    துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே. 10
    5188 அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
    சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே. 11
    5189 அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
    வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே. 12
    5190 தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
    அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே. 13
    5191 கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
    எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே. 14
    5192 என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
    ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே. 15
    5193 எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
    அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே. 16
    5194 சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
    ஓர்உகார தேரதீர வாரவார தூரனே. 17
    5195 வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
    ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே. 18
    5196 பாசநாச பாபநாச பாததேச ஈசனே
    வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே. 19
    5197 உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
    பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே. 20
    5198 அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
    அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே. 21
    5199 அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
    அபரசபர அமனசமன அமலநிமல சரணமே. 22
    5200 தகரககன நடனகடன சகளவகள சரணமே
    சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே. 23
    5201 அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
    அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே. 24
    5202 தனககனக சபையஅபய சரதவரத சரணமே
    சதுரசதர சகசசரித தருணசரண சரணமே. 25
    5203 உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
    உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே. 26
    5204 இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
    இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே. 27
    5205 அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
    அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே. 28
    5206 ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
    உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே. 29
    5207 அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
    அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே. 30
    5208 எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
    எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே. 31
    (377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
    5209 நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
    நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே. 32
    5210 வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
    மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே. 33
    5211 நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
    நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே. 34
    5212 மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
    வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா. 35
    5213 களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
    களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே. 36
    5214 தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
    தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே. 37
    5215 எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
    அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே. 38
    5216 சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
    சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா. 39
    5217 வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
    வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா. 40

    திருச்சிற்றம்பலம்

    116. அம்பலத்தமுதே


    கலிவிருத்தம்

    5218. நீடிய வேதம் தேடிய பாதம்
    நேடிய கீதம் பாடிய பாதம்
    ஆடிய போதம் கூடிய பாதம்
    ஆடிய பாதம் ஆடிய பாதம். 1
    5219 சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
    தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
    சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
    தூக்கிய பாதம் தூக்கிய பாதம். 2
    5220 ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
    ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
    ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
    ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம். 3
    5221 சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
    தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
    கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
    குஞ்சித பாதம் குஞ்சித பாதம். 4
    5222 எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
    எண்ணிய வாறே நண்ணிய பேறே
    புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
    புண்ணிய வானே புண்ணிய வானே. 5
    5223 தொத்திய சீரே பொத்திய பேரே
    துத்திய பாவே பத்திய நாவே
    சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
    சத்திய வானே சத்திய வானே. 6
    5224 எம்புலப் பகையே எம்புலத் துறவே
    எம்குலத் தவமே எம்குலச் சிவமே
    அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
    அம்பலத் தரசே அம்பலத் தரசே. 7
    5225 இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
    எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
    அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
    அம்பலத் தமுதே அம்பலத் தமுதே. 1

    திருச்சிற்றம்பலம்

    117. திருநட மணியே


    தாழிசை

    5226. பசியாத அமுதே பகையாத பதியே
    பகராத நிலையே பறையாத சுகமே
    நசியாத பொருளே நலியாத உறவே
    நடராஜ மணியே நடராஜ மணியே. 1
    5227 புரையாத மணியே புகலாத நிலையே
    புகையாத கனலே புதையாத பொருளே
    நரையாத வரமே நடியாத நடமே
    நடராஜ நிதியே நடராஜ நிதியே. 2
    5228 சிவஞான நிலையே சிவயோக நிறைவே
    சிவபோக உருவே சிவமான உணர்வே
    நவநீத மதியே நவநாத கதியே
    நடராஜ பதியே நடராஜ பதியே. 3
    5229 தவயோக பலமே சிவஞான நிலமே
    தலையேறும் அணியே விலையேறு மணியே
    நவவார நடமே சுவகார புடமே
    நடராஜ பரமே நடராஜ பரமே. 4
    5230 துதிவேத உறவே சுகபோத நறவே
    துனிதீரும் இடமே தனிஞான நடமே
    நதியார நிதியே அதிகார பதியே
    நடராஜ குருவே நடராஜ குருவே. 5
    5231 வயமான வரமே வியமான பரமே
    மனமோன நிலையே கனஞான மலையே
    நயமான உரையே நடுவான வரையே
    நடராஜ துரையே நடராஜ துரையே. 6
    5232 பதியுறு பொருளே பொருளுறு பயனே
    பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
    மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
    மறைமுடி மணியே மறைமுடி மணியே. 7
    5233 அருளுறு வெளியே வெளியுறு பொருளே
    அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
    மருளறு தெருளே தெருளுறு மொளியே
    மறைமுடி மணியே மறைமுடி மணியே. 8
    5234 தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே
    தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
    திருவளர் உருவே உருவளர் உயிரே
    திருநட மணியே திருநட மணியே. 9
    5235 உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
    ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
    செயிரறு பதியே சிவநிறை நிதியே
    திருநட மணியே திருநட மணியே. 10
    5236 கலைநிறை மதியே மதிநிறை அமுதே
    கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
    சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
    திருநட மணியே திருநட மணியே. 11
    5237 மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
    விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
    திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
    திருநட மணியே திருநட மணியே. 12
    5238 இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
    இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
    செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
    திருநட மணியே திருநட மணியே. 13
    5239 புரையறு புகழே புகழ்பெறு பொருளே
    பொருளது முடிபே முடிவுறு புணர்வே
    திரையறு கடலே கடலெழு சுதையே
    திருநட மணியே திருநட மணியே. 14
    5240 நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே
    நிறையருள் நிதியே நிதிதரு பதியே
    திகழ்சிவ பதமே சிவபத சுகமே
    திருநட மணியே திருநட மணியே. 10

    திருச்சிற்றம்பலம்

    118. ஞான சபாபதியே


    தாழிசை

    5241. வேத சிகாமணியே போத சுகோதயமே
    மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
    நாத பராபரமே சூத பராவமுதே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 1
    5242 ஏக சதாசிவமே யோக சுகாகரமே
    ஏம பராநலமே காம விமோசனமே
    நாக விகாசனமே நாத சுகோடணமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 2
    5243 தூய சதாகதியே நேய சதாசிவமே
    சோம சிகாமணியே வாம உமாபதியே
    ஞாய பராகரமே காய புராதரமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 3
    5244 ஆரண ஞாபகமே பூரண சோபனமே
    ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
    நாரண னாதரமே காரண மேபரமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 4
    5245 ஆகம போதகமே யாதர வேதகமே
    ஆமய மோசனமே ஆரமு தாகரமே
    நாக நடோ தயமே நாத புரோதயமே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 5
    5246 ஆடக நீடொளியே நேடக நாடளியே
    ஆதி புராதனனே வேதி பராபரனே
    நாடக நாயகனே நானவ னானவனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 6
    5247 ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
    ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
    நாரிய னேவரனே நாடிய னேபரனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 7
    5248 ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
    ஆரணி பாதியனே ஆதர வாதியனே
    நாத விபூதியனே நாம வனாதியனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 8
    5249 தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
    தீன சகாநிதியே சேகர மாநிதியே
    நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 9
    5250 ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
    ஆகம மேலவனே ஆரண நாலவனே
    நாடிய காரணனே நீடிய பூரணனே
    ஞான சபாபதியே ஞான சபாபதியே. 10

    திருச்சிற்றம்பலம்

    119. விரைசேர் சடையாய்


    சிந்து

    5251. விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
    விகிர்தா விபவா விமலா அமலா
    வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே. 1
    (378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
    5252 அரைசே குருவே அமுதே சிவமே
    அணியே மணியே அருளே பொருளே
    அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. 2
    5253 உருவே உயிரே உணர்வே உறவே
    உரையே பொருளே ஒளியே வெளியே
    ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே. 3
    (379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
    5254 அருவே திருவே அறிவே செறிவே
    அதுவே இதுவே அடியே முடியே
    அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. 4

    திருச்சிற்றம்பலம்

    120. ஜோதி ஜோதி


    சிந்து

    5255. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
    ஜோதி ஜோதி ஜோதி யருட்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம். 1
    5256 வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
    மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
    ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
    ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி. 2
    5257 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. 3

    திருச்சிற்றம்பலம்

    121. கண்புருவப் பூட்டு


    தாழிசை

    5258. கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
    கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
    ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
    ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு. 1
    5259 சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
    தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
    இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு. 2
    5260 ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
    ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
    எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
    என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. 3
    5261 ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
    ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
    தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
    தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம். 4
    5262 மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
    மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
    சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
    செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி. 5
    5263 துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
    தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
    தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
    செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு. 6
    5264 சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
    தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
    எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
    இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது. 7
    5265 சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
    சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
    இற்பகரும்(380) இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
    என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. 8
    (380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.
    5266 வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
    மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
    வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
    மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு. 9
    5267 அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
    அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
    வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
    வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம். 10
    5268 நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
    நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
    சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
    செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு. 11

    122. ஊதூது சங்கே


    தாழிசை

    5269. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
    கனக சபையான்என்று ஊதூது சங்கே
    பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
    பூசைப லித்ததென்று ஊதூது சங்கே. 1
    5270 தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
    துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
    ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
    ஏம சபையான்என்று ஊதூது சங்கே. 2
    5271 பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
    பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
    இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
    என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே. 3
    5272 அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
    அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
    இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
    இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே. 4
    5273 என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
    இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
    பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
    பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே. 5
    5274 சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
    சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
    நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
    நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே. 6
    5275 நாத முடியான்என்று ஊதூது சங்கே
    ஞானசபையான்என்று ஊதூது சங்கே
    பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
    பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே. 7
    5276 தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
    சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
    உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
    உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே. 8
    5277 என்னறி வானான்என்று ஊதூது சங்கே
    எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
    செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
    சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே. 9
    5278 இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
    எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
    திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
    சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே. 10
    5279 கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
    கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
    இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
    எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே. 11
    5280 எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
    எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
    எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
    எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே. 12
    5281 கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
    கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
    அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
    அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே. 13
    5282 தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
    தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
    பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
    பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே. 14
    5283 ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
    அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
    தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
    தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே. 15
    5284 பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
    புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
    மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
    மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே. 16
    திருச்சிற்றம்பலம்

    123. சின்னம் பிடி


    தாழிசை

    5285. அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
    அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
    செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
    சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி. 1
    5286 சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி
    சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
    பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
    புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி. 2
    5287 ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
    நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
    ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
    அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி. 3
    5288 கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி
    கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
    அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி
    அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி. 4
    5289 அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
    அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
    செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
    சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி. 5
    5290 தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
    சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
    ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
    ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி. 6
    5291 வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
    வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
    சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
    சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி. 7
    5292 மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
    வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
    வேதாக மம்கடந்து சின்னம் பிடி
    வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி. 8
    5293 பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
    பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
    சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
    சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி. 9
    5294 சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
    செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
    இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
    இதுவே தருணம்என்று சின்னம் பிடி. 10

    திருச்சிற்றம்பலம்

    124. முரசறைதல்


    தாழிசை

    5295. அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
    அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
    மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
    மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு. 1

    திருச்சிற்றம்பலம்

    125. தனித் திருஅலங்கல் (381)



    (381) இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள். ஆறாந்
    திருமுறைக் காலத்தில் பல சமயங் களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில் இவை தனிப் பாடல்கள்
    என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில் உள்ளன. ஆ. பா. இவற்றைத்
    தனித்திருஅலங்கல்,< ா௉஢௲ா஢௕௲ ஦ா஡ந஼, ா௉஢௲ா஢௕ ு஡ந௄ ற௉ ௣௽௚
    கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை, முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளார்.
    இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள் வரிசையில் முன் பின்னாக அமைக்கப் பெற்று
    இவண் வைக்கப்பட்டுள்ளன.

    ஆன்மநேய ஒருமைப்பாடு (382)

    (382). இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    திருச்சிற்றம்பலம்
    5296. எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
    கரிக்கின்றார் யாவர் அந்தச்
    செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
    செயல்எனவே தெரிந்தேன் இங்கே
    கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
    தமக்கேவல் களிப்பால் செய்ய
    ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
    வாய்மிகவும் ஊர்வ தாலோ. 1
    5297 எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
    தம்உயிர்போல் எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவர்அவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம்எனநான் தெரிந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
    சிந்தைமிக விழைந்த தாலோ. 2
    5298 கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
    தம்உயிர்போல் கண்டு ஞானத்
    தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
    பெருநீதி செலுத்தா நின்ற
    பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
    திருவாயால் புகன்ற வார்த்தை
    அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
    வார்த்தைகள்என் றறைவ ராலோ. 1
    சாலையப்பனை வேண்டல்

    கொச்சகக் கலிப்பா
    5299 மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
    தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
    முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
    பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே. 1
    கட்டளைக் கலித்துறை
    5300 ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
    பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
    பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
    சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. 5
    5301 அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி
    கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
    ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
    துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே. 6
    5302 வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
    சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
    மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
    சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே. 7
    5303 மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
    உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
    அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
    கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே. 8
    5304 எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
    செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
    திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
    சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே. 9
    5305 ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
    திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
    வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
    கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே. 1
    மாயை நீக்கம்

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5306 அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
    பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
    மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
    இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. 11
    5307 மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
    தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
    கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
    ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே. 12
    5308 தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
    சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
    வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
    இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே. 13
    சிதம்பரேசன் அருள்

    கலி விருத்தம்
    5309 சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
    முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
    தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
    மற்றவும் வழங்குக வரதனே என்றேன். 14
    5310 என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
    இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
    நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
    வென்றியும் அளித்தனம் என்று மேவினான். 15
    5311 மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
    ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
    பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
    தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே. 16
    போற்றிச் சந்த விருத்தம்

    சந்த விருத்தம்
    5312 போற்றி நின்அருள் போற்றி நின்பொது
    போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
    போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
    போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
    போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
    போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
    போற்றி நின்முடி போற்றி நின்நடு
    போற்றி நின்அடி போற்றி போற்றியே. 17
    5313 போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
    போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
    போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
    போற்றி நின்வரம் போற்றி நின்கதி
    போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
    போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
    போற்றி நின்தயை போற்றி நின்கொடை
    போற்றி நின்பதம் போற்றி போற்றியே. 18
    5314 போற்று கின்றஎன் புன்மை யாவையும்
    பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
    ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
    கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
    காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
    காணக் காட்டிய கருத்த போற்றிவன்
    கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
    கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே. 19
    பாடமும் படிப்பும்

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5315 அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
    அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
    உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
    ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
    நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
    நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
    பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. 20
    5316 கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
    கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
    தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
    செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
    அள்ளக் குறையா வள்ளற் பொருளை
    அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
    பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. 21
    5317 காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
    கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
    வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
    வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
    ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
    ஐயர் திருவடிக் கானந்த மாகப்
    பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
    படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே. 22
    பாட்டும் திருத்தமும்

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5318 தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
    கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
    வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். 23
    5319 ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
    ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
    பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
    யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய். 24
    அம்பலத்தரசே அபயம்

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5320 பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
    புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
    தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
    செல்வமே நான்பெற்ற சிறப்பே
    மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
    வாழ்வித்த என்பெரு வாழ்வே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம். 25
    5321 பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
    புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
    தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
    தேடியும் காண்கிலாச் சிவமே
    மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
    வள்ளலே தெள்ளிய அமுதே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம். 26
    5322 பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
    புகன்றபோ தாந்த நாதாந்தம்
    தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
    தத்தினும் தித்திக்கும் தேனே
    மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
    மாபெருங் கருணையா ரமுதே
    அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
    அம்மையே அப்பனே அபயம். 27
    அருட்பெருஞ்சோதி அபயம்

    நேரிசை வெண்பா
    5323 அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
    அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
    சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
    சோதி அபயம் துணை. 28
    5324 துணைவா அபயம் துயர்அகல என்பால்
    அணைவா அபயம் அபயம் - பணைவாய்
    வடலா அபயம் வரதா அபயம்
    நடநாய காஅபயம் நான். 29
    5325 நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
    தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
    மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
    ஐயா அபயமப யம். 30
    5326 அபயம் பதியே அபயம் பரமே
    அபயம் சிவமே அபயம் - உபய
    பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
    விதத்தில் கருணை விளை. 31
    5327 கருணா நிதியே அபயம் கனிந்த
    அருணா டகனே அபயம் - மருணாடும்
    உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
    பொள்ளற் பிழைகள் பொறுத்து. 32
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5328 இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
    இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
    கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
    கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
    பிணக்கறிவீர் புரட்டறிவீர்(383) பிழைசெயவே அறிவீர்
    பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
    மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
    வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே. 33
    (383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
    5329 உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
    ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
    கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
    கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
    வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
    வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
    குழக்கறியே(384) பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
    குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே. 34
    (384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5330 உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும்
    பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
    துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும்
    ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
    பிணிக்கும் பீடைக்கும் உடலுளம்
    கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
    பணிக்கும் வேலைசெய் துண்டுடுத்
    தம்பலம் பரவுதற் கிசையீரே. 35
    5331 மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி
    இருபிடிஊண் வழங்கில் இங்கே
    உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங்
    கவற்றைஎலாம் ஓகோ பேயின்
    விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும்
    மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
    இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும்
    கொடுத்திழப்பர் என்னே என்னே. 36
    5332 கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க
    எனக்கழறிக் களிக்கா நின்ற
    சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும்
    கணச்சுகமே சொல்லக் கேண்மின்
    முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால்
    சாவதற்கு முன்னே நீவீர்
    இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ
    எமையும்இவ்வா றிடுகஎன்றே. 37
    5333 மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப்
    பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
    விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு
    கிடந்தழுது விளைவிற் கேற்பக்
    கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை
    மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
    துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா
    மணித்தேவைத் துதியார் அன்றே. 38
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5334 சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
    சிறியவர் சிந்தைமாத் திரமோ
    பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
    புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
    கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
    கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
    எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
    இனிப்பிலே புகுகின்ற திலையே. 39
    கலிநிலைத்துறை
    5335 பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
    ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
    தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
    ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே. 40
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5336 நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
    நான்செயத் தக்கதே தென்பாள்
    செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
    தெய்வமே தெய்வமே என்பாள்
    வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
    விருப்பிலர் என்மிசை என்பாள்
    வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
    வருந்துவாள் நான்பெற்ற மகளே. 41
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5337 நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
    நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
    வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
    வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
    காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
    களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
    ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
    எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே. 42
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 33
    5338. அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற
    அரசேநின் அடிமேல் ஆணை
    என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத்
    திடமுடியா திதுகால் தொட்டுப்
    பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு
    நீதானே புரத்தல் வேண்டும்
    உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும்
    மாஇருக்க ஒண்ணா தண்ணா. 43
    5339. முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே
    உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
    இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில்
    இலைஅதனால் எல்லாம் வல்லோய்
    அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய்
    அருட்சோதி அளித்துக் காத்தல்
    உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா
    டுண்டோ நீ உரைப்பாய் அப்பா. 44
    5340. உன்ஆணை உன்னைவிட உற்றதுணை
    வேறிலைஎன் உடையாய் அந்தோ
    என்நாணைக் காத்தருளி இத்தினமே
    அருட்சோதி ஈதல் வேண்டும்
    அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த
    பெருங்கருணை அரசே என்னை
    முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த
    இந்நாள்என் மொழிந்தி டாதே. 45
    5341. தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்
    தெனைஆண்ட துரையே என்னை
    நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட
    பதியேகால் நீட்டிப் பின்னே
    வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும்
    தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
    தாங்காதே இதுநினது தனித்ததிரு
    வுளமறிந்த சரிதம் தானே. 46
    5342. இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட்
    டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
    சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம்
    தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
    பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள்
    எங்குளர்காண் பதியே என்னை
    வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்
    பிள்ளைஎன மதித்தி டாயே. 47
    5343. சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர்
    பலபுகலத் தினந்தோ றுந்தான்
    உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப்
    பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
    தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற்
    றிடஅழியாத் தேகன் ஆகப்
    பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப்
    புரிகஎனைப் பெற்ற தேவே. 48
    கலிநிலைத்துறை
    5344 அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
    இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
    எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
    செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ. 49
    5345 ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
    சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
    காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
    தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ. 50
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5346 உடைய நாயகன் பிள்ளைநான்
    ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
    அடைய நான்அருட் சோதிபெற்
    றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
    மிடைய அற்புதப் பெருஞ்செயல்
    நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
    தடைய தற்றநல் தருணம்இத்
    தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே. 51
    5347 கோது கொடுத்த மனச்சிறியேன்
    குற்றம் குணமாக் கொண்டேஇப்
    போது கொடுத்த நின்அருளாம்
    பொருளை நினைக்கும் போதெல்லாம்
    தாது கொடுத்த பெருங்களிப்பும்
    சாலா தென்றால் சாமிநினக்
    கேது கொடுப்பேன் கேட்பதன்முன்
    எல்லாம் கொடுக்க வல்லாயே. 52
    5348 கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும்
    அன்பரெலாம் காணக் காட்டும்
    என்றுடைய நாயகனே எல்லாஞ்செய்
    வல்லவனே இலங்குஞ் சோதி
    மன்றுடைய மணவாளா மன்னவனே
    என்னிருகண் மணியே நின்னை
    அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல்
    ஆணைஉன்மேல் ஆணை ஐயா. 53
    5349 திருநி லைத்துநல் அருளொடும்
    அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
    உருநி லைத்திவண் மகிழ்வொடு
    வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
    இருநி லத்தவர் இன்புறத்
    திருவருள் இயல்வடி வொடுமன்றில்
    குருநி லைத்தசற் குருஎனும்
    இறைவநின் குரைகழற் பதம்போற்றி. 54
    5350 குற்றம் புரிதல் எனக்கியல்பே
    குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
    சிற்றம் பலவா இனிச்சிறியேன்
    செப்பும் முகமன் யாதுளது
    தெற்றென் றடியேன் சிந்தைதனைத்
    தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
    இற்றைப் பொழுதே அருட்சோதி
    ஈக தருணம் இதுவாமே. 55
    5351 அருளா ரமுதே என்னுடைய
    அன்பே என்றன் அறிவேஎன்
    பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப்
    புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
    தெருளாம் ஒளியே வெளியாகச்
    சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
    இருளா யினஎல் லாம்தவிர்த்தென்
    எண்ணம் முடிப்பாய் இப்போதே. 56
    5352 மந்திரம் அறியேன் மற்றை
    மணிமருந் தறியேன் வேறு
    தந்திரம் அறியேன் எந்தத்
    தகவுகொண் டடைவேன் எந்தாய்
    இந்திரன் முதலாம் தேவர்
    இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
    சந்திரன் ஆட இன்பத்
    தனிநடம் புரியும் தேவே. 57
    5353. கருணைக் கடலே அதில்எழுந்த
    கருணை அமுதே கனியமுதில்
    தருணச் சுவையே சுவைஅனைத்தும்
    சார்ந்த பதமே தற்பதமே
    பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம்
    பொதுவில் நடிக்கும் பரம்பரமே
    தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும்
    சித்தி நிலைகள் தெரித்தருளே. 58
    5354. கலக்கம் அற்றுநான் நின்றனைப்
    பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
    இலக்கம் உற்றறிந் திடஅருள்
    புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
    துலக்க முற்றசிற் றம்பலத்
    தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
    அலக்கண் அற்றிடத் திருவருள்
    புரியும்என் அப்பனே அடியேற்கே. 59
    கட்டளைக் கலிப்பா
    5355 பண்டு நின்திருப் பாதம லரையே
    பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
    தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
    துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
    குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
    குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
    கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
    குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே. 60
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5356 கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
    கருணைமா மழைபொழி முகிலே
    விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
    மேவிய மெய்ம்மையே மன்றுள்
    எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
    இன்றுநீ ஏழையேன் மனத்துப்
    புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
    புகுந்தென துளங்கலந் தருளே. 61
    5357 அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
    அன்றுவந் தாண்டனை அதனால்
    துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
    சொல்லினேன் சொல்லிய நானே
    இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
    எனைஉல கவமதித் திடில்என்
    என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
    எய்துக விரைந்தென திடத்தே. 62
    கட்டளைக் கலித்துறை
    5358 வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
    தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
    ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
    நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே. 63
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5359 செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
    தேவரும் முனிவரும் பிறரும்
    இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
    எந்தைநின் திருவருள் திறத்தை
    எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
    என்தரத் தியலுவ தேயோ
    ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
    உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே. 64
    5360 உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
    உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
    திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
    சிவபதத் தலைவநின் இயலைப்
    புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
    புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
    கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
    குருஎனக் கூறல்என் குறிப்பே. 65
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5361 அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
    அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
    டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
    ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
    மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
    மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
    செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
    திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே. 66
    5362 கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
    கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
    தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
    தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
    எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
    என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
    அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
    அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே. 67
    5363 என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
    எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
    நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
    நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
    தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
    சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
    பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
    பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே. 68
    5364 இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
    இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
    அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
    அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
    விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
    மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
    பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
    படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே. 69
    5365 தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
    தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
    ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
    உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
    இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
    இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
    அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
    அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே. 70
    5366 வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
    வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
    தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
    தந்தை நீதரல் சத்தியம் என்றே
    குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
    குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
    திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
    செய்க வாழ்கநின் திருவருட் புகழே. . 71
    5367 வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
    மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
    எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
    எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
    தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
    செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
    நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
    நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே. . 72
    குறட்டாழிசை.
    5368 அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
    இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
    மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
    அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். . 73
    நேரிசை வெண்பா.
    5369 இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
    பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
    சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
    அன்னியனே அல்லேன் அறிந்து. . 74
    கலித்துறை.
    5370 ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
    நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
    ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
    சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. . 75
    கட்டளைக் கலித்துறை.
    5371 போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
    தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
    மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
    கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. . 76
    5372 அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
    அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
    அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
    அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. . 77
    5373 மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
    யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
    போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
    சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. . 78
    தரவு கொச்சகக் கலிப்பா.
    5374 ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
    சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
    நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
    ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. . 79
    5375 அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
    ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
    வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
    இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. . 80
    5376 கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
    றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
    அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
    துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே. 81
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5377. மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய்
    திருத்தாளை வழுத்தல் இன்று
    பதிக்களவா நலந்தருவல் என்றுநினை
    ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
    விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங்
    கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
    பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக்
    களவென்பார் போன்றாய் அன்றே. 82
    5378. ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார்
    யாவரிங்கே அவர்க்கே இன்பம்
    கூடியதென் றாரணமும் ஆகமமும்
    ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
    ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென்
    பற்பலவாய் உன்னேல் இன்னே
    பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய்
    இன்புகலப் படிகண் டாயே. 83
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5379 ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
    வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
    நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
    நாதனைக் கண்டவன் நடிக்கும்
    மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
    மருந்துகண் டுற்றது வடிவாய்
    நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
    நெஞ்சமே அஞ்சலை நீயே. 84
    5380 கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
    கருணையங் கண்ணது ஞான
    நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
    நின்றது நிறைபெருஞ் சோதி
    மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
    வயங்குவ தின்பமே மயமாய்த்
    தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
    தனித்தெனக் கினித்ததோர் கனியே. 85
    5381 மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது
    வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
    அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா
    ஐயனே அன்பனே அரசே
    என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்
    எட்டுணை எனினும்வே றிடத்தில்
    சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்
    திருவுளம் தெரிந்தது தானே. 86
    5382 உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
    உறுபசி உழந்துவெந் துயரால்
    வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
    மற்றிதை நினைத்திடுந் தோறும்
    எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
    எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
    கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
    குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய். 87
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5383. ஐவகைத் தொழிலும் என்பால்
    அளித்தனை அதுகொண் டிந்நாள்
    செய்வகை தெரிவித் தென்னைச்
    சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
    பொய்வகை அறியேன் வேறு
    புகலிலேன் பொதுவே நின்று
    மெய்வகை உரைத்தேன் இந்த
    விண்ணப்பம் காண்க நீயே. 88
    5384. உருவ ராகியும் அருவின
    ராகியும் உருஅரு வினராயும்
    ஒருவ ரேஉளார் கடவுள்கண்
    டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
    இருவ ராம்என்றும் மூவரே
    யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
    எருவ ராய்உரைத் துழல்வதென்
    உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே. 89
    கட்டளைக் கலித்துறை
    5385 சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
    தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
    காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
    நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே. 90
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5386 வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
    வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
    கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
    கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
    பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
    பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
    விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
    வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே. 91
    5387 கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
    வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
    மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
    முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
    முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே. 92
    நிலைமண்டில ஆசிரியப்பா
    5388 சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
    திருநடம் புரியும் திருநட ராஜ
    எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
    மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே. 93
    5389 நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
    யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
    என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
    அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே. 94 94
    நேரிசை வெண்பா
    5390 உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
    வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
    சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
    இத்தருணம் சத்தியமே என்று. 95
    5391 உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
    இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
    நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
    தானே எனக்குத் தனித்து. 96
    5392 தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
    மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
    இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
    தன்னையுந்தந் துட்கலந்தான் றான். 97
    5393 சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
    கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
    இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
    இனியான் மயங்கேன் இருந்து. 98
    5394 உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
    என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
    வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
    குண்மைஇன்பம் செய்தும் உவந்து. 99
    கட்டளைக் கலித்துறை
    5395 நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
    பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
    மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
    பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே. 100
    5396 அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
    துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
    வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே
    உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே. 101
    5397 நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
    வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
    ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
    கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே. 102
    5398 பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
    டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
    தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
    நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே. 103
    5399 அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
    அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
    அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
    அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே. 104
    கலிவிருத்தம்
    5400 அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
    மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
    இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
    தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே. 105
    5401 ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
    சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
    மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
    மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே. 106
    5402 பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
    சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
    நித்திய மாகியே நிகழும் என்பது
    சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே. 107
    கொச்சகக் கலிப்பா
    5403 வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
    தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
    தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
    யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ. 108
    5404 ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
    ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
    தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
    நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ. 109
    5405 என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
    முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
    நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்(385) மேவுபசும்
    பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய். 110
    (385). வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
    5406 என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
    நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
    பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
    தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே. 111
    5407 ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
    தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
    வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
    பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே. 112
    5408 நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
    ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
    நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
    கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே. 113
    5409 எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
    எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
    எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
    எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே. 114
    5410 நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
    தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
    வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
    கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே. 115
    கட்டளைக் கலித்துறை
    5411 எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
    வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
    நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
    கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே. 116
    5412 முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே. 117
    5413 கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
    கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
    துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
    விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே. 118
    5414 கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
    பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
    விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
    தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே. 119
    5415 தாழைப் பழம்பிழி(386) பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
    வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
    மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
    ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே. 120
    (386). தாழைப்பழம் - தேங்காய்.
    5416 தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
    வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
    அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
    என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே. 121
    5417 செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
    ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
    சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
    இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே. 122
    கலிநிலைத்துறை
    5418 கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
    தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
    அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
    பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே. 123
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5419 முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
    முன்னர்நீ தோன்றினை அந்தோ
    அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
    அப்பனே அய்யனே அரசே
    இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
    என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
    எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
    கெய்துதற் குரியமெய்த் தவமே. 124
    5420 வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
    மலத்திலே கிடந்துழைத் திட்ட
    நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
    நன்றுறச் சூட்டினை அந்தோ
    தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
    சோதியே நின்பெருந் தயவைத்
    தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
    தயவும்உன் தனிப்பெருந் தயவே. 125
    5421 பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
    பெருமநின் தன்னைஎன் றனக்கே
    சாருறு தாயே என்றுரைப் பேனோ
    தந்தையே என்றுரைப் பேனோ
    சீருறு குருவே என்றுரைப் பேனோ
    தெய்வமே என்றுரைப் பேனோ
    யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
    யாதுமொன் றறிந்திலேன் அந்தோ. 126
    5422 சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
    தீமன மாயையைக் கணத்தே
    வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
    மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
    உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
    உற்றசா றட்டசர்க் கரையும்
    நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
    ஞானமன் றோங்கும்என் நட்பே. 127
    5423 புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
    பொய்ம்மன மாயையைக் கணத்தே
    மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
    மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
    வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
    வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
    சொல்லிய பதியே மிகுதயா நிதியே
    தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே. 128
    5424 அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
    இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
    என்னையோ என்னையோ என்றாள்
    திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
    திருவுரு அடைந்தனன் ஞான
    மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
    வாய்த்தன வாய்ப்பின்என் றாளே. 129
    5425 இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
    என்உயிர்க் கமுதமே என்தன்
    அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
    அருள்நடம் புரியும்என் அரசே
    வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
    மடிந்தன விடிந்ததால் இரவும்
    துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
    சூழலில் துலங்குகின் றேனே. 130
    5426 உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
    ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
    செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
    சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
    மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
    மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
    பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
    பாடுகின் றேன்பொதுப் பாட்டே. 131
    5427 படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
    பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
    பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
    பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
    வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
    வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
    நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
    நண்ணிய பொருளும்என் றறிந்தேன். 132
    5428 கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
    கடவுளே என்இரு கண்ணே
    நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
    நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
    புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
    பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
    சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
    திருவருட் பெருந்திறல் பெரிதே. 133
    5429 தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
    தனிமுதல் பேரருட் சோதிப்
    பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
    பராபர நிராமய நிமல
    உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
    உளத்ததி சயித்திட எனக்கே
    வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
    மாகடற் கெல்லைகண் டிலனே. 134
    5430 யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
    என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
    ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
    ஒளிஉருக் காட்டிய தலைவா
    ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
    என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
    ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே. 135
    5431 பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
    பரம்பரம் தருகின்ற தென்றோர்
    தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
    தமியனேன் உண்டனன் அதன்தன்
    இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
    என்னுயிர் இனித்ததென் கரணம்
    சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
    தனித்தனி இனித்தன தழைத்தே. 136
    5432 விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
    விளைந்தது விளைந்தது மனனே
    கண்ணெலாம் களிக்கக் காணலாம்
    பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
    எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
    ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
    உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
    ஓங்கலாம் ஓங்கலாம் இனியே. 137
    5433 வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
    வாரியைக் கண்டனம் மனமே
    அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
    ஆடலாம் அடிக்கடி வியந்தே
    உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
    ஓங்கலாம் உதவலாம் உறலாம்
    கள்எலாம் உண்ட வண்டென இன்பம்
    காணலாம் களிக்கலாம் இனியே. 138
    5434. சனிதொ லைந்தது தடைத விர்ந்தது
    தயைமி குந்தது சலமொடே
    துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது
    சுபமி குந்தது சுகமொடே
    கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது
    களிமி குந்தது கனிவொடே
    புனித மன்றிறை நடம லிந்தது
    புகழ்உ யர்ந்தது புவியிலே. 139
    5435, உரையும் உற்றது ஒளியும் உற்றது
    உணர்வும் உற்றது உண்மையே
    பரையும் உற்றது பதியும் உற்றது
    பதமும் உற்றது பற்றியே
    புரையும் அற்றது குறையும் அற்றது
    புலையும் அற்றது புன்மைசேர்
    திரையும் அற்றது நரையும் அற்றது
    திரையும் அற்றுவி ழுந்ததே. 140
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5436 அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
    ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
    உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
    ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
    எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
    என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
    செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
    சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே. 141
    5437 அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
    அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
    துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே
    சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
    பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
    போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
    படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
    பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே. 142
    5438 அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
    அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
    வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
    வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
    இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
    இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
    என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
    எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே. 143
    5439 கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
    கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
    துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
    தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
    விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
    வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
    அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
    அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே. 144
    5440 ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
    உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
    ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
    இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
    ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
    தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
    ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
    உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே. 145
    5441 சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
    துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
    வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
    விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
    செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
    தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
    ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான்
    உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே. 146
    5442 தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
    என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
    எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
    இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
    மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
    வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
    அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
    அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின். 147
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5443 என்உடலும் என்உயிரும் என்பொருளும்
    நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
    உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே
    றொன்றும்இலை உடையாய் இங்கே
    புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்
    போதாமல் புணர்ந்து கொண்டே
    தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்
    கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ. 148
    5444 என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி
    சயந்தன்னை எம்ம னோர்காள்
    பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம்
    புரிகின்ற புனிதன் என்னுள்
    மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்
    விளங்குகின்றான் மெய்ம்மை யான
    தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்
    தருள்கின்றான் சகத்தின் மீதே. 149
    5445 ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
    மாளாத ஆக்கை பெற்றேன்
    கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
    நடுவிருந்து குலாவு கின்றேன்
    பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
    அன்பினொடும் பாடிப் பாடி
    நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
    எண்ணமெலாம் நிரம்பி னேனே. 150
    5446 ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
    அருள்ஒளி தருகின்றாம்
    கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
    குறிக்கொள்வர் நினக்கேஎம்
    ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
    வாழ்கநீ மகனேஎன்
    றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
    இணைமலர்ப் பதம்போற்றி. 151
    கட்டளைக் கலிப்பா
    5447 நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
    நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
    வாய்க்கு வந்த படிபல பேசவே
    மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
    தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
    தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
    சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
    திகழக் கட்டினை என்னைநின் செய்கையே. 152
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5448 தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
    தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
    பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
    புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
    என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
    இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
    நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
    நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே. 153
    5449 கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
    கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
    அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
    அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
    உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
    உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
    இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
    இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே. 154
    5450 காற்றாலே புவியாலே ககனமத னாலே
    கனலாலே புனலாலே கதிராதி யாலே
    கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
    கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
    வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
    மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
    ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
    எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. 155
    5451 எல்லா உலகமும் என்வசம் ஆயின
    எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
    எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
    எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
    எல்லா போகமும் என்போகம் ஆயின
    எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
    எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
    எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே. 156
    5452 சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
    தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
    என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
    எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
    புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
    புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
    தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
    தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே. 157
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    5453 ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
    அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
    நீதியில் கலந்து நிறைந்தது நானும்
    நித்தியன் ஆயினேன் உலகீர்
    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
    விளம்பினேன் வம்மினோ விரைந்தே. 158
    5454 வாது பேசிய மனிதர் காள்ஒரு
    வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
    போது போவதன் முன்ன ரேஅருட்
    பொதுவி லேநடம் போற்றுவீர்
    தீது பேசினீர் என்றி டாதுமைத்
    திருவு ளங்கொளும் காண்மினோ
    சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
    சுற்றம் என்பது பற்றியே. 159
    5455 தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
    தொலைந்தன தொலைந்தன எனைவிட்
    டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
    இரிந்தன ஒழிந்தன முழுதும்
    ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
    அழிவுறா உடம்பும்மெய் இன்ப
    ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
    உண்மைஇவ் வாசகம் உணர்மின். 160
    கலிப்பா
    5456 பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
    இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
    அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
    நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே. 161

    திருச்சிற்றம்பலம்

    126. சிற்சத்தி துதி


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5457. சோதிக் கொடியே ஆனந்த
    சொருபக் கொடியே சோதிஉருப்
    பாதிக் கொடியே சோதிவலப்
    பாகக் கொடியே(387) எனைஈன்ற
    ஆதிக் கொடியே உலகுகட்டி
    ஆளுங் கொடியே சன்மார்க்க
    நீதிக் கொடியே சிவகாம
    நிமலக் கொடியே அருளுகவே. 1
    (387). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.
    5458. பொருணற் கொடியே மாற்றுயர்ந்த
    பொன்னங் கொடியே போதாந்த
    வருணக் கொடியே எல்லாஞ்செய்
    வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
    தருணக் கொடியே என்தன்னைக்
    தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
    கருணைக் கொடியே ஞானசிவ
    காமக் கொடியே அருளுகவே. 2
    5459. நீட்டுக் கொடியே சன்மார்க்க
    நீதிக் கொடியே சிவகீதப்
    பாட்டுக் கொடியே இறைவர்வலப்
    பாகக் கொடியே(388) பரநாத
    நாட்டுக் கொடியே எனைஈன்ற
    ஞானக் கொடியே என்னுறவாம்
    கூட்டுக் கொடியே சிவகாமக்
    கொடியே அடியேற் கருளுகவே. 3
    (388). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.
    5460. மாலக் கொடியேன் குற்றமெலாம்
    மன்னித் தருளி மரணமெனும்
    சாலக் கொடியை ஒடித்தெனக்குட்
    சார்ந்து விளங்கும் தவக்கொடியே
    காலக் கருவைக் கடந்தொளிர்வான்
    கருவும் கடந்து வயங்குகின்ற
    கோலக் கொடியே சிவஞானக்
    கொடியே அடியேற் கருளுகவே. 4
    5461. நாடாக் கொடிய மனம்அடக்கி
    நல்ல மனத்தைக் கனிவித்துப்
    பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும்
    பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
    தேடாக் கரும சித்திஎலாம்
    திகழத் தயவால் தெரிவித்த
    கோடாக் கொடியே சிவதருமக்
    கொடியே அடியேற் கருளுகவே. 5
    5462. மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு
    வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
    வணங்கொள் கொடியே ஐம்பூவும்
    மலிய மலர்ந்த வான்கொடியே
    கணங்கொள் யோக சித்திஎலாம்
    காட்டுங் கொடியே கலங்காத
    குணங்கொள் கொடியே சிவபோகக்
    கொடியே அடியேற் கருளுகவே. 6
    5463. புலங்கொள் கொடிய மனம்போன
    போக்கில் போகா தெனைமீட்டு
    நலங்கொள் கருணைச் சன்மார்க்க
    நாட்டில் விடுத்த நற்கொடியே
    வலங்கொள் ஞான சித்திஎலாம்
    வயங்க விளங்கு மணிமன்றில்
    குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக்
    கொடியே அடியேற் கருளுகவே. 7
    5464. வெறிக்கும் சமயக் குழியில்விழ
    விரைந்தேன் தன்னை விழாதவகை
    மறிக்கும் ஒருபே ரறிவளித்த
    வள்ளற் கொடியே மனக்கொடியைச்
    செறிக்கும் பெரியர் உளத்தோங்கும்
    தெய்வக் கொடியே சிவஞானம்
    குறிக்கும் கொடியே ஆனந்தக்
    கொடியே அடியேற் கருளுகவே. 8
    5465. கடுத்த விடர்வன் பயம்கவலை
    எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
    அடுத்த கொடியே அருளமுதம்
    அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
    எடுத்த கொடியே சித்திஎலாம்
    இந்தா மகனே என்றெனக்கே
    கொடுத்த கொடியே ஆனந்தக்
    கொடியே அடியேற் கருளுகவே. 9
    5466. ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம்
    எய்த ஒளிதந் தியான்வனைந்த
    பாட்டைப் புனைந்து பரிசளித்த
    பரம ஞானப் பதிக்கொடியே
    தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல்
    செலுத்தும் சுத்த சன்மார்க்கக்
    கோட்டைக் கொடியே ஆனந்தக்
    கொடியே அடியேற் கருளுகவே. 10

    திருச்சிற்றம்பலம்

    127. இன்பத் திறன்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5467. உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
    உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
    இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
    இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
    விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
    விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
    அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
    அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே. 1
    5468 மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
    வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
    போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
    பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
    தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
    செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
    பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
    புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே. 2
    5469 அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
    அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
    வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
    மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
    தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
    தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
    உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
    உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே. 3
    5470 நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
    நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
    ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
    இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
    பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
    பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
    கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
    குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே. 4
    5471 நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
    நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
    எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
    யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
    பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
    பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
    தண்புடைநன் மொழித்திரளும்(389) சுவைப்பொருளும் அவைக்கே
    தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே. 5
    (389). மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    5472 பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
    பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
    கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
    கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
    துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
    சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
    றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
    அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே. 6
    5473 விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
    மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
    மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
    மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
    துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
    சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
    குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
    குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே. 7
    5474 ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
    ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
    வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
    மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
    அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
    அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
    தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
    சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே. 8
    5475 வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
    வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
    போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
    போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
    நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
    நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
    ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
    எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே. 9
    5476 என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
    எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
    நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
    நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
    தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
    சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
    பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
    பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே. 10

    திருச்சிற்றம்பலம்

    128. உற்ற துரைத்தல்


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன்
    தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
    கனிநாள் இதுவே என்றறிந்தேன்
    கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
    தனிநா யகனே கனகசபைத்
    தலைவா ஞான சபாபதியே
    இனிநான் இறையும் கலக்கமுறேன்
    இளைக்க மாட்டேன் எனக்கருளே. 1
    5478 அருளும் பொருளும் யான்பெறவே
    அடுத்த தருணம் இதுஎன்றே
    தெருளும் படிநின் அருள்உணர்த்தத்
    தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
    மருளும் மனந்தான் என்னுடைய
    வசத்தே நின்று வயங்கியதால்
    இருளும் தொலைந்த தினிச்சிறிதும்
    இளைக்க மாட்டேன் எனக்கருளே. 2
    5479 அருளே உணர்த்த அறிந்துகொண்டேன்
    அடுத்த தருணம் இதுஎன்றே
    இருளே தொலைந்த திடர்அனைத்தும்
    எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
    தெருளே சிற்றம் பலத்தாடும்
    சிவமே எல்லாம் செய்யவல்ல
    பொருளே இனிநான் வீண்போது
    போக்க மாட்டேன் கண்டாயே. 3
    5480 கண்டே களிக்கும் பின்பாட்டுக்
    காலை இதுஎன் றருள்உணர்த்தக்
    கொண்டே அறிந்து கொண்டேன்நல்
    குறிகள் பலவுங் கூடுகின்ற
    தொண்டே புரிவார்க் கருளும்அருட்
    சோதிக் கருணைப் பெருமனே
    உண்டேன் அமுதம் உண்கின்றேன்
    உண்பேன் துன்பை ஒழித்தேனே. 4
    5481 ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம்
    ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
    கழித்தேன் மரணக் களைப்பற்றேன்
    களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
    பழித்தேன் சிற்றம் பலம்என்னாப்
    பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
    விழித்தேன் கருத்தின் படிஎல்லாம்
    விளையா டுதற்கு விரைந்தேனே. 5
    5482 விரைந்து விரைந்து படிகடந்தேன்
    மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
    கரைந்து கரைந்து மனம்உருகக்
    கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே
    வரைந்து ஞான மணம்பொங்க
    மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
    திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்
    செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே. 6
    5483 தேனே கன்னல் செழும்பாகே
    என்ன மிகவும் தித்தித்தென்
    ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந்
    துயிரில் கலந்த ஒருபொருளை
    வானே நிறைந்த பெருங்கருணை
    வாழ்வை மணிமன் றுடையானை
    நானே பாடிக் களிக்கின்றேன்
    நாட்டார் வாழ்த்த நானிலத்தே. 7
    5484 நிலத்தே அடைந்த இடர்அனைத்தும்
    நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
    வலத்தே அழியா வரம்பெற்றேன்
    மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
    குலத்தே சமயக் குழியிடத்தே
    விழுந்திவ் வுலகம் குமையாதே
    நலத்தே சுத்த சன்மார்க்கம்
    நாட்டா நின்றேன் நாட்டகத்தே. 8
    5485 அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
    திருந்த உலகர் அனைவரையும்
    சகத்தே திருத்திச் சன்மார்க்க
    சங்கத் தடைவித் திடஅவரும்
    இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
    திடுதற் கென்றே எனைஇந்த
    உகத்தே இறைவன் வருவிக்க
    உற்றேன் அருளைப் பெற்றேனே. 9
    5486 பெற்றேன் என்றும் இறவாமை
    பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
    உற்றே கலந்தான் நானவனை
    உற்றே கலந்தேன் ஒன்றானேம்
    எற்றே அடியேன் செய்ததவம்
    யாரே புரிந்தார் இன்னமுதம்
    துற்றே உலகீர் நீவிர்எலாம்
    வாழ்க வாழ்க துனிஅற்றே. 10

    திருச்சிற்றம்பலம்

    129. சுத்த சிவநிலை


    நேரிசை வெண்பா

    5487. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
    எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
    கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
    கலந்தான் கருணை கலந்து. 1
    5488 எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
    எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய்
    நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
    ஒன்றாகி நின்றான் உவந்து. 2
    5489 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
    பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
    தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
    வள்ளல்நட ராயன் மகிழ்ந்து. 3
    5490 சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
    நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
    தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
    சந்தோட மாய்இருமின் சார்ந்து. 4
    5491 அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
    அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
    செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து. 5
    5492 அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
    அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
    சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
    உடையான் உளத்தே உவந்து. 6
    5493 தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
    தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
    ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
    மேகத்திற் குண்டோ விளம்பு. 7
    5494 பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
    கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
    தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
    நிலையும் கொடுத்தான் நிறைந்து. 8
    5495 வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
    செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
    ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
    தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து. 9
    5496 வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
    அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
    இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
    துன்பமெலாம் போன தொலைந்து. 10
    5497 அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
    அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
    மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
    சாமா றிலைஎனக்குத் தான். 11
    5498 நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
    தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
    புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
    புகுந்தான் கருணை புரிந்து. 12
    5499 ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
    நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
    சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
    பத்திஎலாம் பெற்ற பலன். 13
    5500 தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
    ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
    தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
    வந்தான்என் அப்பன் மகிழ்ந்து. 14
    5501 வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
    நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
    ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
    பாடுகநீ என்றான் பரன். 15
    5502 தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
    ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
    செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
    எய்தற் கரியசுகம் ஏய்ந்து. 16
    5503 சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
    நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
    ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
    தானவிளை யாட்டியற்றத் தான். 17
    5504 நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
    நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
    நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
    ஊன்நாடி நில்லா உழி. 18
    5505 ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
    காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
    கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
    துண்டேன் அமுதம் உவந்து. 19
    5506 துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
    சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
    நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
    மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து. 20
    5507 பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
    சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
    தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
    கொல்லா நெறிஅருளைக் கொண்டு. 21
    5508 சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
    பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று. 22
    5509 சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
    வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
    நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
    தாயே அனையான் தனித்து. 23
    5510 கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
    சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
    ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
    மாகா தலனா மகிழ்ந்து. 24
    5511 நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
    ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
    பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
    நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு. 25
    5512 சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
    சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
    றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
    நண்ணுமின்பத் தேன்என்று நான். 26
    5513 நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால்
    நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
    அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
    இழியாமல் ஆடுகின்றேன் இங்கு. 27
    5514 எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
    இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
    சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
    என்மார்க்கம் காண்பேன் இனி. 28
    5515 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
    நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
    சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
    உற்றிங் கறிந்தேன் உவந்து. 29
    5516 வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இவை. 30
    5517 சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
    வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
    தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
    நிலைஅடைதல் வேண்டும் நிலத்து. 31
    5518 பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
    மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
    சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
    இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு. 32
    5519 வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
    தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
    மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
    இங்குநடஞ் செய்வான் இனி. 33
    5520 சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
    சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
    ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
    வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து. 34
    5521 இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
    நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
    சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
    நித்தியம்பெற் றுய்யலாம் நீர். 35
    5522 என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
    தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
    தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
    வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து. 36
    5523 செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
    கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
    அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
    தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே. 37
    5524 இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
    எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
    சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
    உற்றவரை உற்றவர்கள் உற்று. 38
    5525 யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
    ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
    அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
    கம்பலத்தால் ஆகும் களித்து. 39
    5526 என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
    அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
    திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
    குருவம் பலத்தேஎன் றுன். 40
    5527 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
    நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
    சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
    கென்மார்க்க மும்ஒன்றா மே. 41
    5528 மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
    தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
    சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
    நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள். 42
    5529 இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
    நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
    அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
    அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம். 43
    5530 ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
    சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
    காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
    நீரத்தைச் சேர்வீர் நிஜம். 44
    5531 வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
    நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
    தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
    உள்ளியநாள் ஈதறிமின் உற்று. 45
    5532 போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
    நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
    அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
    றிப்புவியில் இத்தருணம் இங்கு. 46
    5533 ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
    நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
    நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
    அனையான் வருகின்றான் ஆய்ந்து. 47

    திருச்சிற்றம்பலம்

    130. உலகப்பேறு


    கலிவிருத்தம்

    5534. இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
    துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
    அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
    என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே. 1
    5535 பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
    தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
    ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
    தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே. 2
    5536 மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
    வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
    பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
    நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே. 3
    5537 முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
    மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
    பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
    என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே. 4
    5538 இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
    மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
    திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
    நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே. 5
    5539 அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
    கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
    பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
    எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே. 6
    5540 குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
    மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
    பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
    இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே. 7
    5541 பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
    முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
    சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
    சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே. 8
    5542 ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
    ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
    ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
    வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே. 9
    5543 இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
    மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
    தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
    தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே. 10

    திருச்சிற்றம்பலம்

    131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்


    கலிநிலைத் துறை

    5544. அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
    பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
    மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
    தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே. 1
    5545 வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
    ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
    வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
    ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர். 2
    5546 ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
    சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
    நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
    வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி. 3
    5547 நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
    பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
    வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
    வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே. 4
    5548 துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
    பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
    அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
    உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர். 5
    5549 ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
    பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
    மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
    யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன். 6
    5550 வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
    ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
    ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
    ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே. 7
    5551 சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
    அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
    தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
    அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.(390) 8
    (390). அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு,
    பொ. சு., பி. இரா.
    5552 ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
    வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
    தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
    வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர். 9
    5553 கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
    நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
    மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
    கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே. 10
    5554 கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
    நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
    பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
    விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே. 11
    5555 அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
    பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
    மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
    தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின். 12
    திருச்சிற்றம்பலம்

    132. உலகர்க்கு உய்வகை கூறல்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5556. கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
    கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
    பட்டோ டே பணியோடே திரிகின்றீர் தெருவில்
    பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
    கொட்டோ டே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
    குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
    எட்டோ டே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 1
    5557 ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
    அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
    மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
    வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
    நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
    நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
    ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 2
    5558 ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
    ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
    மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
    மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
    காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
    கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
    கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 3
    5559 சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
    தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
    மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
    வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
    காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
    கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
    தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 4
    5560 அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
    அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
    பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
    பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
    பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
    பின்படு தீமையின் முன்படு கின்றீர்
    இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 5
    5561 வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
    வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
    பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
    பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
    பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
    பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
    எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 6
    5562 வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
    வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
    முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
    மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
    மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
    வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
    என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 7
    5563 துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
    தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
    சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
    சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
    பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
    பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
    என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 8
    5564 பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே
    புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
    செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்
    சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
    கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே
    கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
    எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 9
    5565 பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
    பகராத வன்மொழி பகருகின் றீரே
    நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
    நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
    கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
    கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
    எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
    எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. 10

    திருச்சிற்றம்பலம்

    133. புனித குலம் பெறுமாறு புகலல்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5566. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. 1
    5567 காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
    கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
    கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
    குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
    பாடுபட்டீர்(391) பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
    பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
    ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
    எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே. 2
    (391). பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு.
    5568 ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
    அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
    கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
    கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
    வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
    வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
    சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
    தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே. 3
    5569 பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
    புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
    கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
    களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
    ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
    அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
    மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
    மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே. 4
    5570 எய்வகைசார்392 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
    எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
    கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
    கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
    ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
    அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
    உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
    உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே. 5
    (392). எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
    5571 உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
    உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
    மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
    வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
    இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
    எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
    நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
    நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே. 6
    5572 நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
    நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
    வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
    வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
    புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
    புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே
    உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
    உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே. 7
    5573 கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
    களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
    சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
    செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
    தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
    திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
    மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
    வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.393 8
    (393). முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் கனமுடையேம்
    என்பது ஒன்பதாம் பாடலாகவும் வையகத்தீர் என்பது
    எட்டாம் பாடலாகவும் உள்ளன.
    5574 வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
    வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
    மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
    வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
    மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
    மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
    செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
    சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே. 9
    5575 கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
    கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
    மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
    மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
    திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
    சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில்
    சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
    தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே. 10

    திருச்சிற்றம்பலம்

    134. மரணமிலாப் பெருவாழ்வு


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5576. நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
    நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
    நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
    நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
    வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. 1
    5577 புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
    புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
    உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
    உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
    மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
    மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
    தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
    சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. 2
    5578 பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
    பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
    துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
    துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
    தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
    சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
    கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
    காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே. 3
    5579 கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
    விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
    எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
    இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. 4
    5580 இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
    எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
    அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
    அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
    பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
    பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
    வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
    மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே. 5
    5581 தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
    சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
    ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
    அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
    ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
    ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
    நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
    நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே. 6
    5582 நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
    நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
    சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்
    தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
    சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
    சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
    ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
    உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே. 7
    5583 விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
    மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
    திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
    செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
    வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
    வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
    கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
    கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே. 8
    5584 களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
    களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
    தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
    செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
    ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
    ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
    அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
    ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே. 9
    5585 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
    ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
    எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
    தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
    திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
    மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
    முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே. 10
    5586 அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
    அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
    கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
    காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
    இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
    யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
    உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
    ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே. 11
    5587 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
    சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
    வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
    வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
    பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
    பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
    கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
    கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. 12
    5588 உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
    உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
    எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
    என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
    தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
    சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
    கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
    கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே. 13
    5589 தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
    தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
    வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
    வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
    தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
    சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
    ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
    உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே. 14
    5590 சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்
    தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
    நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
    நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
    அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
    ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
    சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
    சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே. 15
    5591 நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
    நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
    எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
    என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
    சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
    செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
    முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
    முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே. 16
    5592 முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
    முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
    இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
    எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
    துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
    தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
    பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
    படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. 17
    5593 சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
    சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
    இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
    தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
    அகமறிந்தீர்(394) அனகமறிந் தழியாத ஞான
    அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
    முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
    முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே. 18
    (394). அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
    5594 நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
    நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
    வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
    வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
    தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
    தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
    ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
    யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே. 19
    5595 குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
    கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே. 20
    5596 சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
    திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
    ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
    உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
    வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
    மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
    சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
    தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே. 21
    5597 செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
    திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
    மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
    மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
    வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
    மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
    பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
    புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே. 22
    5598 பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
    புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே
    மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
    பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
    பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
    அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
    அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே. 23
    5599 மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
    மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
    சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
    சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
    எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
    இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
    பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
    பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே. 24
    5600 இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
    இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
    மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
    மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
    சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
    சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
    பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
    பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே. 25
    5601 உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
    உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
    கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
    கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
    சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
    தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
    இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. 26
    5602 சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
    தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
    நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
    நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
    புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
    பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
    அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
    அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே. 27
    5603 சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
    சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
    நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
    நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
    ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
    எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
    ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
    உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே. 28

    திருச்சிற்றம்பலம்

    135. சமாதி வற்புறுத்தல்


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5604. ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
    தருணம்இதே அறிமின் என்றே
    வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
    கின்றார்இம் மனிதர்அந்தோ
    தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
    உளங்கலந்த தலைவா இங்கே
    நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
    இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே. 1
    5605 இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
    தருணம்இதே என்று வாய்மை
    அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
    வார்த்தைகள்என் றறைகின் றாரால்
    மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
    எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
    சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
    மனிதர்மதித் திறமை என்னே. 2
    5606 சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
    படுவாரைத் துணிந்து கொல்லக்
    கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
    துண்மையினில் கொண்டு நீவீர்
    நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
    போலும்அன்றி நினைத்த வாங்கே
    பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
    பதிப்புகழைப் பேசு வீரே. 3
    5607 தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
    உலகாளச் சூழ்ந்த காமப்
    பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
    நும்முயிரைப் பிடிக்க நாளைச்
    சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
    ஞானசபைத் தலைவன் உம்மைக்
    கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
    இவ்வுலகில் குலாவு வீரே. 4
    5608 பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
    திடுகின்றீர் பேய ரேநீர்
    இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
    மதித்தீரோ இரவில் தூங்கி
    மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
    நும்மனத்தை வயிரம் ஆன
    சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
    ஏன்பிறந்து திரிகின் றீரே. 5
    5609 அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
    பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
    பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
    இனிச்சாகும் பிணங்க ளேநீர்
    கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
    என்னபயன் கண்டீர் சுட்டே
    எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
    எருவுக்கும் இயலா தன்றே. 6
    5610 குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
    டால்அதுதான் கொலையாம் என்றே
    வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
    சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
    பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
    சம்மதிக்கும் பேய ரேநீர்
    எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
    கஞ்சுவரே இழுதை யீரே. 7
    5611 கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
    பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
    பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
    சுடுகின்றீர் புதைக்க நேரீர்
    சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
    துடியாதென் சொல்லீர் நும்மைத்
    தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
    கதியிலைமேல் சூழ்வீர் அன்றே. 8
    5612 பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
    ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
    சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
    பற்பலரும் சித்த சாமி
    உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
    தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
    வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ
    கண்கெட்ட மாட்டி னீரே. 9
    5613 புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
    கருங்கடலில் போக விட்டீர்
    கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
    சுடுகின்ற கொடுமை நோக்கிக்
    கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
    கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
    தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
    புரிகுவதித் தருணம் தானே. 10

    திருச்சிற்றம்பலம்

    136. சன்மார்க்க உலகின் ஒருமைநிலை


    நேரிசை வெண்பா

    5614. சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
    சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
    உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
    துள்ளல் ஒழிக தொலைந்து. 1
    5615 ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
    நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
    நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
    இடம்புரிக வாழ்க இசைந்து. 2
    5616 சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
    நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
    போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
    நாற்றிசையும் வாழ்க நயந்து. 3
    5617 அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
    விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
    ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
    நீதிக் கொடிவிளங்க நீண்டு. 4
    5618 கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
    அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
    நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
    தெல்லோரும் வாழ்க இசைந்து. 5
    5619 புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
    நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
    செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
    ஒத்தாராய் வாழ்க உவந்து. 6
    5620 செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
    இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
    சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
    துன்மார்க்கம் போக தொலைந்து. 7
    5621 செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
    சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
    சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
    என்மார்க்கம் நின்மார்க்க மே. 8
    5622 நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
    வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
    நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
    சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து. 9
    5623 ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
    சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
    இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
    கவ்வைஅற்ற அம்பலத்தான் கால். 10
    5624 நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
    பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
    யார்உளர்நீ சற்றே அறை. 11

    திருச்சிற்றம்பலம்

    137. திருவடிப் பெருமை


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5625. திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
    தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
    உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
    ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
    பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
    பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால்
    துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
    சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி. 1
    5626 அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
    ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
    தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
    சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
    மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
    மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
    இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
    என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. 2
    5627 செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
    செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
    அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
    அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
    எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
    என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
    தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
    சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி. 3
    5628 தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
    சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோ ரோ
    மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
    முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
    யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
    அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
    ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
    அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி. 4
    5629 பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
    பணம்பரித்த395 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
    விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
    விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
    மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
    மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
    நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
    நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி. 5
    (395). பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.
    5630 வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
    விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
    தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
    தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
    இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
    இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
    பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
    புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி. 6
    5631 திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
    திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
    அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
    அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
    உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
    துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
    பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
    பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி. 7
    5632 நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
    நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
    போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
    புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
    பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப்
    படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
    போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
    புகலவச மாமோநீ புகலாய்என் தோழி. 8
    5633 பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
    பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
    திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
    திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
    புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
    புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
    வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
    வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி. 9
    5634 ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
    இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
    வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
    மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
    காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
    காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
    தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
    தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி. 10
    5635 கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
    கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
    தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
    ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
    நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
    நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
    மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
    வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி. 11
    5636 சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
    திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
    பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
    படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
    இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
    இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
    நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
    நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி. 12
    5637 சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
    துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
    இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
    இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
    நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
    நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
    சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
    செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி. 13
    5638 காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
    காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
    வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
    விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
    தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
    துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
    மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
    வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி. 14
    5639 நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
    நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
    ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
    இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
    ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
    அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
    ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
    உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி. 15
    5640 தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
    தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
    சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
    தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
    ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
    இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
    ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
    அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி. 16
    5641 தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
    சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
    ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
    அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
    ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
    கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
    ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
    ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி. 17
    5642 ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
    ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
    இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
    இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
    பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
    பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
    அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
    அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி. 18
    5643 படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
    பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
    புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
    பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
    மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
    மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
    அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
    அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி. 19
    5644 சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
    சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
    வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
    மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
    தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
    திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
    அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
    அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி. 20
    5645 நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
    நாரணர்கள் மற்றவரின்396 நாடின்மிகப் பெரியர்
    வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
    மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
    மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
    மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
    ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
    ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி. 21
    (396). மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.
    5646 மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
    வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
    எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
    எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
    விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
    விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
    அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
    அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி. 22
    5647 மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
    வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
    கண்ணென்னும் உணர்ச்சிசொலாக் காட்சியவாய்க் நிற்பக்
    கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
    நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
    நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
    அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
    அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி. 23
    5648 மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
    மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
    எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
    வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி(397) நடுவே
    பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
    பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
    நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
    நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி. 24
    (397). இந்தவெளி - பி. இரா. பதிப்பு.
    5649 வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
    வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
    விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
    விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
    எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
    இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
    தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
    சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி. 25
    5650 பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
    பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
    உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
    உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
    துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
    தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
    அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
    அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி. 26
    5651 பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
    பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
    தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
    தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
    மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
    வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
    மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
    மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி. 27
    5652 பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்
    புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
    கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
    றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
    விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
    வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
    சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
    திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி. 28
    5653 ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம்
    எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
    தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
    துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
    ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
    அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
    சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
    சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி. 29
    5654 விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
    விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
    வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
    மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
    உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
    ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
    தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
    சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி. 30
    5655 காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
    கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
    மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
    மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
    பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
    பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
    ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
    எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி. 31
    5656 மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி
    வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
    பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை(398) ஒருகோடி
    பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
    எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
    எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
    விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
    விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி. 32
    (398). திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
    தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.
    திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு
    5657 விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
    விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
    கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
    கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
    பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
    பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
    நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
    நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி. 33
    5658 வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
    மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
    நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
    நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
    பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
    பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
    கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
    காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி. 34
    5659 ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
    உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
    தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
    தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
    தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
    திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி(399) வெளியில்
    பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
    பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி. 35
    (399). திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும்
    பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.
    5660 விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
    விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
    பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
    பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
    தெரிந்திடுநா னிலைக்குள்ளே இருந்துவெளிப் படவும்
    செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
    எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
    எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி. 36
    5661 தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
    துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
    ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
    அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
    ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
    இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
    ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
    உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி. 37
    5662 உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
    உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
    நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
    நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
    குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
    குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
    மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
    வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி. 38
    5663 சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
    சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
    தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
    தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
    வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
    மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
    ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
    அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி. 39
    5664 பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
    பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
    வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
    வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
    தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
    சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
    திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
    திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி. 40
    5665 பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
    பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
    மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
    வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
    ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
    இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
    தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
    துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி. 41
    5666 வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய்
    வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
    தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
    தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
    உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
    ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
    அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
    அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி. 42
    5667 பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
    பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
    விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி
    விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
    உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
    ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
    தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
    தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி. 43
    5668 சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
    சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
    ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
    உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
    ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
    அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
    வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்
    விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி. 44
    5669 பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
    பூஇருபத் தைம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
    நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
    நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
    மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
    வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
    பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
    பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி. 45

    திருச்சிற்றம்பலம்

    138. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5670. அன்னப்பார்ப் பால்(400)அழ காம்நிலை யூடே
    அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
    துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
    சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
    உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
    ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
    என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 1
    (400). அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.
    5671 அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
    அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
    விதுபா வகமுகத் தோழியும் நானும்
    மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
    பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
    பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
    இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 2
    5672 அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
    அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
    உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
    உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
    புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
    பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
    இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 3
    5673 அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
    அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
    நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
    நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
    பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
    பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
    இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 4
    5674 தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
    சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
    ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
    உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
    அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
    அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
    இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 5
    5675 மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
    வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
    இக்குல மாதரும் யானும்என் நாதர்
    இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
    பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
    பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
    எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 6
    5676 வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
    வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
    சம்மத மாமட வார்களும் நானும்
    தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
    இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
    ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
    எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 7
    5677 பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
    பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
    வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
    மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
    ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
    எம்முடம் புன்னை(401) இணைந்திங் கெமக்கே
    ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 8
    (401). எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,
    5678 மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
    மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
    சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
    சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
    புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
    புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
    இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 9
    5679 ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
    அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
    தேறறி வாகிச் சிவானு பவத்தே
    சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
    மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
    வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
    ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
    என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா. 10

    திருச்சிற்றம்பலம்

    139. நற்றாய் செவிலிக்குக் கூறல்


    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5680. உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
    உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
    அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
    அதிசயம் அதிசயம் என்றாள்
    துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
    தொட்டனன் பிடித்தனன் என்றாள்
    புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
    பொங்கினாள் நான்பெற்ற பொன்னே. 1
    5681 தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
    தவம்எது புரிந்ததோ என்றாள்
    அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
    அதிசயம் அதிசயம் என்றாள்
    இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
    எனக்கிணை யார்கொலோ என்றாள்
    சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
    ததும்பினாள் நான்பெற்ற தனியே. 2
    5682 புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
    புண்ணியம் புகல்அரி தென்றாள்
    தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
    தயவைநான் மறப்பனோ என்றாள்
    எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
    என்னையோ என்னையோ என்றாள்
    அண்ணிய பேரா னந்தமே வடிவம்
    ஆயினாள் நான்பெற்ற அணங்கே. 3
    5683 சத்திய ஞான சபாபதி எனக்கே
    தனிப்பதி ஆயினான் என்றாள்
    நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
    நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
    பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
    பேறெலாம் என்வசத் தென்றாள்
    எத்திசை யீரும் ஒத்திவண் வருக
    என்றனள் எனதுமெல் லியலே. 4
    5684 திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
    சிந்தையில் கலந்தனன் என்றாள்
    பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
    பேசுதல் அரிதரி தென்றாள்
    இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
    யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
    மருமலர் முகத்தே இளநகை துளும்ப
    வயங்கினாள் நான்பெற்ற மகளே. 5
    5685 வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
    மாலையோ காலையோ என்றாள்
    எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
    ஏவல்செய் கின்றன என்றாள்
    தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
    சித்தியும் பெற்றனன் என்றாள்
    துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
    சோர்விலாள் நான்பெற்ற சுதையே. 6
    5686 கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
    கண்டனன் கண்டனன் என்றாள்
    அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
    அன்பிலே கலந்தனன் என்றாள்
    தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
    செயல்செயத் தந்தனன் என்றாள்
    தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
    தவத்தினால் பெற்றநம் தனியே. 7
    5687 கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
    கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
    கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
    கடிமணம் புரிந்தனன் என்றாள்
    ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
    ஒளிஎனக் களித்தனன் என்றாள்
    இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
    என்தவத் தியன்றமெல் லியலே. 8
    5688 வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
    மாலைவந் தணிந்தனன் என்றாள்
    ஊழிதோ றூழி உலவினும் அழியா
    உடம்பெனக் களித்தனன் என்றாள்
    ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
    அளிக்கஎன் றருளினான் என்றாள்
    ஏழியன் மாட மிசையுற வைத்தான்
    என்றனள் எனதுமெல் லியலே. 9
    5689 ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
    என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
    பாலும்இன் சுவையும் போன்றென தாவி
    பற்றினன் கலந்தனன் என்றாள்
    சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
    சத்தியை அளித்தனன் என்றாள்
    மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
    மிகுகளிப் புற்றனள் வியந்தே. 10

    திருச்சிற்றம்பலம்

    140. தோழிக் குரிமை கிளத்தல்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5690. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
    வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
    விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
    மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. 1
    5691 நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
    வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
    மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
    மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. 2
    5692 நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
    நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
    வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
    வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
    வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
    வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
    பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே. 3
    5693 கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
    கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
    நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
    நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
    ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
    உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
    நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே. 4
    5694 மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
    மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
    இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
    எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
    மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
    வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
    அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
    ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே. 5
    5695 அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
    அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
    உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
    உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
    மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
    மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
    இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
    இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே. 6
    5696 சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
    தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
    தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
    தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
    இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
    இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
    நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
    நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே. 7
    5697 ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி
    ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும்
    வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
    விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
    உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
    உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
    தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
    தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே. 8
    5698 ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
    என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
    சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
    சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
    தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள்பற் பலரைச்
    செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
    ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
    உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி. 9
    5699 பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
    பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
    பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
    பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
    உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
    உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
    தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
    தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே. 10
    5700 பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
    பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
    தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
    சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
    திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
    திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
    சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
    திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே. 11
    5701 இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
    றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
    துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
    சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
    விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
    மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
    வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
    மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே. 12
    5702 வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
    மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
    தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
    துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
    மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
    விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
    ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
    அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே. 13
    5703 கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
    கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
    விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
    மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
    அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
    அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
    துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
    சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ. 14

    திருச்சிற்றம்பலம்

    141. தலைவி கூறல்


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5704. தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
    தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
    எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
    என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
    வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
    மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
    சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 1
    5705 நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
    நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
    என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
    இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
    முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
    முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
    தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 2
    5706 முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
    மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
    பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
    பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
    துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
    துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
    தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 3
    5707 உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
    உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
    கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
    கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
    நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
    நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
    தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 4
    5708 என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
    யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
    உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
    உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
    துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
    தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
    தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 5
    5709 என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
    எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
    இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
    இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
    மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
    மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
    தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 6
    5710 கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
    கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
    அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
    அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே
    இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
    இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
    தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 7
    5711 ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
    அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
    பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
    பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
    நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
    நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
    தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 8
    5712 ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
    யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
    பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
    புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
    மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
    மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
    தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 9
    5713 உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
    உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
    இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
    இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
    அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
    அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
    சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
    சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே. 10

    திருச்சிற்றம்பலம்

    142. அனுபவ மாலை


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5714. அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
    அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
    எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
    என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
    வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
    மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
    நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
    நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே. 1
    5715 கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
    கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
    எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
    இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
    மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
    மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
    பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
    பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே. 2
    5716 எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
    நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
    நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
    பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
    பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
    வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
    வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே. 3
    5717 இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
    யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
    எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
    எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
    பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
    பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
    விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
    விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே. 4
    5718 வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
    மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
    எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
    எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
    அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
    ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
    பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
    பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே. 5
    5719 அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
    அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
    உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
    ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
    இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
    இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
    கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
    களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே. 6
    5720 பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
    புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
    இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
    எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
    சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
    சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
    துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
    தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே. 7
    5721 கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
    கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
    எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
    இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
    விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
    வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
    உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
    துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி. 8
    5722 மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
    மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
    ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
    என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
    தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
    தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
    ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
    தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே. 9
    5723 கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
    கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
    இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
    இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
    பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
    புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
    நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
    நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே. 10
    5724 மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
    மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
    என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
    என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
    மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
    விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
    அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
    அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ. 11
    5725 கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
    கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
    எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
    என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
    உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
    உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
    அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
    அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே. 12
    5726 காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
    கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
    ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
    இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
    பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
    பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
    பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
    பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா. 13
    5727 கண்ணாறு(402) படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
    கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
    எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
    தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
    பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
    பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
    உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
    உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே. 14
    (402). இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து கண்ணாறு
    என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர் படியில்
    உள்ளதும் கண்ணாறு. திருத்தணிகைப் பகுதி
    ஜீவசாட்சி மாலையில் அவர்கள் எழுதி உள்ளது
    கண்ணேறு என்பது. முதல் அச்சும் கண்ணேறு.- ஆ. பா.
    5728 கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
    கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
    எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
    இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
    பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
    பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
    இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
    எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே. 15
    5729 மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
    மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
    தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
    சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
    தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
    திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
    உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
    துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே. 16
    5730 தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
    சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
    வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
    மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
    சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
    துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
    ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
    கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே. 17
    5731 தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
    தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
    இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
    இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
    மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
    மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
    தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
    தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே. 18
    5732 மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
    மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
    குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
    குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
    தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
    சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
    அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
    அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே. 19
    5733 அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
    ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
    விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
    விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
    கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
    கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
    இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
    இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே. 20
    5734 பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி(403)
    பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
    அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
    அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
    கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
    களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
    புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
    புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே. 21
    (403) இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் தோழீ
    என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
    5735 மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
    மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
    நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
    நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
    இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
    எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
    இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
    என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ. 22
    5736 கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
    குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
    நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
    நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
    ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
    ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
    ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
    என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ. 23
    5737 அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
    ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
    தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
    திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
    இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
    என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
    மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
    மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே. 24
    5738 என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
    என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
    பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
    புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
    அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
    அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
    மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
    மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே. 25
    5739 தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
    தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
    சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
    திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
    அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
    அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
    எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
    வீறுமவர்(404) திருமேனி நானும்என அறியே. 26
    ( 404). ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
    5740 எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
    இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
    நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
    நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
    இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
    என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
    செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
    சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே. 27
    5741 வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
    மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
    நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
    நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
    கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
    கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
    தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
    தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே. 28
    5742 என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
    எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
    பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
    புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
    புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
    புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
    உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
    உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே. 29
    5743 ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
    என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
    ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
    உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
    தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
    செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
    ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
    இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே. 30
    5744 ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
    அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
    மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
    வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
    கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
    கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
    வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
    மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே. 31
    5745 தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
    தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
    பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
    புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
    என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
    இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
    முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
    முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே. 32
    5746 இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
    என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
    அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
    அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
    எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
    இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
    நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
    நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே. 33
    5747 திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
    சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
    உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
    ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
    பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
    பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
    துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
    சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி. 34
    5748 அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
    ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
    தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
    திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
    மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
    மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
    இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
    என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி. 35
    5749 செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
    தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
    பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
    படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
    எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
    என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
    தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
    சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி. 36
    5750 தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
    தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோ ரோ
    மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
    முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
    யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
    கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
    ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
    அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே. 37
    5751 திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
    திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
    அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
    அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
    பரிச்சிக்கும்405 அவ்வமுதின் நிறைந்தசுவை ஆகிப்
    பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
    உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
    ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே. 38
    (405). பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
    5752 வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
    விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே
    தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
    தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
    இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
    இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
    பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
    புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ. 39
    5753 கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
    கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
    பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
    படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
    அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
    அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
    என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
    என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே. 40
    5754 என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
    இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
    பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
    பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
    உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
    உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
    மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
    மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே. 41
    5755 பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
    பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
    சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
    திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
    ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
    ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
    ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
    உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே. 42
    5756 நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
    நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
    போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
    புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
    வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
    விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
    வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
    மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே. 43
    5757 புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
    பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
    எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
    இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
    பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப்
    பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
    அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
    ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே. 44
    5758 கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
    ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத்
    திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
    பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
    பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
    வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
    வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே. 45
    5759 குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
    புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
    புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
    அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
    அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
    விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
    மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே. 46
    5760 கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
    கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
    படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
    பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
    அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
    ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
    கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
    கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே. 47
    5761 இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
    எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
    அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
    அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
    என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
    என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
    துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
    சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே. 48
    5762 துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
    சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
    பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
    பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
    இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
    என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
    உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
    ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே. 49
    5763 ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
    எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
    ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
    என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
    ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
    அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
    கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
    கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ. 50
    5764 அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
    ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
    முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
    முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
    விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
    வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
    பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
    பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே. 51
    5765 தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
    சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
    வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
    மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
    ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
    ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
    கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
    கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ. 52
    5766 துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
    சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
    பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
    பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
    இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
    எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
    படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
    பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே. 53
    5767 ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
    என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
    காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
    கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம்
    தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
    தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
    மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
    வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே. 54
    5768 நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
    நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
    இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
    எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
    திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
    திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
    கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
    கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ. 55
    5769 பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
    பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
    மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
    விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
    கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
    களித்திடுக இனியுனைநாம் கைவிடோ ம் என்றும்
    மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
    மாலையிட்டோ ம் என்றெனக்கு மாலையணிந் தாரே. 56
    5770 பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
    பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
    திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும்
    தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
    வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
    வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
    கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
    கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி. 57
    5771 தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
    சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
    இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
    இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
    எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
    என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
    சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
    சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி. 58
    5772 ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
    அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
    மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
    மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
    மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
    விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
    கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
    கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி. 59
    5773 காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
    கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
    கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
    குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
    ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
    அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
    தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
    தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே. 60
    5774 காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
    கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
    ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
    அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
    தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
    தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
    தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
    திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி. 61
    5775 மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
    மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
    மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
    வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
    போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
    புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
    ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
    ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி. 62
    5776 உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
    உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
    பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
    பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
    திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
    தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
    வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
    மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே. 63
    5777 பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
    பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
    ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
    எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
    சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
    திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
    பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
    பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே. 64
    5778 என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
    இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
    அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
    ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
    இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
    இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
    தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத்
    தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே. 65
    5779 தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
    துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
    ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
    ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
    என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
    ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே. 66
    5780 ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
    ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
    வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
    விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
    தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
    சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
    உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. 67
    5781 மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
    வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
    துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
    துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
    இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
    இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
    ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. 68
    5782 வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
    வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
    சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
    தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
    பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
    புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
    உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. 69
    5783 காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
    கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
    வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
    விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
    சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
    ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. 70
    5784 விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
    வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
    ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர்
    ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
    திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
    தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
    உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
    ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே. 71
    5785 மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
    வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
    காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
    கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
    ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
    உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
    சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே. 72
    5786 இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
    இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
    கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
    கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
    துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
    சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
    உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
    உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி. 73
    5787 என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
    எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
    தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
    தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
    பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
    பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
    மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
    மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே. 74
    5788 நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
    நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
    வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
    வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
    தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
    திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
    தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
    சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே. 75
    5789 இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
    எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
    எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
    எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
    கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
    கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
    செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
    சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே. 76
    5790 பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
    பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
    அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
    ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
    இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
    இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
    துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
    தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே. 77
    5791 அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
    அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
    இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
    எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
    தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
    செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
    அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
    அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே. 78
    5792 அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
    ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
    இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
    யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
    செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
    தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
    பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
    படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே. 79
    5793 நாடுகின்ற பலகோடி அண்டபகிர் அண்ட
    நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
    நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
    நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
    ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
    கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
    பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
    பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி. 80
    5794 தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
    துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
    அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
    அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
    கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
    குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
    எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
    இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே. 81
    5795 நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
    நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
    வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
    மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
    தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
    தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
    ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
    ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி. 82
    5796 வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
    வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
    தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
    தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
    தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
    திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
    யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
    என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே. 83
    5797 என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
    இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
    நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
    நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
    புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
    பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
    வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
    மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே. 84
    5798 உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
    உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
    துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
    சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
    பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
    பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
    அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
    ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே. 85
    5799 மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
    மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
    சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
    சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
    பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
    பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
    சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
    தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே. 86
    5800 எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
    இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
    கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
    கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
    நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
    ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
    செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே. 87
    5801 பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
    பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
    அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
    யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
    பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
    பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
    துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
    சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே. 88
    5802 சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
    சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
    பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
    பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
    அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
    அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
    சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
    திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி. 89
    5803 எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
    இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
    மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
    விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்406 மீட்டும்
    இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
    இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
    பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
    பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே. 90
    406. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    5804 காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
    கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
    கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
    குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
    நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
    நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
    மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
    வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி. 91
    5805 சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
    சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
    ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
    அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
    ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
    உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
    சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
    சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே. 92
    5806 சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
    தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
    உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
    ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
    அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
    ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
    பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
    பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி. 93
    5807 நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
    நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
    ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
    உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
    வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
    மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
    தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
    சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்407 உரைப் பதுவே. 94
    (407). புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
    5808 துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
    சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
    குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
    குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
    குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
    கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
    மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
    வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி. 95
    5809 தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
    தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
    கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
    கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
    செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
    சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
    இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
    இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி. 96
    5810 அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
    அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
    இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
    எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
    மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
    மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
    தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
    திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே. 97
    5811 புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
    புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
    சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
    செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
    பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
    பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
    மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
    மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே. 98
    5812 தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
    தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார்
    வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
    மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
    ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
    அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
    தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
    சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ. 99
    5813 அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
    ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
    செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
    திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
    பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
    பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
    அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
    அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே. 100

    திருச்சிற்றம்பலம்

    143. சத்திய வார்த்தை (408)


    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5814. சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
    நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
    தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
    எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே. 1
    (408) அடிகள் அருளிய தலைப்பு.

    திருச்சிற்றம்பலம்

    144. சத்திய அறிவிப்பு


    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    5815. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
    ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
    மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
    விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
    துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
    சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க
    வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
    மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 1
    5816 தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
    தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
    இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
    இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
    மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
    மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
    கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
    களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.(409) 2
    (409) இத்திருப்பாட்டின் இறுதியில் சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை என அடிகள்
    எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.
    5817 சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
    சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
    இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
    இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
    சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
    தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
    செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
    திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 3
    5818 என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
    இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
    பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
    பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
    தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
    சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
    மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
    வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.(410) 4
    (410) இத்திருப்பாட்டின் இறுதியில் இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி
    உரைத்துளேன் என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சிற்றம்பலம்

    ஆறாம் திருமுறை முற்றிற்று

    திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா முற்றும்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே

    திருச்சிற்றம்பலம்