MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    பட்டணத்துப்பிள்ளையார் புராணம்

    Source:
    பட்டணத்துப்பிள்ளையார் திருவாய்மலர்ந்தருளிய
    பிரபந்தத்திரட்டும் மேற்படியார் புராணமும்.
    ஸ்ரீமது ஞானராஜதானியான பொம்மையபாளையம்
    பெரியமடம் சிவகஞ்சி மயூரா சலநிவாச எதிஈஸ்வர கர்த்தரான
    சிவஞானபாலையசுவாமிகள் கட்டையின்படி.
    இயற்றமிழாசிரியராகிய திரு-விசாகப்பெருமாளையரவர்கள் முன்னிலையில்
    வே- குமாரசாமிஐயரால் பரிசோதித்து
    வ - அண்ணாமலைபிள்ளையவர்களால்
    வர்த்தமானதரங்கிணி சாகை அச்சுக்கூடத்திற் பதிப்பித்து
    படத்துடன் வெளியிடப்பட்டன.

    விபவ வருடம் சித்திரை மாதம்.
    -----------------------------------------------------------



    சிவமயம்.
    கணபதி துணை.
    திருவெண்காடரென்னும் பட்டணத்துப் பிள்ளையார் புராணம்.

    1. பூம்புகார்ச்சருக்கம். (27-54)
    2. ஆட்கொண்டசருக்கம் (55-192)
    3. துறவறச்சருக்கம். (193-336 )

    பாயிரம்.
    வழிபடு - கடவுள் வணக்கம்.
    ஒளிமேவுந் தில்லைவனத் தோங்கியகற்ப கவனமொன்றுண்டு கண்டாற்,
    றெளிமேவு மானந்த நிருத்தமிடு நினைந்தபடிச் செல்வஞ் சேர்க்குங்,
    களிமேவுந் தும்பிமுகங் கனிகாட்டும் விண்ணுறை கற்பகமும்போலு,
    மளிமேவும் பட்டினத்துப் பிள்ளைபுரா ணம்ப கர்தற்களிக்குமன்றே. 1
    மருமகற்கு வழக்கிசைத்து வளையல்விற்று மாணிக்கவணிகராகிக்,
    குருமணிசூழ் நான்மாடக் கூடல் வருமொருவர்மன்றுட் குனிக்குங்கூத்தர்,
    பொருண்மகனாம்வணிகவுருத் திரசன்மர்பிதா வருளும் பொருள்வளர்த்தா,
    ரிருபதமாம் பொருள்செறித்தெம் மகத்தினினி திருப்பரா மெந்தஞான்றும். 2

    சபாநாதர்துதி.
    பரஞ்சோதி தருபான்மைப் பதிஞானப்பொதுவகற்றும்
    வரஞ்சேருமமரர்குழாம் வளைந்துள பொன்னம்பலத்தம்
    புரஞ்சேருஞ் செழுங்கடக புரியரசனம்பலத்து
    முரஞ்சேரு நடமூன்று முடையபிரா னடிபண்வாம். 3

    சிவகாமசுந்தரியம்மை துதி.
    உலகமெலா மீன்றருளி யொருமலைக்குமகளாகி
    யிலகுமயிலிளையோற்கு மிபமுகற்கும் பாலூட்டு
    முலையினைய கன்னிகையாய் முகிழ்த்தபெருங்கருணையளாந்
    தொலைவில் புகழ்ச்சிவகாம சுந்தரிசெந்தாள் பணிவாம். 4

    விநாயகர் துதி.
    இருநான்கு மதம்பொழியு மிருள்வேழமிரிந்தோடத்
    திருஞான மதமூன்றாஞ் சிவவேத மகிழ்களிறு
    பெருநாத முடிநடிக்கும் பெரியோன்ற னுடனாடிக்
    கருஞானமலைதொலைக்குங் கற்பகப்பொற்பதம்பணிவாம். 5

    சுப்பிரமணியசுவாமி துதி.
    அருட்சிவனா ரருண்மலைக்கும் பலமலைக்குமதிபதியாய்
    மருட்படவாருயிருண்ணும்வரைவயிறுகிழித்தொழித்துத்
    தெருட்புலவர் சிறைமீீட்டச் சேவகனெஞ்சிறையாய
    விருட்படலம்படச்சோதி யெறிக்குமவனடி பணிவாம். 6

    திருநந்திதேவர் துதி.
    மருணூல் சொல்லொருகோடி மறுசமயக்கொடும்பேய்கள்
    பொருணூல் சொல் பவர்போல்வார் பொய்யாக முடிவித்துத்
    தெருணூல் சொல் பரம்பரையாஞ் சிவமுதலென் றுரையாடி
    யருணூல்சொல் லருணந்தி யருளாலிங் கருள் பெறுவாம். 7

    திருஞானசம்பந்தசுவாமிகள் துதி.
    மணிவாயாற்றிருமிடற்றால் மலர்கரத்தாற்றமிழ்மூன்று
    மணியாக்கிப்புனனாடு மருந்தமிழ்நாடெனத்தோன்றுந்
    தணியாத திருஞானசம்பந்தர் பதம்பணியும்
    பணிவார்தம்பதம்பணியும் பணியெமக்குப் பணியாமே. 8

    திருநாவுக்கரசுசுவாமிகள் துதி.
    கல்லோடம் வெள்விடஞ்சூழ் காசினியினடக்குமலை
    யெல்லாமிங்கிறும்பூதா வின்பமெனவிளையாடிச்
    சொல்லாடிச் சிவகதியைத் துதித்துமதித்துக்கதித்தார்
    பல்லாரும்புகழ்நாவுக் கரசர்பதமலர்பணிவாம். 9

    சுந்தரமூர்த்திசுவாமிகள் துதி.
    முதல்வனார்பாவையிட முன்னுகர்வானளித்தருளி
    யிதமுதலாம்பரவையமுதினிமை தரத்தானுகர்வான்
    றுதிகுலாங்குபேரனையுந் தோழனெனவுடையாரை
    மதனுறாத்தூதேவும்வன்றொண்டர் பதம்பணிவாம்.
    இஃது செய்தெனெச்சமாயினும் செயவெனெச்சப்பொருள் தரல் காண்க. 10

    மாணிக்கவாசகசுவாமிகள் துதி.
    நானூற்றுமணிக்கோவை நடம்பயிலெம்பெருமாற்குத்
    தேனூற்றும்பொன்னிதழித் தெரியலுமேம்படச்சாத்தி
    வானூற்றமுதவுதிரு வாசகம்பேசினர்பாத
    மானூற்றுவிலையாக வணங்குதும்யாம் வணக்குதுமே. 11

    தில்லைவாழந்தணர் துதி.
    சீரசபா நடம்பயிலுந் திருவாரூரொருநாத
    னாருறையா னந்த நட நாதனைநேராதலினா
    லாரணராந்தில்லைவாழந்தணரென்றெடுத்தோதும்
    பேருடையவேதாந்தப் பெரியோர்தம்பதம்பணிவாம். 12

    சந்தானதேசிகர் துதி.
    கண்ணிய மாயாபோதக்கடங்கடத்திக்கணிவித்துத்
    தண்ணளியாலிருளறுத்துத் தன்னையென்னைத்தந்தனனால்
    வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான்மென்மலர்த்தாண்முடிசூட்டி
    யண்ணலந் தேசிதர் மலர்த்தாளங்கங்கே பணிந்தெழுவாம்.
    கண்ணியனவாகிய வெனலிக்குறிப்புமுற்றுப்பெயரெச்சப்பொருள் தருகின்றது. 13

    காரைக்காலம்மை துதி.
    வீயாதமாயவுடல் வெறுப்பினாலோவிமல
    ரோயாது பேயுடனாட்டு வந்ததனாலோவிங்குச்
    சேயாயவெள்ளிமலைச்சேர்வதற்கோதெரியாது
    பேயானால்காரைக்காற் பெண்ணணங்கன்னவட்பணிவாம். 14

    இயற்பகைநாயனார் துதி.
    வினைமாளவரும் விமலர்வேதியராந் தூர்த்தற்கு
    மனையாளைக் கொடுத்தவர்தாம் வருநெறியிற்றடைநோக்கி
    முனைவாளாற்சுற்றமெலா முற்றுவித்தசேவகனா
    ரெனையாளுஞ் செட்டிமையாரியற் பகையாம்பணியுறவே. 15

    மூர்த்திநாயனார் துதி
    அலையாழிவிடமருந்து மாலவாயமுதருக்கு
    மலையாரங்கிடையாமன் மறுத்தனர்விற்றிடுவோருஞ்
    சிலையாரக்கரந்தேய்த்துத்திருவருளாற் கரம்வளர்ந்து
    தொலையாதசெல்வமுறுந் தொண்டரடிமுடிமுடிப்பாம். 16

    அமர்நீதிநாயனார் துதி.
    மறைதருகோவணமொன்றாமனையாட்டி தனையர்செல்வ
    முறைபொருடாமுடனேறி முக்கணனார்மிக்கருளால்
    நிறைதருமக்கட்டளையே நீண்டவிமா னமதாக
    விறைபுரத்துப்போந்திருந்தாரிணையடித்தாமரைபணிவாம். 17

    கலிக்கம்பநாயனார் துதி.
    ஐம்மேவுமுடியார்முன்ன ரனடியராகிவர
    மெய்ம்மேவுந்திருவடிகள் விளங்குவான்விளக்குதலு
    மொய்ம்மேவும்புனல்வாராமொய்குழலார் கைதடிந்த
    கைம்மேவுங்கலிக்கம்பர் கையிணைகையாற்றொழுவாம். 18
    வேறு.

    பட்டணத்துப்பிள்ளையார் துதி.
    அறிவரியதொருபொருணீ யொன்றினுந்தோன்றாயென்றும டங்காயென்று,
    முறுதியுறச்செய்யுள் செய்தாராதலினாலாதியந்த மொன்றிலானைச்,
    சிறியபொதுவினில் மறுவொன்றின்றி விளங்கினையென்றுஞ் செப்பியிப்பால்,
    முறையினிதுவதிசயமேவிளைக்கும் வினையாதுமென மொழிந்தாரன்றே. 19
    மொழிந்தபடிநாற்கோடியாறெண் ணாயிரமேலு முடிவின்மாயை,
    பொழிந்தபலதத்துவங்களிருட்படலங் கிடப்படுமென்புந்தியுள்ளே,
    தழைந்திடுநின்சடைமௌலிக்கங்கைநங்கைசிலம்பலம் புந்தடந்தாளோடும்,
    நுழைந்தனையென் றதிசயித்தாரவரை
    யென்சிந் தையிற்பாட்டி னுழைவித்தேனே. 20
    பாயிரம்
    அவையடக்கம்
    ஆனந்தையெனுங்கணிகையணியவணிமணிக்கடகமளித்தநாதன்,
    பூநந்துஞ் சடைக்கரந்தவணிக வுருவிலிங்கவுருப்பொருந்துமாபோ,
    லீனந்தமருதணுகாவெண்காடர்வணிகவுருவிலிங்கமானா,
    ரியானந்தப்பெரியோர்தம்புகழ்புகழவென்புன்சொலின்சொலாமே. 21
    வாதனையோரிரண்டு மறமன்னுதவ முன்னிழைத்தார்மறங்கணீங்கிப்,
    பேதமைதீர்பட்டினத்துப்பிள்ளையெனு மொருபெரியோர் பிறங்குஞானக்,
    காதையினைப்பெரியோருஞ் சொலக்கேட்டிங் கிசைக்கின்றேன் கடன்ஞாலத்து,
    ளேதமிலான்றொழிலைந்து மாருயிர்கள் புரிவார்களென்றல்போலும். 22
    வெங்கதிராயிரம்பரப்புமாதவனுமளக்கருஞ் சூழ்வியன்ஞாலத்துச்,
    சங்கரன்றனடியாரைப் புகழ்ந்திடல் பூசனைபுரிதல்தருக்கவாற்றிற்,
    பொங்குநலம்பெறுவரெனவாரணவாகமம்புகன்றபொற்பினாலும்,
    பங்கமுறா வெண்காடர்சரிதமடியேனிசைந்து பகர்ந்தவாறே. 23
    இன்னுமொருவகையுவகை வெண்காடர்குலவணிகரின்புகூற,
    மன்னியநல்லறிஞர் சிலர்பரந்தகதையிதைத் தொடுத்துவகுத்துக்காட்டு,
    மென்னவெழிற்புலியூரிலிருங்கலைஞரறியு நெறியிசைத்துளன்யான்,
    பொன்னவையி னிருத்தமிடுமொருத்தனெடும் புகழாகப்புகலலாலே. 24
    புலிமுனியும்பதஞ்சலியுமுதலானபெரியோர்தம்புகழ் புராண
    மிலகியவாமவர்க்குமுனங்கதியடைந்தோரளவிலவரியற் புராணம்
    பலபலவாமவைபோலவருவனவுமவ்வண்ணம்பகரலாகும், கலைவடநூல்
    சொல்லிலென் சொல்லாவிடிலென் கதிக்கதைகள் கழறலாமே. 25
    மகவான்பட்டினம்படைத்தவண்மை திருவெண்காடர்வாழ்ந்த வாய்மை,
    யகலாமலிடைமருதனாங்கவர்பாற் சிறுவனெனவடைந்தநேயந்,
    திகழ்ஞானவுபதேசம்வைத்தவழி திருவிசைப்பாச்செப்புஞ்செப்பம்,
    புகழோங்கு மொற்றியூ ருற்றிலிங்க மானதுவும் புகலுற்றேன். 26

    பாயிரமுற்றிற்று.
    ஆக - திருவிருத்தம் - 26
    -------------

    1. பூம்புகார்ச்சருக்கம். (27-54)


    செங்கரங்கால்விழிவதனந் திருநாபியெண்கமலம் சேர்ந்தானேனு,
    மெங்கடிருமாலிதயகோகனங் கோயில்கொண்டங்கிருக்கும்பொன்மான்,
    பங்கயம்போனீங்காமலிருக்கின்றகாவிரிப்பூம்பட்டினத்துப்
    புங்கமொரு சற்றுரைக்கே னுருத்திதங்கொண் டருமொருமாப்புகன்றுளாரே. 1
    பொன்னுலகம்புரந்திருக்கும் புரந்தரன்வாழ்பரிமேதம்புரிந்தகோமா,
    னன்னைபெரும் பூவுலகிலருஞ்சாயாவனஞ் சேருமமுதநாதன்,
    றன்னையருச்சனைபுரியத்தினந்தோறும்போய் மீண்டுவருந்தன்மைதீர்ப்பா,
    னுன்னிநெடுஞ்செங்கோட்டு வெள்ளிமலைப்பிடரேறியுவந்தான்மன்னோ. 2
    வந்துசிவக்குறிசெறியுமிட முதலாச் செடமுடிமட்டுந்தொட்டா,
    னந்தமுடிமணிச்சாயை யெவ்வயினு மெறிப்பவெறிந்தாஃதாற்றாமற்,
    சந்ததமுந் தாழைமணங்கமழ்சோலை வளநாடுதழுவுங்கோயிற்,
    றந்திடவுன்னினன் முன்போலாயிரந்தாமரைபுரையுந்தடங்கணானே. 3
    அவ்வேலைமலைவிமலை புறத்தோடிக்கூவென்றமலைகாட்டச்,
    செவ்வேளீன் றிடுமிலிங்க நாயகனன்னவனெடுத்தல் செய்யாவண்ண,
    மெய்வாழுங்கருணைசெய்ய முன்போலச் சினகரச் சீர்விளங்கச்செய்தா,
    னிவ்வேயினிளந்தோளி கூவென்றமென்மொழியாளெனும் பேருற்றாள். 4
    வாசவன் சாயாவனத்துளிறை பூசைநிறைவேற மகிழ்ந்தெஞ்ஞான்று,
    நேசமுறவுலகிலுள்ளவணிகரெல்லாங்குடி தழைப்பநெடி தழைத்தான்,
    காசினிசூழ்சோணாட்டிற்காவிரிப்பூம் பட்டினப் பேர்கண்டான்மண்டுந்,
    தேசுதருநாற்பத்தெண்ணாயிரநற்குடி லிரவச் செய்தானன்றே. 5
    குடிவிரச்செய்ததுஞ் சாயாவனத்துக்கொழும்பவளக்குன்றுக்கென்றும்,
    படிபுகழும்பெரும்பூசையோவாமனடாத்தி விடும்பண்புமன்றி,
    யடிகளுறைபல்லவனீச் சரமுதலாமாலையமுமவ்வாறாகி,
    நெடிது விளங்கிடும்பொருட்டாமென்பரின்பநூல் பலவுநிரப்பினாரே. 6

    விண்ணவர்கோமானமைப்பாற் குருவிலிங்கசங்கமங்கள் விழைந்துநாளுந்,
    தண்ணமரும்பெரும்பூசை யியற்றியிகபரமிரண்டுந்தமக்கேயாக,
    மண்ணுலகிலிந்நகர மிழைத்தவன்போன்மலிந்த செல்வமலர்ந்துவாழ்ந்தா,
    ரெண்ணவரும்வசியதன்மந் தடுமாறாதி னிதிருந்தங்கியன்றுளாரே. 7
    வேறு.

    எண்ணியசீரறம்பொருளோ டின்பமுறுவணிகர்குழாங்
    கண்ணியவீட்டின்பமுமேற்காண்பாராயினிதமர
    வண்ணியபேரறமுதனான்கடைந்தவராம் வெண்காடர்
    புண்ணியனார்பிறந்தபதிபூம்புகார்ப்பட்டினமே. 8
    கரிகாலன்பெருவளவன்மகள்கேள்னன்கடல்புக்கான்
    றிருவேயேவெனவழைத்துத்திரைக்கரத்தாற்றரக்கொண்டாள்
    வரைகேழ்வன் கலநோக்கிவருமளவுங்கல்லாநாள்
    புரைதீரப்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. 9
    வன்னிமடப்பளியோடு சான்றாகவரவழைத்தாள்
    பன்னியகாவிரிமணல்வாய் பாவையைநன்கேஅவனெனுங்
    கன்னியர்களொடும்போகா டிரைகரையாவகைகாத்தாள்
    பொன்னனையார்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. 10
    கூவலிற்போய்மாற்றாள் குழவிவிழத்தன்குழவி
    யவலின்வீழ்த்தேற்றெடுத்தாளயல் நோக்கம்வேறென்றால்
    மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன்வரவிடுத்தான்
    பூவின்மேற்பிறந்தபதி பூம்புகார்ப்பட்டினமே. 11
    முற்றாதமுலையிருவர்முத்துவண்டவாவிடுத்துப்
    பெற்றாற்றாமாண்பெண்பிறர்மணஞ்செய்யாவண்ணஞ்
    சொற்றார்கள்பிறந்தபெண்ணாயகனைத்தலைசுமந்தாள்
    பொற்றாமம்பிறந்தபதிபோம்புகார்ப்பட்டினமே. 12
    கன்னிகர்தோட்காளையர்கைக் காசேனுங்கற்புடையே
    னென்னுமொருமனைத்தொழும்பியேனையர் கற்பாருரைப்பார்
    நன்னகரத்தியற்போமனதிதெனத்தெற்கேகும்
    பொன்னியுடைப்படைத்தவள்வாழ்பூம்புகார்ப்பட்டினமே. 13
    வேறு.

    புயலோங்குஞ்சையகிரிப்புறத்தில்வெண்காவிரிப்பர்நகன் புறத்திற்போந்து,
    வயலோங்குஞ் சோணாட்டுமண்ணுயிருண்டின் புறவோமாலுக்கேலு,
    மியலோங்குமனையாகவிருப்பதற்கோகடலாட வெண்ணியோதன்,
    னயலோங்கும் பூம்புகார்ச்சங்கமுகத்துறையாகி யமர்ந்ததன்றே. 14
    இன்னபொன்னிமன்னுமலைக்காரகிலுமாரமும் போரிபத்தின் கோடு,
    மின்னுமணிகளும் பொன்னுஞ்செழுந்தேனுங்கொழுங்கனியும் விரைமென்பூவும்,
    பன்னரியபலவளனுங்காவிரிப்பூம் பட்டினத்துப்பரப்பவாங்கி,
    யந்நகரங்கடல்வளத்தால் யாவருக்குமள்ளியள்ளி யளிக்குமாலோ. 15
    முடக்கியபாடகக்குனிப்பிற்பற்பலதீவினிற்பொருள்கள்முகந்துநீந்தி,
    யெடுக்குமணிநாவாய்கள் நாவாய்கள்புகலரிதா மெழிற்பட்டாடைத்,
    துடக்கொடிகளசையவிசைக்காலே கவடந்தள்ளத்தள்ளாடாம,
    னடக்கமிடத்திருந்தேறிற் பொற்றேவரெழுந் தருளனாட்டலாமே. 16
    போற்றுமளகாபுரியு முயருமமராபதியும் பூம்புகார்க்குத்,
    தோற்றுறையுமாறுபெறாதேக் கறுமாற்பானாதசோதிநாத,
    ராற்றலிடங்கொண்டிருந்தார்சிவஞானவெண்காடரமர்ந்தாரன்னோர்க்,
    கேற்றநிறைகுபேரனையும்வச்சிரவாளனையுநிகரிசைக்கொணாதே. 17
    செய்யநிறப்பவளவல்லி மவுலிமணிகண்டமெண்டோட்டிருந்துமேவு,
    மையனுறைபல்லவனீச்சரமுமவிர்வரிபிரசவமுதமாந்தி,
    மையலிசைத்தேனளிக்குங்குளிர்சோலை நிலைமலியவளமாடஞ்சூழ்ந்,
    துய்யுநெறிதருஞ் சாயாவன முமவன் கோயில்களுமொளிருமாலோ. 19
    வெள்ளிமலைபொன்மலைதூமணிமலைகள்வெண்காடர் வீட்டினிட்ட
    மொள்ளியசோ தியரிவரை யாட்கொள்வானாளாகியுவந்தவந்தாற்
    றெள்ளியராம்வாக்கிவர்களுளவேனுமிங்கிருக்கச்செய்தார்போலும்
    புள்ளினொலிமலைசோலை வேதவெளிமலை சாலைப்பூம்புகாரே. 19
    கொள்வார்தம்பேரோதை கொடுப்பார்தஞ் சீரோதைகுளிர்சங்கீன்ற,
    வெள்ளாரக்கருங் கடலினோதையினைவிழுங்கியிருவிசும்பினோங்கு,
    முள்ளாருஞ் சிறுவீதிபலசாதித்தொழிலோதை யொழிவிலாவாம்,
    பொள்ளாதநாகமணி யங்கடொறும் விளக்கொளிரும்பூம்புகாரே. 20
    நாரதனாரிசைமடந்தை யிசையமுதஞ் செவிவார்ப்பநயந்து கேட்போன்,
    வாரணங்குந்துணை முலையாழுருப்பசிவாராதிருக்கும் வண்ணங்கண்ணிச்,
    சீருலகின்மானிடமாமகளாகப் பிறக்கவெனத்தேவர்கோமான்,
    போரியைந்த சாபமிடமாதவியாயவள் பிறந்த பூம்புகாரே. 21
    தெய்வமகள் மானிடமாமகளாக மானிடப்பெண்டெய்வமாகச்,
    செய்தவன் வாசவனென்னக் கண்ணகியை விமானத்திற்சேர்த்தியன்னாட்,
    டுய்யகணவனைச்சேரச்சேர்த்தினன் முன்னுள்ளமாதுறைந்தவாறாம்,
    பொய்யுரையாமாந்தர்களுமிறும்பூதுநிறைந்தேறும் பூம்புகாரே. 22
    வேறு.

    நெடுங்கருங்கோட்டுப்புன்னைநிறைந்த பூங்கொத்திற்செந்தேன்
    படுங்கருந் தும்பிமந்திப்பாட்டிடும் பொன்னிநாட்டு
    ளொடுங்கிடைமடந்தைமார்களுண்டு கொண்டாடுந்தண்டேன்
    விடும்பரிசென்னக்கானம் விளைப்பராம்பூம்புகாரே. 23
    தொக்கார்மின்னித்துன்னுஞ் சோலைசூழிடங்கடோறும்
    புக்குறாதீயமாக்கள் புகும்புனற்பொன்னிநாட்டுத்
    திக்கலாம்புகழுநல்லோர் செல்குவார்மல்குவாராய்த்
    தக்குளாரல்லார்பொல்லார்தாம் புகார்பூம்புகாரே. 24
    கன்னெடுங்குன்றந்துன்றுங் கடிகமழ்குறிஞ்சிமான
    நென்னெடுங்குன்றந்துன்று நெடுநிலப்பொன்னிநாட்டு
    மின்னெடுங்குன்றந்துன்று மின்னிடைமார்பாற் கொங்கை
    பொன்னெடுங்குன்றந்துன்றும் புண்ணியப்பூம்புகாரே 25
    வெளிதங்கும் வெண்ணெற்போர்கள் விண்ணளப்பனபோனண்ணு
    மனிதங்கிமுரலுஞ்சோலை யாலையம்பொன்னிநாட்டு
    மொளிதங்குசங்கினார மோங்குபூங்குவாலமெல்லாம்
    புளினங்கள்போன்று தோன்றும் புண்ணியப்பூம்புகாரே. 26
    வேறு.

    காரோடுங் களிற்றோடுங்கடற்றிரைவாம்பரியோடுந்
    தேரோடுங்கலத்தோடுந் தேவர்கள் செல்வர்களோடும்
    பாரோர்க ளையுறுவார்படைக்குழாமெனப்பகர்வா
    ராரோவிந்நகர் புகழ்வாரளந்தறியா வளந்தருமே. 27
    இந்நகர்போலெந்நகருமிவ்வுலகத்திடைக்காணேம்
    பொன்னகரோவெனிலந்தப் பொன்னகர்வாழ்புரந்தரனே
    மன்னியபூவினிற் போந்துவளம் பிறங்கவனைவித்தா
    லெந்நகரும் பூம்புகார்க் கேற்றமிணையிலவாமே. 28

    பூம்புகார்ச்சருக்கமுற்றிற்று.
    ஆக--திருவிருத்தம். 54.
    _______________________________

    2. ஆட்கொண்டசருக்கம் (55-192)


    மடைமருதநறும் பழனங்கரும்புகளும் பெருஞ்சாலிவளங்களோங்கப்,
    புடைமருதவனஞ்சூழத்தவமியற்று முனிவர்குழாம்புகழ்ந்துபோற்ற,
    விடைமருதிலிருந்தபிரானிருங் கருணைத்திறம்பிறந்த வியல்பினாலே,
    படைமருதந்தரவளவெண்காடரை யாட்கொண்டதொருபரிசுசொல்வாம். 1
    வேறு.

    பொன்னிலங்கிய பூம்புகார்ப்பட்டினந்
    தன்னின்மன்னுந் தலைவர்கலைகளாற்
    பன்னரும்புகழ்ப் பட்டினத்துப்பிள்ளை
    யென்னுமிக்குடிநாமமியன்றுளார். 2
    கருணையாளர் வெண்காடரெனும்பெயர்
    மருவினார்மணிவண்ணனின்வாழ் குவார்
    பொருவிலாச்சிவபுண்ணியநண்ணினா
    ரிருவிசும்பினமரருமெண்ணவே. 3
    கலங்களெண்ணில் கடலிடையோடுவ
    நிலங்கள்புக்கு நெடுந்துலை நீணிதிக்
    குலங்கள் கொண்டு குலாக்கொடுமீள்குவ
    வலங்களாயிரமாயிர மென்பவே. 4
    காணுமின்னவைகற் புடைமாதாரார்க்
    காணியாங்கலமாயிரமென்பரால்
    வாணிகேள்வன் வகுத்ததன்றிச்செல்வ
    நீணிலாமுடி நித்தனளித்தவே. 5
    கற்பகப் பெயர்க்காமருதாருவும்
    பொற்புநீடிய பூமணிச்சங்கமும்
    நிற்பகற்பக வெண்காடர் நின்றதா
    மற்புதத் திருவெண்காட தாகுமே. 6
    அரசருமிவர்க்கஞ் சுவர்நெஞ்சுளே
    பரசுபாணிப்படையுடைப்பண்ணவன்
    விரதநிற்கும்விறலுடையோரென
    முரசுமும்முரசும் முழங்கும்மரோ. 7
    முன்றிறோறு முழுமணிவாளொளி
    குன்றலில்லிடியர்குழாங்களுந்
    துன்றுமென்றுந் தொடுகடன்ஞாலத்து
    ளொன்றுமீங்கிவர்க்கொப்பல வென்பரால். 8
    கோடிசெங்கதிர்கூடியுதித்தென
    நீடுசோதி நிமலரைப்பாடுதற்
    காடுமன்புவந் தங்குரித்தங்குரித்
    தீடுகொண்டங் கிருக்குமியல்பினார். 9
    கற்றகல் வியுங்கேள்வியுங்காண்குறிற்
    குற்றமின்றிக்குணங் கெழுகொள்கையார்
    முற்றுமீங்கிவர் நன்குமொழிகுவார்
    செற்றமேவுஞ் சிவனடியார்களே. 10
    சத்தியாங்குறு சம்புவின்றாண்மனம்
    வைத்தசெல்வமுமண்ணினமக்குறா
    துய்த்தசெல்வமு முள்ளுமுள்ளத்தராய்
    வித்தகத்தர் விளங்குமந்நாளிலே. 11
    வேறு

    மஞ்சு சூழ்தரத்தேன்றுளிப்பூந்துணர்வயங்கச்
    சஞ்சரீகங்கள் சஞ்சரித்திசைத் தமிழ்தழைக்க
    வஞ்சலித்தமர் முனிக்குழாமாரழலோம்ப
    வஞ்சமில்லரன்வாழ்வதுமருதமாவனமே. 12
    அவ்வனத்திடைமருதிடத்தருளுருக்கொடுசீர்ச்
    செவ்வியானந்தத்திருப்பொருளிருப்பது தெளிந்தே
    யிவ்வுருக்கொடுதிருப்பொருளிருப்பதென்றுணராப்
    பவ்வநான்மறையவைவலோரெங்ஙனம்பகர்வார். 13
    அப்பொருட் குருவுருவுகொண்டானிழற்கதுவிச்
    செப்பவவ்வுருமுனிவர் நால்வருமுளந்தெளிந்தா
    ரிப்படிக்கலாற்றேவருள் யாவுமேயறியா
    ரொப்பிலப்பொருளுவு கொள்ளாதெனவுரைப்பார். 14
    அந்தமாந்தருங் கண்டருங்கதிவிதியடையச்
    சந்தாமாவிலிங்கப்பெயர் தாங்குசெஞ் சடையோன்
    சிந்தையன்பினாற்புடவியிற் செறிந்தமானவர்கள்
    நத்துவானவர் போற்றவீற்றிருக்குமந்நாளில். 15
    ஏகநாயகனாகிய தன்னிருத்திருத்தா
    ளாககூன்றுகாலங்களும் பூசைசெய்தருள்வோன்
    மாகநாடரும்பணி சிவமறையவன் வறியோன்
    போகமாகவும் பூங்கதிபுகுத்தவும் புகழ்வோன். 16
    மனைவிபோயவன்றனிமையோன் மனங்கவன்றிருப்போ
    னினியமாமனையாட்டியைப் பெறும்படி யெண்ணிப்
    புனிதநாதனைப்பூசனை முடிவினிவிற்போற்றிக்
    கனகமீந்தருடோகைபாகாசெனக்கழறும். 17
    அன்பினிற்பிரியாதவள் பாகவென்றன்னோ
    னன்பினிற்பிரியாவகை யநுதினமிரப்ப
    வன்பினிற்கன்பனாகியவமுதனாதலினா
    லன்புருக்கொடு வருவதற் கிசைந்தன னருளால். 18
    18)

    அன்னவேதியற்கருந்தனமளிப்பவுங்களிப்பா
    லின்ன்றீர்ந்தவெண்காடர்க்குக்கதியளித்திடவு
    மன்னுபூவுகத்துளோர்கண்டு வாழ்வுறவு
    மென்னையாளுடைப் பரம்பரனொருவடிவெடுத்தான். 19
    மருதவாணனென்றொரு பெயருலகெலாம் வழுத்தப்
    பருவமெண்ணிரண்டாண்டுடைப்பண்ணவனாகிக்
    கருதினுங்கணிற்காண்பினுங் கேட்பினுங்கலந்தோ
    ருருகுமன்பினன்றன்னைத்தானருச்சனையுவப்போன். 20
    எழுதுமென்கணக்கியாவையுமறிபவருன்னன்
    மழுவிளங்கெழுத்தாணியாத்திரித்துவாண்மலர்க்கைப்
    பழுதில்புத்தகத்தேடுநீடேடெனப்பரித்து
    மழகுதுன்றிவன்யாவனென்றி யாவருமறிய. 21
    பிட்டுவட்டவான் கடலிடைப்பிறந்தகாரால
    மிட்டபிச்சை வேட்டுவன்றசை சேந்தனாரீந்த
    கட்டுமட்டவிழ்போல வெண்சோறுகைக்கொண்டு
    முட்டநின்ற தாட்டாமரைப்பூ மகள்முடிப்ப. 22
    வந்துநம்பிவாழிடவகையிடைப்புக்குமிக்க
    கந்தமார்கடுக்கையுறுகண்ணியன் கனிவா
    விந்தவாரமுதுண்டிடச்சுவைக்கறியீக
    வந்தணாளவென்றறைதலும் பூசுரனறைவான். 23
    அறுசுவைக்கறியமுதுநின்வாக்கினாலறிந்தேம்
    நறுமைமேவிய சிறுவகேளெனவிறைநவின்றா
    னிறைவணங்கையிலன்னமங்கோரிடத்திருத்தி
    யுறையுமில்லற நங்கையெங் கேயெனவுரைத்தான். 24
    போன்னுலாவியசெஞ்சடைப்புராதனன்புகல
    வன்னவேதிய னியம்புவா னமருமில்லறத்தாள்
    மன்னுநாயக னுலகுளா ளென்றுரைவரைய
    வின்னும்வேறொருகன்னியைமணஞ்செய்வீரென்றான். 25
    வேறுமிங்கொருகன்னியைவேட்பதற்கன்னோன்
    பேறுகாண்கிலேன்வறுமையெம்பே றெனப்பெற்றே
    னாறணிந்தவர்திருவுளமின்னதென்றறியேன்
    றேறுமன்னவர் நினைப்பரேற்றிருவெலாஞ்சேரும். 26
    என்றவாய்மோழிகேட்டலு மெழுந்திளங்காளை
    நின்றதாய்தமரொன்றிலேனிகழுமெப்பொழுது
    மொன்றுலோகத்திற்றொழிலெலாம் வல்லமையுடையே
    னென்றனைக் கொடுவிற்றுநீர்வறுமைதீர்ந்திடுவீர். 27
    சொற்றுளேனெனப்பூசுரனினவுளந்துளங்கிக்
    கற்றகல்வியான் மேல்வருவனமனங்கருதி
    யிற்றைநாளுனைவிற்பனேல் விளைவதிங்கென்னோ
    பற்றிலேனின்னகாரியம் பழுதெனப்பகர்ந்தான். 28
    பழுதடைந்திடிற் பரிகரித்திடலுமென்பார
    முழுதும்வல்லவனெவ்விடத்தியாவையுமுடிப்பா
    னெழுதுமாவண மீங்கிவர்க்கண்டெனவிசைத்தாற்
    றொழுதுநீதியாய் முடிவுறுமிவ்வணந்துணிவே. 29
    நீதியின்றிது சிறுவநீ நிரப்பியவார்த்தை
    வேதியர்க்குழாமரசராளேவலோர்வினவிற்
    றீதுசெய்குவார்வைகுவார்சிறுநகை செறிப்பா
    ராதலாலிவை தவிர்தலேயறனெனவறைந்தான். 30
    அஞ்சலையநீர்விலைக்குறவிற்பதேயழகா
    லெஞ்சலில்பொருடருவதற்கிசைந்தியானிசைத்தேன்
    வஞ்சமில்லதோர்புண்ணியமென்னுழிவருமாற்
    செஞ்சொலாமெனப்புண்ணியன்றேற்றிடத்தெளிந்தான். 31
    தெளிந்தபூசுரனாவணம்பழம்படித்தீட்டி
    விளங்கநல்கினோன்றனைக்கொடுகோயிலுண்மேவி
    வளங்கொணாதனைவிடைகொண்டு பூம்புகார்மருவக்
    களங்கமொன்றிலான்படர்ந்தனன் காவதமநேகம். 32
    சுந்தரப்பெருமாணையினார்க்கு முன்சுடர்ப்பொன்
    றந்தவள்ளியோனவர்குலத்தலைவரா மொருவற்
    குய்ந்திடப்படிக்கா சளித்தவனிவருடன்போய்
    நந்தலில்லவாந்தமனியமீகுவானடந்தான். 33
    சங்கவான்றமிழ்மதுரையிற்பாணனார்தமக்குத்
    துங்கமாகியவாளெனவிந்தனஞ்சுமந்தா
    ரிங்குமாங்கதுபோன்றனராட்கொள்வானெண்ணி
    யங்கவாருயிர்யாவையுமடிமையுமடியாவுடையார். 34
    புக்குளாரிலர்புகாரெனும்பட்டினப்புடைபோய்
    மிக்கநீதியால்வாழ்வணிகேசர்தம்வீதிப்
    பக்கமேவிலைபகர்ந்தனர் பகரலும்பரிவாற்
    செக்கரஞ்சடைமுடியவரடியவர் தெரிந்தார். 35
    மறையவன்றனையிறையவன்றனைவரவழைத்துக்
    குறையுறாதவெண்காடர்முற்காரணக்குறியா
    லுறையுமீங்கிவனிடத்ததிசயமென்கொலுரையீர்
    நறையுலாவியவிடைமருதுடையநாயகரே. 36
    இயம்புமம்மொழிக்கெதிர்மொழி யிவர்சொலாமுன்னர்
    நயம்புணர்ந்தவாளாயவனலங் கொளநவில்வான்
    வயங்குநன்மணியாவையும்விலைநிலைமதிப்பே
    னியங்குபற்பலதொழிற்குமீங்கெனக்கு நேரெவரே. 37
    எனுமவன்றனைமகிழ்ச்சியானோக்கி யெம்மிடஞ்சேர்
    வனமறாமணி விலைமதிப்புறாததுமதித்தா
    லனையவன்சொன்னதொக்கு மென்றருமணியளித்தார்
    புனிதவாண்மணிமதித்தனன்பின்னரும்புகல்வான். 38
    நவமணிக்கணவிலக்கணமியாவையுநவில்வேன்
    கவலுநெஞ்சிலாத்தலைவர்நீரன்னதுகாணத்
    தவமியற்றினீர் முன்னரேதிருவெலாந் தழைப்பப்
    பவமகற்றவும் பெற்றுளீரறிவெனப்பகர்வான். 39
    வேறு.

    பார்க்கவ முனிவன்சொன்னபடிவலாசுரன்றவங்கள்
    சீர்க்கவேசெய்யச்செய்யச்சிவனவன்முன்னர்த்தோன்ற
    வேர்க்கின்றதவங்கணன்று வேண்டியதென்னையென்னத்
    தார்க்கொன்றை மௌலியானைவணங்குபு சாற்றுகின்றான். 40
    என்னுடைவடிவமெல்லாமினமணிவடிவமாக
    நின்னதுகருணையாலேயருள் கெனநிமலனீந்து
    முன்னரேமறைந்தபின்னர் முனைவலாசுரனும்போந்து
    பன்னருமகவான்யாகப்பசுவெனத்தயாலி ன்வந்தான். 41
    வந்தவப்பசுவைப்பற்றிவச்சிராயுதத்தினாலே
    யுய்ந்திடவுரிந்துகொண்டவுறுப்பினைவிண்ணோருண்ண
    வெந்தவவ்வுறுப்புத்தப்பி வீழ்ந்தனவித்தாய்மண்மேற்
    சிந்துவிற்பொருப்பிற்றீவிற்சிறந்தநாட்டினிற்பரந்தே. 42
    விளைந்தனமணிகளாகவிண்ணவர்மண்ணோர்பூண்பார்
    வளம்படு வெற்றிவீரவலாசுரனுடல மொன்பான்
    களங்கமின்மணிகளாகிற்புனிதமேகாண்மினென்ன
    விளங்குலககுபகாரத்தால் வீந்தனன்புநிதமாக. 43
    மன்றுளேயாடு மெங்கண்மாணிக்கக்கூத்தானார்க்கு
    நன்றிசெய்வார மேழுநவமணிவிழாவிற் பூண்பா
    ரென்றிடிற்சங்கையிங்கேனிவைதரிப்பவர்க்கு வென்றி
    யொன்றியவீரஞ் செல்வமோங்குமென் றுரைக்குநூலே. 44
    மலரணிமாலைமேலாமணியணிவண்ணமாலை
    விலைமணித்தாரைப்பற்றமாணிக்கமாலைமேலாம்
    பலமெனவாகமத்தும் பகர்தருமாதலானு
    மிலகியமணிகடேவர்யாவரும்பூணலாமே. 45
    ஞாயிறுமாணிக்கங்கோமேதகந்திங்களாரம்
    வாய்வயிடூரியஞ்செவ்வாய்வளப்பவளமாகு
    மேயவன்புதனிற்பச்சை வியாழமாம்புட் பராகங்
    காய்கதிர்வெள்ளிவச்சிரங் கடுஞ்சனிநீலங்காணே. 46
    பசுவென்புவயிரம்பல்லு பனிமுத்தங்குருதியோதில்
    வசையறுதிருமாணிக்க மயிர்வயிடூரியங்கண்
    டசைபவளங்கணீலந்தரும்பிச்சுபச்சைமெச்சு
    நிசகவம்புட்பராக நிணங்கோமேதகமென்றாமே. 47
    வயிரமுத்தந்தணாளன் மாணிக்கம்பவளம்வேந்த
    னயமலிபுட்பராக நல்லகோமேதநீதி
    வயவயிடூ ரிய மூன்றும் வாழ்வுறுவணிகனாகு
    மியலுடைநீலம்பச்சை யிரண்டுஞ்சூத்திரனாமன்றே. 48
    படிகமஞ்சனக்கற்கூட்டிப்பதினொருமணியாச்சொல்ப
    முடிவுறுமிம்மணிக்கு முக்குணப்பிரிவுஞ்சொல்வாம்
    வடிவுறுபடிகமுத்துவைத்தசாத் துவிகமாமால்
    விடுதுகிர்மாணிக்கங்கோமேதகமிராசதம்மே. 49
    அஞ்சனக்கல்லு நீலமாலுந்தாமதமாகு
    மெஞ்சில்சாத்துவிகத்தோடு மிராசதங்கலத்தல்வச்சிர
    மஞ்சுறு புட்ப ராக மணிவயி டூரியமாகுந்
    தஞ்சராசதங்கலந்தசாத்விகம்பச்சையாமே 50
    நவமணியர்ச்சித்தற்கு நறுமலர்ப்புனைதல்சொல்வாந்
    தவறின்மாணிக்கத்திற்குத்தாமரைப்பூத்தரிக்க
    வுவகையாமுத்துக்கோதுமொண் சிறுசெண்பகப்பூ
    சுவைபடுபவளம்பார்க்கிற்கமழுஞ் செவ்வல்லிப்பூவே. 51
    மரகதங்காந்தம்புட்பராகமல்லிகைப்பூவச்சிர
    நுரைதருநீரிற்பூத்தநுாறிதழ்த்தாமரைப்பூ
    கருநீலங்கருவிளங்கோமேதகங்கமழுங்காவி
    திரைவயி டூரியப்பூத் தேம்படு வெண்மந்தாரம். 52
    தூயநனிலத்திலொத்தசுத்தபீடத்தைவைத்து
    மேயவப்பீடமீதுவெண்படாம்விரித்துவைத்துப்
    பாயவப்படத்து நாப்பண்பதுமராகத்தைவைத்துச்
    செயவாதவனுதிக்குந்திசைமுதற்றிசைகடோறும். 53
    கோமேதநத்துமுத்துக்குளிர்வயிடூரியஞ்செந்
    துாமேவுபவளம்பச்சை சுந்தரப்புட்பராகம்
    யாமேவுவயிரநீல மெண்டிசைவலஞ்சூழ்வைத்துப்
    பூமேவமுன்னஞ்சொன்னபூவினாற்பூசைவெய்வார். 54
    தோன்றியவயிரமென்றசொல்லுக்குப்பொருளென்னென்னின்
    மூன்றுலோகத்திலுள்ளமுறையுலோகங்களெல்லாங்
    கீன்றவைதுளைக்குந்தன்னைக்கிளைபடைதுளையாதென்று
    மான்றவிச்செய்கையாலப்பெயர்பெற்றுமேலுமாமே. 55
    ஒருவலாசுரன்றதீசியுடலென்புவீழ்ந்ததேச
    மரதனநாடென்றாகுமத்தேசங்கெளசலாதி
    வருமதிலுதித்தவச்சிரம்வாகைப்பூநிறத்தவாகும்
    புடைகலிங்கத்துதித்தவயிரம்பொன்னிறத்தவாமே. 56
    மாதங்கதேசவச்சிரமல்லிகைமலரின்மேனி
    பீதஞ்சேரிமயவெற்பிற்பிறந்தன தவளமேனி
    தீதங்கின்மாராட்டத்திற்செனித்தனசிவத்தமேனி
    யோதுஞ்சவ்வீரதேசத்துதித்தனகரியமேனி. 57
    பேசியபௌண்டரத்திற்பிறந்தனகுவளைமேனி
    யோசையேமக்கதேசத்துதித்தபொன்னிறத்தவிப்பால்
    பூசியவாகைவாழை மூங்கிலின் பூநிறத்த
    மாசிலாவச்சிரங்கட்கச்சுதன்றெய்வமாமே. 58
    ஓரமாறாய்வெளுத்தவயிரத்தேயும்பர்கோமான்
    பாரியபசுவின்கொம்பிற் பலநிறவயிரங்கூற்றாங்
    கூரமுள்ளிலவம்போது குலாவியபலாசம்பொற்பூச்
    சீரியவயிரத்திற்குத்தெய்வமிவ்வாயுமே. 59
    கோங்கலர்நிறஞ்சிறந்த குறையுறாவயிரத்திற்குத்
    தேங்கியநாராஞ் சேருந் தெண்டிரைவருணனாகு
    மோங்கு நீர்நிறவச்சிரத்திற்கொளிகொள்வெண்டிங்கட்டேவன்
    பாங்குறுகோபமேனிவயிரத்தே பரிதித்தேவே. 60
    தீநிறவயிரத்திற்குச்செய்யதீக்கடவுட்டெய்வ
    மானவிவ்வயிரத்துள்ளு மமைந்தநாற்குல முமுண்டு
    வானுறுபடிகம்பாயுமுயற்கண்வாழைக்குருத்து
    நீனிறைகார்வானத்து நிறமணிமறையோராதி. 61
    வயிரங்கணான்குமந்தவருணத்தோரடைவிற் பூண்பார்
    செயிரொன்று முறாவிவற்றுட் செங்கதிர்வயிரஞ்செப்பிற்
    பயிலுறுவிலைமதிக்கப்படாத்திற்பணிகள்பூணார்
    தயிரியஞ்செல்வமாரோக்கியந்தருந்தரிக்கலாமே. 62
    அரசர்தமௌலிமேலுமணியொணாவரசிமார்க்கு
    மருவியதாலிப்பூணில்வயிரத்தாற்பண்ணவொண்ண
    பரவுமிவ்வொன்றுமன்றிப்பற்பலவயிரத்திற்கு
    மிருமைசூழ்குணங்குற்றங்களின்னுமிங்கியம்பலுற்றேன். 63
    துவன்றிடுதாரைசுத்தி நோய்மையிந்திரசாபம்நே
    ருவந்திடுபலகையாங்கணோக்கிய வெண்கோணங்க
    ளவந்தவிராறுகோணமைந்து கோணங்களாக
    நிவந்துளகுணங்களேழா நிகழ்த்துபமணி நூல்வல்லோர், 64
    குலவியதாரைகேடுகொடுந்தாரைமழுங்கல்கீற்று
    மலமொடுகாகபாதம் வருதுளைபிளத்தல்விந்து
    பலகொடிகெடுதல் கோடிமுரிதல்சப்படியிருத்து
    விலகியகுற்றமீரா றென்றனர் வென்றிநூலோர். 65
    அம்புவாளிம்பர்தையாவாட்படைஞாட்பில் வெல்வார்
    செம்பொருட்சிறுதேசத்தார் செலுத்துவர்பஃறேயங்கள்
    பம்புநல்குரவு பூதம்பசாசுபாம்பங்கி தீண்டா
    நம்பமுன்சொன்னசூரியநல்வயிரங்கொள்வார்க்கே. 66
    இனிமுத்தின்குணமுருட்சியிலும் வான்மீனின்றேசு
    கனமறுவின்மைநோக்கிற்கவினுறல்படிகநன்று
    வினவுமண்ணேறல்சென்னீர்சிவப்புமென் முகங்கறுத்த
    லினமருளிவற்றினோடு கோணலென்றீரைங்குற்றம். 67
    பனிமதிகதலி மேகம்பைந்தொடி கழுத்தாவின்பற்
    றனியானையேனக்கொம்பு தடங்கராவுடும்பு கொக்கு
    வினையராச்சலஞ்சலஞ்சங்கிப்பிமீன் மூங்கிற்பூக
    நினைசெந்நெற்கரும்புகஞ்ச நிகழிருபது முத்தீனும். 68
    இருபதுமுத்தீன்றாலுமிப்பியின் முத்தேநன்றால்
    விரவுமைப்பசியிற்சோதி மின்னெறிசிறிதுநாளில்
    வருமிப்பிவாயில்வீழ்ந்தமழைத்துளியொளி முத்தென்ப
    தருமணிநெடுநாட்செல்லிற்றாய் வயினுருகியொன்றும். 69
    தடங்கலிலிங்கைமூதூர்ச்சமனொளிசூழ்ந்தபாங்கர்
    மடங்கலிலலகையாறு மாவிலிகங்கைதங்கி
    யிடங்கொள்கம்பலையினோடு கல்லிணையெனு நான்காற்றிற்
    றிடம்படவிளைமாணிக்கத்திறங்களுமறிந்துசொல்வாம். 70
    குருவிந்தமொடுசாதாங்கங்கூறுகாவாங்கநன்மை
    மருவுசௌகந்தி நான்கின்வடிவினிற்குணங்களீரா
    றுருவினிற்குற்றமீரெட்டொளிக்குணமிருபத்தொன்பான்
    பரவெளிக்குற்றந்தீரப்பன்னிப் பின்பகரலுற்றாம். 71
    செங்கையிலெடுக்கிற்றேய்க்கிற றீயினிற்சேர்க்கிற்றூக்கிற்
    பங்குறுதகட்டிற் குச்சி னிற்பகர் வெயிலினள்ளின்
    மங்குதலிலாவோரத்தின் மருத்திற்கைக்குறியினெய்த்துத்
    தங்குபார்வையினினேர்ந்து சிவந்துசார்குணமீராறே. 72
    கருகுதல்போதில்செம்மண்கரும்புகையிறுகல்கோபந்
    திருகுதல்முரண்டராசுமத்தகங்குழிதல்செப்பில்
    விரவியபுடாயம்நெய்ப்பில் காற்றிலைச்சுமியேவெச்ச
    மிருமைதீர்சந்தைகேடென்றிவைகுற்றம்பதினாறாமே. 73
    சாதகப்புள்ளினோட்டந்தாமரைகாவிகோபங்
    கோதின்மின்மினியாதித்தன் கொழுங்கனலெரிவிளக்கு
    மாதுளங்கனிப்பூப்பத்துஞ் சாதாங்கமணிக்குணங்கா
    ணோதியகுருவிந்தத்தினொளிக்குணமினிமேற்சொல்கேன். 74
    செம்பஞ்சோடரத்தநல்ல திலகநீளிலோத்திரஞ்சீர்
    நம்பியமுயலின்சோரிநக்க சிந்தூரங்குன்றி
    வம்புறுமுருக்கம்போது வரு மெட்டாம சோகுசெம்பஞ்
    சம்படுமலரி செம்போடிலவம்பூவருங் குயிற்கண். 75
    இவ்வாறுஞ் சௌகந்திக்காமெழிற் குணமினிக்காவாங்கின்
    மெய்வாய்த்தகுணங்கார்ப்பூவெண் கோவைசெங்கமலமஞ்சள்
    துவ்வாயகுங்குமம்போற் சொல்லொளியோரைந்தாகு
    மவ்வாயமணிக்குணங்களாகவோரிருபத் தொன்பான். 76
    நீலத்தின்குணங் காயாம்பூ நெய்தற்பூக்குல்லையப்பூக்
    கோலியகுழக்கன்றின்கட் குயிற்கழுத்தவிரிச்சாறு
    வாலியமேகமெட்டாங்கிட்டமஞ்சணிதராசு
    மேலுமன்பிணிகொள்வச்சமிரசஞ் சர்ச்சரையெட்டீனம். 77
    பவநனகுணஞ்சிந்தூரம் பன்னுசெம்மணிச்சங்காய
    துவமுசுமுசுக்கைவீரை தூதுணம்பழம் போன்றாறாங்
    கவைமுடந்துளை கறுப்புத் திருகுதல்வெளிறல்கல்லென்
    றிவைகளோராறுங்குற்றமென்பர் நன்புலமையோரே. 78
    பச்சையின்குணங்களோதிற் பசுங்கிளிமயிற்கழுத்து
    மெச்சிளம்பயிர்பொன்வண்டின் வயிறுமின்பொன்பசுத்தல்
    நிச்சயப்பத்திபாய்தனெய்ப்பெழாவெளிறுகண்மண்
    கச்சிடுந்தராசங்கற்றல் கருகுதல்பெறலேகுற்றம். 79
    தழைவயிடூரியம் பொற்றகட்டினின்முலைப்பால்வார்ப்ப
    வொழுகியவொளியாங் கோமேதகம்வயிடூரியத்திற்
    றழுவுதன் மேனியாம்புட்பராகம் பொற்றகட்டிற்றேன்பாய்
    முழுநிறமாமிவைக்கு மும்மணியென்றுநாமம். 80
    அத்தனாரீச்சுரத்தால்வருமணிப்பச்சைசெம்மை
    யொத்தொருநிறமதாக்குமொள்ளெரி யொளிவெள்ளாரம்
    வித்துருவங்களென்றும் விளைவின்றிவிளைவிப்பார்க
    ளுய்த்தகண்மணி யானொக்கினெண்மணிபோலுமாலோ. 81
    நல்லியற்கோரவல்லி நாட்டியகனக்கோர
    வல்லிசொல்லியவாமற்றுமணிகளுமேரு வெற்பிற்
    சொல்லியனடவாநிற்குந் துணைமணிவிடங்கடீர்க்கு
    மொல்லியன்மணிகள்யாவு மும்மணியாகுமன்னோ. 82
    மானாகமீன்றவான்றமணிகளுமான்மார்பின்க
    ணானாதமணியுஞ் சிந்தாமணியுமாங்காங்கறிந்து
    வானாடர்மகுடக்காசுமதிப்பனவருமென்றென்று
    பூநாகஞ்சடைக்கணிந்த புண்ணியனருளிச் செய்தான். 83
    மற்றுளதொழில்வெவ்வேறுவல்லமைசொல்லு நல்லோன்
    குற்றமில்குணத்தானென்று குறித்தனர் திருவெண்காடர்
    செற்றமில் சிந்தையிந்தமைந்தனே திறைகொண்டானென்
    றிற்றுணர்ந்தந்தணாள ரெழின்முகநோக்கிச் சொல்வார். 84
    (84)

    என்னுடையிடத்திலந்த மைந்தனுற்றிருத்தல்வேண்டு
    மன்னவன்றனக்குப்பொன்னோராயிரமளிக்கேன் முன்னாட்
    பன்னியமூலவோலைபலரறிதாலவோலை
    யின்னரேநல்கீரென்றார் நம்பியுமியைந்தானன்றே. 85
    ஒருவனைமணம்விலக்கியுற்றவன்றொண்டு கொண்டு
    பெருகுமாவணமுங்கொண்டோன்பிறங்குமங்கவன்குலத்தாற்
    கிருமணஞ்செய்துவன்றொண்டாகியாவணமீவோன்போன்
    றருளினால்வந்தவன்றனாவணந்தனங் கொண்டீந்தான் 86
    ஈந்தபினெழுந்து நம்பியேகநாயகனையேத்தி
    வாய்ந்தவெண்காடர் நீடமாசிலாசிகளுங்கூறிப்
    போந்திடமருதிற்புக்கு புதுமணம்புணர்ந்துவாழ்ந்தான்
    சேந்திடுமருதவாணன்செய்கையேமேலியம்பலுற்றாம். 87
    மருதவாணனைவெண்காடர்மகண்மையாக்கொண்டதன்றி
    யுரிமைகூரடிமாயாக வொருகணப்போதுமெண்ணா
    ரருளினாலிவனுமந்தமன்பருக்கன்பனானான்
    றெரிவராதிவருந்தானுன்திருநெல்வேலியின் வெயொத்தார். 88
    இவ்வாறிங்கொழுகுநாளி னெழிற்றொழில்வாணிபங்கள்
    செவ்வானமேனியன்பாலளித்தனர் திருவெண்காட
    ரொவ்வாததுறைகடோறு மூதியமதிகமாக்கித்
    தெவ்வானபெயரும்வந்து திறையிடச்செய்வித்தானே. 89
    செய்திகளிவையுமன்றிச் சிந்துயாத்திரைக்குப்போந்திங்
    கெய்திடல்கருதியாங்குமிங்கும்வேண்டியவையாவும்
    பைதிரமதிக்கச்செய்து பற்பலசரக்கு மொக்கப்
    பெய்தனர்கலங்கொடுய்த்தார் பெருந்திருநீங்காதோங்க. 9
    ஓங்கியகலத்தினாளுமோரையுஞ்சேர நோக்கிப்
    பாங்குறக்கண்டுகொண்டுபகட்டுமாமுகத்துவள்ளற்
    காங்கணியினியசெந்தே னமுதமோடளாவிநல்கித்
    தீங்கிலாதானையேத்திச் செழுங்களிபிறங்கினாரே. 91
    அருங்கலமீதுபோது மமுதனைக்கங்கைநங்கை
    கருங்கடல்வடிவாய்த்தானுந் தாங்குதல்கருதினாள்போ
    னெருங்கலைக்கரத்தாலேந்த நெடுங்கடலோடிநாடி
    மருங்குறுவணி கமாக்கண்மனங்கவலுறாதுசென்றாள். 92
    சென்றுநாடியதோர் தீவிற்சேர்ந்துதான் கரையைச்சார்ந்து
    வன்றிறச்சரக்குமாற்றி மறுசரக்கேற்றிப்போற்றிக்
    குன்றினின்றிழிவார்போலக்குரைகடல்கலத்தானீந்தி
    மன்றலங்க்கொன்றைவேய்ந்த வாண்டகைமீண்டுவந்தான். 93
    வந்தவாணிபத்தாற்பெற்றவளமெலாம்வளர்பொன்னாக்கித்
    தந்தனன்றிருவெண் காடர்தருக்கறாமகிழ்ச்சிபொங்க
    வெந்திறல்விடையினார்க்கு வேண்டியசிறப்புநல்கி
    யுய்ந்திடச்செய்தாரிவ்வாறொழுகினான்வழுவிலாதான். 94
    மந்திரத்தலைமைசான்றமதிமுதுசேந்தனாருஞ்
    சந்ததங்கண்டுகண்டு தம்முளேமகிழ்ச்சிபொங்க
    வந்துறுமருதவாணன்வனப்புறுசிறப்புவாய்ப்பச்
    சுந்தரம்பலிப்பச்செய்தார் சூழழுக்காறிலாதார். 95
    பின்னருமாரவாராப்பெருங்கடற்புக்கும் போந்துஞ்
    சென்னியனாளுறாத தீவினுமரும்பண்டங்க
    னின்னிலமதிக்கக்கொண்டுவருமிருங்கலங்களோட்டுந்
    தன்மைமீகாமரெல்லாந்தங்கண் மீகாமனென்பார். 96
    ஆயதன் கருணையாகுமலைகடலிடையானந்தத்
    தூயமாக்கலத்திலேற்றித் தொகும்பொருட்டனையேநல்க
    மேயசீர்வெண்காடர்க்கு விளையாட்டுகாட்டிநாட்டு
    நாயகனின்னவாறுநாடகநடிக்குமாலோ. 97
    இன்னம்பரெனு மூதூருமிருக்குமிவ்வணிகனம்ம
    பொன்னம்பர்கமழுமாழிப்பூவம் பர்புழுகுசாந்த
    மின்னம்பர்மாலாரம்மைமேருமால்வரையாம்வில்லர்
    நன்னம்பரென்றுகாணா நல்லவெண்காடர்க்கீவான். 98
    பரந்தபாய்விரியா தோட்டும்படரெதிர்காற்றிலோட்டுஞ்
    சரம்படர்வதுபோலோட்டுந் தடங்கடற்குதிரைநாவா
    யரந்தையாற்றத்தார்பூட்டுமவர்களை நகைத்துநோக்கும்
    வரந்தருமருதவாணன் வருதிருவிளையாட்டன்றே. 99
    இவனிவெணங்குளானோவெண்ணருந்தெய்வங்கொல்லோ
    தவறிலாமோகர்சித்தர் தம்மிலீங்கொருவனேயோ
    வவலமொன்றில்லானிந்தவாண்டகையென்றென்னும்
    பவர்திருநீங்காதோங்கும்பட்டினம்பகருமாலோ. 100
    சிறிதுநாளின்னவாறு திருவுறச்சரித்தபின்னர்
    மறுவிலான் முன்போலின்பமரக்கலம்பாய்விரித்து
    நெறிசெறிவணிகரோடுநெடுங்கடலொருதீவத்துப்
    பொறியுறப்போந்திருந்து புரிந்தவாபுகலலுற்றேன். 101
    வேறு.

    கொடுபோகியசரக்கெங்கணுங்குலவாவிலைநிலவத்
    திடமேலிடுநற்பொற்கிழி சேமத்திடையொடுக்கிக்
    கொடைமேம்படலாகித்தெரிகுரவோர்மடம்பலபோய்த்
    தடநீடியபுகழ்வேண்டினன்றாழாதறம்புரிவான். 102
    அலந்தோர்களுக்களித்தும் நெறியறிமாதவர்க்களித்தும்
    நலந்தீங்கினரென்னாதறநல்கூர்ந்தவர்க்களித்துங்
    கலந்தேபொருந்தினர்யாவர்க்குங்கடனாவுடனளித்தும்
    நிலந்தேறிடத்தேவேசர்க்கு நிதிவேண்டியதளிப்பான். 103
    உடன்போந்துளபடுமாந்தரு முடையானறிகுவனே
    லடங்காதிவன் புரிகாரியத்தாற்றீங்கிழைத்திடுமால்
    முடங்காதினியாமாகவிம்முறைகூறிடின்முனிவான்
    வடந்தாங்குமென்முலையாரொடுமருவாதொருநலனே. 104
    என்றென்றவர்மொழியப்பொழியேமக்கொடையுடையோன்
    குன்றொன்றினைவகிர்செய்தறங் குறையாவகைநிறையப்
    பொன்றங்கியதிருவாலய மெடுப்பிப்பது பொருட்டா
    னன்றொன்றியநிமித்தக்கிளை நாட்டிப்பொருள்பூட்டி. 105
    மாலிங்கமெனத்தான்முளைத்திருந்தான்மணிகண்ட
    னாலிங்கனம்பொருந்தாவுடையாளும்பெறநாளுங்
    கோலஞ்செய்சோபானம்முதற்குளிர்தூபியந்தஞ்செய்
    தேலும்படிகோலும்படியெல்லாமமைவிப்பான். 106
    வெண்டிங்களை முடிசூடியவியன்கோபுரமருங்கிற்
    கண்டங்கியவாயிற்புடைகனமாமதிலியற்றி
    வண்டங் கணியளகாடவிமடமாதருமாடற்
    கெண்டங்குமுழாக்கொட்டிடுமிளமாக்களுமிசைத்தான். 107
    இசைவித்தொளிர் மணிமண்டபமெழிலோங்குறவியற்றி
    யசைவற்றிடுமலையான்மகளணி கோயிலுங்குயிற்றித்
    திசைவிட்டொளிர்வேழம்முகன் செவ்வேள்சினகரமு
    நசையுற்றவிழாமற்றவு நடித்தானுடன்முடித்தான். 108
    தனைத்தானருச்சனையாற்றுதல் சோணாட்டினுந்தடங்கார்
    கனைத்தோடியகடற்றீவினுங்கண்டேமெனப்பெரியோர்
    புனற்கூட்டியசடைக்காட்டினன் பொருட்பூசனைபுரிந்தூ
    னினைத்தாங்குறுசிறுமாக்களுநிறைமாக்கதிபெறவே. 109
    அத்தீவத்திலுள்ளோர்களு மையனுடனடைந்தோ
    ரித்தேயத்தரெல்லோர்களுமிறைசே வையினுய்ந்தார்
    மெய்த்தானத்துளெக்காலமும் விழைபூசனைபுரிவான்
    வைத்தானிலந்தலையூர்களு மற்றுமமைவுறவே. 110
    பொன்னாமவைபலவுஞ்செலப்போக்குந்தானோக்கான்
    என்னாமினியென்போர்களுக்கென்னா மினியென்னான்
    பன்னாவருமெருப்பாண்டிங்கள் பலகோடிகளுளவாற்
    றென்னாவெனவிசைபாடுமின் செல்கொமினியென்பான். 111
    எருவட்டங்கணந் தேய்த்து மிலவோபொருள்வருமா
    றொருமித்திடுமென்பார்கடலுடனோடியபுடையோர்
    வருமித்திறவோர் சொற்சொலவொருமித்தனமைந்தன்
    முரணிச்சரக்கேற்றீரென முன்சொன்னமைசொன்னான். 112
    கிடையாச்சரக்கேதேனுமிக்கிளர் பூங்கலங்காணேம்
    நடையாற்றிடைப்போதற்கிவனன்றாத்துணிவிற்றா
    னுடையே நமக்கிணையாவர்க ளென்றுளங்களித்தார்
    தடையாவதுமறப்போதற்குவிரைந்தான்றருக்குடையோன். 113
    பலவாய பொற்சரக்கேற்றினர்பலரும்பலமுறுவான்
    நலனாமிவன்சரக்காமெரு நகையாடிடவேற்றி
    யலையாழியினடக்கும்படியரும்பாய்மரம்விரித்தார்
    சிலநாளிடையடைபூங்கலஞ் செல்கின்றனபலநாள். 114
    உடன்போந்துள வணிகக்கிளையுறுதீவிறகிலராய்க்
    கடன்கோடற்குக்கரு திக்கொடுகடல்வாய் விடமிடற்றி
    லடங்காவருமவனைக் கடனளிப்பாயெனவ ளித்தான்
    முடங்காச்சரக்கிவைபோலவணளிப்பீரென மொழிந்தான் 115
    மொழிகின்றதற்கிசைந்தார்முறிமுக மன்னொடுகொண்டான்
    வழிவந்தவன்மதுராபுரி மருங்கேயெரிகரும்பால்
    விழைவொன்றிசை யிசையாளரை வெண்றோரிடநின்றோ
    னழிவொன்றுமிலாதானவர் தமைவென்றிடலரிதோ. 116
    கடலோடிய கலநீடிய கரைகண்டது விண்டோ
    யிடிபோன் முரசெறிந்தார்நகரெல்லோர்களு மறிந்தார்
    மடியாதமனத்தானொடுவணிகக்கிளையெவரும்
    படியேறினர் மலர்வாண்மும்பங்கேருக மொத்தார். 117
    திருமாநகரெங்குங்களி திளைக்கத்தெளிவிளைக்கு
    மருதாளியும் வெண்காடர்த மணிமாளிகை புகுந்தா
    னொருமாமணி யளித்தானவரு வகைக்கடல்புக்கார்
    வருவோர்களிற் பொல்லார் சிலர்வந்தின்னனமொழிவார். 118
    தீவிற்புகுந்ததுவுஞ்செறிசெம்பொற்றிரட்பெருக்காற்
    கோவிற்புனைந்ததுவுங்குறைகொண்டோர்க்களித்தனவு
    நாவிற்புகழ்ந்தோர்க்கீந்தது நவின்றாரஃதன்றி
    பூவிற்சரக்கெருச்சேர்த்ததும் புகன்றார்நகைபுரிந்தார். 119
    என்செய்தனை யென்றின்னவன் முகநோக்கினரிவனும்
    பொன்செய்திரள்போயிற்றினிப்பொருள்வேண்டியதருகேன்
    வன்செய்கையின்வெகுளாதொழிவீரென்றுரைவகுத்தான்
    முன்செய்கைமொழி்ந்தார்களுமுரண்கொண்டயல்போனார் 120
    எருப்பாண்டில்களெல்லாஞ் சரக்கிடுசாலையினிறைப்பத்
    தருக்காலிவன்சொற்றானிறை தாழாதுசெய்தழைத்தார்
    மருப்பூவணிவெண்காடர்தம்வயத்தாங்கவர் முறிப்பால்
    விருப்பாலளித்தனன்வாசித்து வெகுண்டார்பொருள்விழைவால் 121
    பொருளீகுவனெருப்பாண்டிலிற் புக்கொன்றெடுதொழுவா
    மருளுள்ளவம் முறியாளரைவரவிங்கழைப்பவர்முன்
    கரையொன்றினை யென்றானொரு கைவல்லவன் கரைத்தா
    னெருவுள்ளெரியெனச் செம்மணி வெயில் விட்டெறித்தனவே 122
    இத்தன்மையிற்கடன்கொண்டுளவெருப் பாண்டில்களெவைக்கும்
    வைத்தன்னவர்விலை நோக்கினர் வணிகக்கிளைமாக்க
    ளொத்துள்ளன வென்றார் பொருளிலமென்றுரைவரைந்தா
    ரத்தன்மையில்வெண்காடருமடிமைத்திறங்கொண்டார் 123
    கொண்டாரருடருமான்றனைக்கொண்டாடினர்குளிர்தோய்
    வண்டாமரைமலர் போன்முகமலர்ந்தார்மகிழ்ந்ததற்பி
    னெண்டானிறையெருப்பாண்டில்களராய்ந்தனரெரிநேர்
    தண்டாமணிகண்டாரிலைதவறாமிது வென்றார். 124
    எருவஞ்சகனிவனைத்தனியிருத்தித்திடந்திருத்தித்
    திருவஞ்செறிபொருள்கேண்மின்களென்றாரதுசெய்தார்
    கருநெஞ்சினனவர்பக்குவக்கவினோக்கியங் கிருந்தா
    னுருவஞ்சிறிதிலதுண்டலனொருவன்றெளியொளியோன். 125
    ஒளியானெனவிவனோரிடத்துறைந்தானெங்குநிறைந்தான்
    குளிர்போகியகங்குற்பறைகொட்டுஞ்சிறுபூத
    மளிநீடியசிலபூதங்க ளாடுஞ்சிலபாடும்
    வெளிமேவியகணநாதர்கள் விண்ணோர்குழுத்தழுவும். 126
    மாலிந்திரன்மலரோன் முதன்மறைமாமுனிக்கணங்கள்
    சீலந்த ருசிவஞானிக டெய்வத்திரண்மடவார்
    ஞாலம்புகழிசை நாரதர்நல்லோர்கலைவல்லோர்
    காலம்பலனுவாகமங் காணும்படிமிடையும். 127
    மருதப்பெருமானிங்ஙன மகிழ்நாள்களிலொருநா
    டிருவிற்பெருந்திருவோலக்கமிருந்தான் றெரிந்திடுமா
    றிருள் விட்டெறிவெள்ளிக்குவட்டிருக்குந்தரமிருந்தான்
    மருள்வெற்றிசெய்வெண்காடர்தமனையாரதுகண்டார். 128
    கண்டோடினர்வெண்காடர்தங்கருத்தச்சுறமொழிவார்
    வெண்டூளணிபணிவெண்டையன்மென்பச்சிளம்பாவை
    செண்டாடியமிடலாகுவன் சிறுசெம்பவளச்சேய்
    தண்டாவிடையுண்டென்றனர் தக்கார் பயமிக்கார். 129
    பயந்தோடினர்கண்டார்வருபச்சைப்பெருமானுங்
    கயந்தோன்றியமலராளியுங்காணாததொர்காட்சி
    வியந்தாரொருபேரற்புத மென்றார்மிகவெருண்டார்
    நயந்தாருடன்மீண்டார்விழி துயிலார்நவைபயிலார் 130
    கங்குற்புலர்சிறுகாலையிலெழுந்தன்பருங்காண்பார்க்
    கெங்கட்கிறைமருதப்பெருமாளாய்த்தனித்திருந்தான்
    துங்கக்கமலச்சேவடிதுணையேதுணையாகிச்
    செங்கைத்திருமலர்சாத்தினர்சென்னிக்குறப்படுத்தார். 131
    புன்மைப்பிழைபுரிந்தே னவைபொறுத்தாண்டிடவேண்டும்
    வன்மைக்கொளனினையாது கொண்மருதப்பெருமானீ
    நன்மைப்பொருளாய் வில்லிடுநாதப்பொருளாய
    தன்மைப்பொருளாய் நின்றிடுதனியேயெனை முனியேல். 132
    ஏவற்றனியாளாயினை முறையோரெனவியைந்தாய்
    தாவற்றிடுதேவாயினை தருவாய்த்தருகுருவே
    யாவற்றனியேன்றன்னையு மவ்வாறருள்குவையோ
    பூவிற்கமழ்மணம்போன்றுயர்புனி தாவெனைமுனியேல். 133
    மறையாமறையீறும் பெருவானோர்களுமறியா
    விறைவாவெனையடிமைக்கொள வெண்ணித்துணிந்தனையோ
    சிறுமானிடனடி யேனுறுதெய்வப்பெருமானீ
    குறையோவிலைகுறையுண்டெனிற்கூறாயினிமுனியேல். 134
    பல்காலிவர்புகலப்பயில் பரநாதனும்பருவ
    மல்காவருமுனக்குக்கதிவழங்கு முபதேச
    நல்காவருள்செயவந்தன னென்றானவில்கென்றான்
    செல்காரியமலநீங்குபதேசஞ்சிவன்செய்தான். 135
    செய்தங்ஙனஞ்சிலநாடரித்திருந்தான்சிவநன்னூ
    லெய்தும்படிபடியென்றளித்திளஞாயிறுபோல்வான்
    கைவந்தனநன்னூல்களுங்கண்டானதுவந்தும்
    பொய்தங்கியமருள்வாழ்க்கையும் போகாதவுங் கண்டான் 136
    நவகோடிபொற்குவைநீடியநாட்டத்தர் வெண்காட
    ரிவைபோயிடத்துறக்கிம்வண்ணமெவ்வண்ண மென்றெண்ணும்
    பவமாற்றுதற்கிவைமாறெனப்பார்க்குஞ்சிவமாக்குங்
    கவலாதசற்குருநாதனைக் காணும்பதம்பூணும். 137
    மருளுந்தெருளும்போர்புரிமாறாட்டமுங்கண்டான்
    றெருளொன்றிடமருணின்றிடத்திருவிள்ளத்திற்கிடத்தி
    யொருதந்திரம்புரிகின்றன னுடையானெவையெவைக்குந்
    தருமந்தணப்பொருட்குஞ் சுதந்தரனானசங்கரனே. 138

    ஆட்கொண்டசருக்க முற்றிற்று.
    ஆக-திருவிருத்தம். 192.
    --------------------

    3. துறவறச்சருக்கம். (193-336 )


    முன்னெறித்தவம்பல முயன்றநன்னரான்
    மின்னெறித்தனவெனவிளக்கமோங்குவார்
    சென்னெறிக்கதியுறுதிருவெண்காடனார்
    பன்னெறித்துறவறச்சருக்கம்பன்னுவாம். 1
    திருவிடைமருதுடைத்தெய்வநாயக
    னொருபுடைக்காதறையூசிவாசியாற்
    பிரிவுடைச்சரட்டொடுபேணிமானுறப்
    பரிவுடைப்பட்டினாற்பயிலச்சூழ்ந்தரோ. 2
    ஏற்றபூம்பெட்டியினிட்டுக்கட்டுறத்
    தேற்றமாமுத்திரை சின்னஞ்சேர்த்தினான்
    கோற்றொடியன்னைகைக்கொடுத்துன்மைந்தனுக்
    காற்றலீதளித்தியென்றகன்றுபோயினான் 3
    பண்டுபோன்றிருந்தனன்பரமநாயகன்
    மண்டுகாதலின்வருமதிவெண்காடரும்
    புண்டரீகத்திருப்பொருந்துமாளிகை
    யண்டனைக்காணவென்றணைந்தபோதினில். 4
    ஞானசற்குருவினை நயந்தநாயகன்
    போணதிக்கறிவுறாப்புனிதரானவர்
    வானனைக்கண்டிலார்வனசவாள்விழிப்
    பானல்வெண்டரளங்கள் பரப்பினாரரோ. 5
    துருவினாரெங்கணுந்துளங்கிக்காண்கிலார்
    வெருயேயவ்வயின் விரைந்துதாயரு
    மருவினார்பெரியவர்மணிகொள்பெட்டியொன்
    றருளினாருமக்கெனவருளிப்போயினார். 6
    எனமொழியேழைப்பேழையீந்தனண்
    மன்மொழிமெய்களால்வணங்குமன்பருங்
    கனைகெழுசிலம்பணிகமலனீந்ததைத்
    துனைவினால்விழித்துறச்சோதித்தாராரோ. 7
    முத்திரைகவிழவிட்டவிழ்த்துமுட்டறச்
    சித்திரநேத்திரச்சுற்றுத்தீரத்தபின்
    குத்திரமொன்றறக்கொடுத்ததோர்பொரு
    ளத்திரம்வாக்கினாலறியப்பண்டமே. 8
    ஒடிவுரப்புரைவிழுந்தூறிக்கூர்முறிந்
    தடிபடுகாதறையாகிச்செய்கையாய்
    நொடிதரமுறுக்குறாநூலுங்கோத்துள
    வடிவினாமூசியின்வாசிநோக்கினார். 9
    நோக்கினார்நீக்கறநெடிதுநோக்கினார்
    பூக்கமழ்சடையினார்பொற்புநோக்கினார்
    பாக்கியமிதுவெனப்பரிந்துநோக்கினார்
    தேக்கியவுலகுவிண்டேறநோக்கினார். 10
    காதினூல்போதனங்காதிற்கல்விநூல்
    போதலைக்குறிப்பினாற்புகன்றபொற்புமா
    மேதகுமுலகெலாம்விடுங்குறிப்புமாஞ்
    சேதமிப்பாசநம்பாசச்சேதமாம். 11
    ஊசிகாந்தச்சிலையுற்றுப்பற்றல்போ
    னாசமிலாப்பரஞானமாற்றலா
    மாசிலோமென்றுகொண்டலங்கலோங்கிய
    மாசினாலங்குலவடிவம்போயினார். 12
    இச்சைஞானந்தொழிலிவைகளீசனா
    ரிச்சைஞானந்தொழிலிவற்றுளாக்கினா
    ரச்சமில்பரையுடனாக வாருயிர்க்
    கச்சனாமவனிடையடைந்தொன்றாயினார். 13
    மறைபெறுசிவமுளேமறைந்து நின்றபின்
    குறையறவிளங்கியகோலும்போலுமாத்
    திறமுறுதாமுமச்சிவத்துட்புக்கொளித்
    தறிவுறாவிளங்கினாரதீதவின்பமே. 14
    இன்பமாமதீதமேலிருக்கும்வள்ளலா
    ரன்பிலாருலகெலாமசத்துக்காட்சிவந்
    தன்பினாலரனடியமுதமாந்தினா
    ரென்பராலிவர் நலமியம்பொணாததே. 15
    எறிந்தனர் முறிந்தவூசியினையேந்தலார்
    செறிந்தனர் சிறைமுறிதெளிந்தநீரெனப்
    பிற்ந்தனரில்லறம் பெரிய நூற்படி
    நிறைந்துனர்துறவறநெறிகொணீர்மையே. 16
    விடுத்தனர்வீடுநல்வீடுகூடுமா
    றெடுத்தனர்துணிவுகூர்துறவையேபெற
    வடுத்தவூரம்பலதனிற்புக்குளார்
    நடத்துளானம்பல் நண்ணும்வண்ணமே. 17

    போந்தபின்சுற்றமும்புடையிற்சுற்றவேல்
    வேந்தனும்பட்டினம்விளங்குமேன்மையாற்
    சேர்ந்தனன்மயக்கறாத்தேற்றந்தேற்றினா
    ராய்ந்திடினனவுகாண்பரியவன்னவே. 18

    மாயையின்போதமற்றிருக்குமன்னவர்க்
    காயிரம்போதமங்காற்றிரஃ
    தேயினவல்லவாயிகழ்ந்தநெஞ்சினார்
    தூயராவிருந்தனர்துளக்கமின்றியே. 19

    பகர்ந்தனர்பட்டினப்பலரும் பண்பினான்
    மிகுந்திருச்சேந்தனார்விளம்புவீரெனப்
    புகழ்ந்தவர்மவுனமாம் பொற்பின்வைகினார்
    திகழ்ந்தமூகரைமொழிச்செல்வமாக்கினார் 20

    மற்றவர்மவுனமுற்றுறைந்தவாய்மையா
    லற்றைஞான்றெவர்களுமகலவன்பரைப்
    பெற்றபேறென்னையென்ற ரசன்பேசினா
    னிற்கநீரிருக்கயாம்பெற்றநீர்மையே. 21

    எனவிசைத்தன்பனாரியைந்தகாலையி
    லனகவம்பலத்துளானடியர்மேன்மையை
    நினையவுமரிதெனாநிருபன்கூறினான்
    மனையறக்கினைஞரோவழக்கம்பன்னினார். 22

    மன்னகேளிவர்பெருங்குடிமைவாழ்வுறத்
    தன்னிகர்மருகனையிருத்தாழ்வுறப்
    பன்னருந்திருவெலாம்பரிக்கச்செய்கவென்
    றுன்னினருரைத்தலுமோகையாகியே. 23

    அரசனுஞ்சுற்றமுமகன்றுபோயொளி
    யிரவிநேர்மருகனையிவர்க்குநேரென
    வரிசைசெய்திருத்தினார் மைந்தன்றாங்கினான்
    புரயிலாவிழுதுவிட்டன்ன பொற்பினான். 24

    இவன்சிறந்திருந்துழி யெழுதுகற்பினா
    ணவம்புனை மனைவியார் தாமுநாடொறுந்
    தவம்புரிகுவனெனத்தனிவெண்காடருங்
    கவன்றுகட்டறவழி காட்டியோட்டினார். 25

    நங்கையாரிற்புக நடாத்திவிட்டபின்
    மங்கலச்சேந்தனார்மனங்கரைந்துவீழ்ந்
    தெங்கணாயகவெனவிறைஞ்சிப்பின்னரும்
    பங்கயச்சேவடி பிடித்துப்பன்னுவார். 26

    எனையுமீடேற்றுதலெந்தஞான்றுகொன்
    மனையறம்புகுத வோமன்றுளாடலை
    நினைவினினிறுத்தவோநிகழ்த்துவீரென
    வனையவர்கருத்தினுக்கமைந்தசெய்கென்றார். 27

    பக்குவக்குறைவதுபண்பராதலா
    லக்கணம்விடைகொளாவகன்றுதம்மகம்
    புக்கனர்முக்கணான்புனிதவன்பரு
    மிக்கஞானக்கிளைவிளைவின் வாழ்குவார். 28

    தகவுநன்மனைவியாய் தனையராமவர்
    மிகுமுயிராய்ச்சிவம் விரவுந்தொண்டரே
    புகு முறவாயுறப்பூமென்பாயலா
    நகைமலர்ப்பள்ளி மேனயந்து நண்ணுநாள். 29

    அங்கணின்றகன்றுபோயகங்கடோறும்புக்
    கெங்கணாயகனென விரந்தருந்துவார்
    பொங்கொளிவணிகர்தாம் பொறாதுமானத்தாற்
    றங்களூரனமிடற் றடைசெய்தார்களே. 30
    அடைவிலாவாலமிட்டப்பமெய்ப்பயநங்
    கொடுசமைத்துடன்பிறந்தவள்கொடீ ந்திடக்
    கடுவிடனடியவர் கடுகிவாங்கினார்
    முடிபொருளறிகிலார் மூர்க்கமாக்களே. 31
    வினையினைப்பிடித்தொன்றுவிளம்பியப்பநீண்
    மனையி்ன்மேற்சொருகினார் மனையின்மண்டழல்
    துனைவிறப்பற்றவூர் துயர்கண்டன்னபோ
    தனையவர்க்கிரங்கியாரெரியைமாற்றினார். 32
    வேறு.

    தங்களைக்கேட்டுப் பிறந்தில மென்னுந் தடந்தமிழ்சாற்றினாரதற்பின்,
    பொங்கெரிபு குந்தவ்வூரெலாமுண்ணப் பூம்புகார் மாந்தர்களெவருஞ்,
    செங்கனலவியாதிரங்கினாரதனாற் சிறியவரறிவிலாதவரென்,
    றங்கியையவித்தார்பலபுரமெரித்தாரடியரோர் புரஞ்சுடலரிதோ 33
    பின்னருந்தமையே முன்னைநாட்கருதிப் பெறலருந்தவத்தினாற்பெற்ற,
    வன்னையைக்குறித்துக்குடியிருந்துன் வீடனலிடுவேனெனவறைவா,
    ரின்னவாசகத்தாலென்கொலோவென்றென்றிரங்குவார்நகருளோரெவரும்,
    பன்னுமவ்வன்னையிறந்தநாள் வாக்காலாக்கைதீப்பற்றிடப்பணிந்தார். 34
    வேறு

    எண்ணும்பசுங்குடிபன்னீராயிரவருள்ளும்
    நண்ணும்பிறருள்ளுநல்லோர்பலர்குழுமி
    யண்ணலேயேகுதியோவாராவமுதேயெங்
    கண்மணியேயென்னாக்கனிந்து கரைந்தழுதார். 35
    ஆதித்தனேலாதவம்பரம்போலிந்நகரம்
    பேதிக்குமென்னிலிஃதென்னாம் பெரியோனே
    தீதகற்றற்கையனை நீயெண்ணுந்திறம்போலுன்
    பாதத்தையெண்ணிப்பணிகின்றோம்பண்ணவனே. 36
    முன்னிச்சுடப்படுவாரில்லாத முப்புரங்கள்
    வன்னிக்கிடுமவன்போன்மாதாவின்முப்புரங்க
    டொன்மைச்சுடர்ஞானவங்கியினாற்சுட்டளித்தா
    யின்னற்படுவோமுக் கின்னருளொன்றீந்தருளாய். 37
    முத்துக்கொழித்து முழக்கெழுப்பு முன்னீரூர்
    கொத்துக்குடிப்பெரியோரிவ்வாறு கூறுதலும்
    வைத்துப்படர்வாரை முன்போய்மறிப்பாரா
    லுய்த்துத்திருவடிமேலொன்றாவணங்கினரால். 38
    வேறு

    வணங்கினர்க்கருள் கூரெனுமுபதேசமறைப் பொருட்பாடலீந் திருத்திக்
    குணங்குறியறியப்படாதமாப்பொருள்கொ டுலய வெண்காடிடைக்குறுகி,
    யிணங்கிடும்போதி லிறைவர் தங்கோயிலேயவர்தூயவர்யாருங்,
    கணங்கொளவெதிர்ந்தார் வணங்கிடவணங்கிக்
    காமர்பூங்கோயிலுட்புகுந்தார். 39
    அன்பினாலுருகியாதரம் பெருகியையனேயமுத வாரிதியே,
    யென்பொலாப்பிழைகள் பொறுத்தளித்தனையே யிளம்பிறைப்பவள வேணியனே,
    பொன்புனைபொருளே யென்றவப்பொழுதிற் பூசுரர்மாணிக்கக்கந்தை,
    யின்புறக்கொடுத்தாரிறைநயவருடுத்தற் கென்றனரென்செய்தாரிவரே. 40
    நாயினுக் காகாமணி யிரணியங்கணாயனுக்காகுமோவென்னா,
    வாயினிற்புகலா முனமுதறினரான் மாணிக்கக்கந்தையாங்கனைத்தும்,
    போயினநக்கனெனும்பெயர்புதுக்கிப்புணர்திசைத்திருவுடையாடை,
    யாயினரனந்தவன்பருக்கின்பவருட் செல்வம் விளக்கினாரன்றே. 41
    அளக்கர் வெண்காட்டிலருட்டிருப்பொருந்தி யமர்ந்துலகறிவுறும் பொருட்டால்,
    விளக்கினைவைய முய்யவென்பாடல்விளம்பினார் விளங்கியமேலோர்,
    களக்கனிக்களத்தாரருட்பொருட்பிடித்தார் கரும்பினு மினியசெந்தமிழ்ப்பாத்,
    துளக்கறப்பரவியுளக்கருத்துருகித் துளிக்கணீர்மழைபொழிந்துறைந்தார். 42
    ஒருவிடைகொடுபின் றமக்குவந்தளித்த வுத்தமருவப்புறா துறையுந்,
    திருவிடைமருதைநோக்கி நின்றிறைஞ்சிச்சிறந்தகாவதம் பலகடந்து,
    மருவிடையறா தவாலியப்பதியிலெதிர்ந்தவர்வணங்கிடவணங்கி,
    யுருவிடைமருவு குருபரன்றிரு முனொருமையிற் பணிந்துருகினரால். 43
    உருகிநீரிடத்திற்பிறந்த வொண்கமலமொளிகொணீ ருதவியதென்ன,
    பெருகுநீரருவியிருவிழிபொழியச் சிவக்களிபிறங்கிநின்றாடி,
    யுருவெலாம் புளகம் பரந்திடத்தெளிந்தவுரை தழுதழுத்தவுமொருவி,
    மருவினாரிறைதன்விடைகொடுமீண்டுவசித்தனரங்கண்மாதவத்தான். 44
    முதல்வனைத்தெய்வத்தாமரை முதலாமும்மணிக்கோவையாற்றுதிப்பார்,
    திதியவனநாதி நிலைபரம்பரையாய்ச் சித்தசித்தறி வொடாதாரம்,
    விதியுறவொன்றா நிலைமுதலுரைத்தார் வியனிரண்டாய வாசரியத்,
    ததிகனிற்பிடித்தாலன்றியுற்பவம்போகாதெனு மருமையும் புகன்றார். 45
    மூன்றில்வன்றொண்டர்வாசவன் செல்வமுழுக்கடல் குளப்படியென்றார்,
    மான்றருகரத்தானஞ்செழுத்தருங்காய் மருதமாணிக்கத்தீங்கனியென்,
    றூன்றினர் நான்கிலைந்தினிற் சகலமுற்றகேவலத்திலெற்காணே,
    னேன்றநின் கருணைஞான நாட்டத்தா னின் பெருந்தன்மையான்கண்டேன். 46
    கண்டபினெனையுங் கண்டிளேனென்றார்கருதுமாறாவதிலொருவ,
    னுண்டி வேண்டிருத்தல யினியின்குறை யோவுன்குறை யில்லையென்குறையீ,
    தண்டனேயென்றார்வல்லுனர்வல்லாரம் பரத்தெறிந்தனர் நிலத்திற்,
    கொண்டிடல்போலுன்னஞ்செழுத்துரைப்போர்
    குறைவிலாரென்றனரெழிலார். 47
    எட்டினிலடி சார்ந்தவர்க் கருட்செல்வ மிறைவநீயாதினுங்குறையா,
    திட்டனையென்றாரென்பதிற்புத்தனெறிந்தகலெனகுனரென்றார்,
    பட்டவோபற்றிலென்செயலன்றிப்பரமநின் செயலினேனென்றார்,
    முட்டிலிங்கிசைத்த திருவிசைப்பாவின் முடிவில் வெண்காடனென்றனரே. 48
    இவைமுதற்றமிழாற்றுதிபல வியம்பியிருக்குமந்நாடனிலொருநா,
    ணவைவிடாய்கழிக்கநீர் பொறாதிருப்ப நாதர் தம்பாணிதண்பாணி,
    யுவகையாலுதவுமின்றெனும்பாடலுரைத்தனர் மற்றுமோர்தினத்திற்,
    கவலும்வல்விடத்தாலுறங்குறார்கட்டிக்கரும்பிடு கழனியீர்ப்புண்டார். 49
    இந்தவாறீர்ப்புண்டொருபுறந்திண்ணையிடங்கிடந்துறங்குறும் பொழுதி,
    லந்திவான்மதியம்வலம்புரிக்கண்ணியா மெனப்புனைமருதாளி,
    வந்துதன்னுடையூர் காப்பவன்போல வடிவுகொண்டிவர்மனஞ்சோதித்,
    துந்துவான்கருணைபுரிகுவான் கருதியோரிராகள்ளிருளணைந்தான். 50
    காரிரும்பொலிக் குந்தடிநிலத்திடித்துக்காலினான் மார்பிடைத்தாக்கி,
    யாரைநீயென்னவினாவிடவெருவாவமுத வெண்காடருமிசைப்பா,
    ரூரிடையெவைக்குங் காவலுக்குரியோயுணர்ந்தியானுரைக்குமாகேட்டி,
    சோரிபுன்மயிரின் றொகைகளோ டிறைச்சிதோலொடுமென்பு மூளைகளே. 51
    ஈனமாமெண்ணிறத்துவக் குழாமோவின்னதென்றென்னையான்கானேன்,
    யானலதொன்றையா னென நினையுமிதுவென துள்ளமென்றிசைத்தார்,
    தேனலரிதழிச்சேவகப்பெருமான் றெரிந்திலர்மறைந்தனர்சிறந்த,
    வூனெலாமுருகிப்பெருகுமன்பினராயுவகையங் கடலிடைப்படிந்தார். 52
    படிந்தவரெழுந்து திசையினைநோக்கிப் பணிந்தனரணிந்தவெண்ணீற்றார்,
    விடிந்தனவிருளுந் தாமரைச்சரணமெல்லிதழ்நொந்தவோவென்பார்,
    கடிந்தசொன்னடந்த கருணையைப்புகழ்வார்காற் சுவடுரத்தினிற்குறிப்பார்,
    முடிந்தமாப்பொருளைமுடிவிலாவருளை முன்னினர்பன்னினரிருந்தார். 53
    அறுவகைச்சமயமிடைமருதாளியாறு மாமுகத்தினுந்தோன்றி
    மறுவறநடக்கும்புரநெறிச்சமயமற்றுளவாறுமாறாய
    புறநடைச்சமயப்புன்மைபற்பலவாம்பொருவிலம்மருகனைநோக்கி
    யுறவருமனைத்து மென்றனர்சமையாதீத முற்றிருப்பவரிவரே. 54
    இடைமருதாளிசமயபேதங்களின்ன்னவாறிழைத்ததென்னென்னின்
    முடிவிலாவுயிர்கள்பக்குவக்குறையான்மொழிகதியடைதரமவுன
    வடிவுறுமவர்கள்புகலிடமியம்பின்மாயைமாமாயையுளடங்கும்
    படியிலாவொன்றினின்றனரிவர்தம்பாக்கியம்யாவரேபகர்வார். 55
    பிரிவில்சித்தாந்தர்சமயபேதங்கள்பேசியதெய்வமொன்றெனினு
    நிருபனுநிருபன்மைந்தரும்புந்தி நிகழ்தருமமைச்சருமாக்கம்
    பெருகுதந்திரரும் ஞாளிகைக்கொள்ளும் பிள்ளைமாக்களுநிகர்பகரு
    முரிமையையுலகோரறிவுறப்பாடியுடையவனடிவிடாதுறைந்தார். 56
    அங்குறச்சிலநாளுறைந்தறாவிடைபெற்ற ருட்குறிக்குடந்தை வாயடைந்து,
    சங்கரற்கன்பாற்றுதிபலவழங்கிச் சடைமுடியுடையவனிடங்க,
    ளெங்கணுமிறைஞ்சியந்தணாரூ ருமிரைஞ்சியங்கமரு நாட்களவாற்,
    பொங்குகாமத்தாலிறந்தவாபார்த்துச் செயுளெருவாய்க் கெனப்புகன்றார். 57
    அசபையாட்டயருங்கூத்தனைநோக்கியங்கு நின்றருள்விடைகொடுபோய்,
    வசையுறாப்பாண்டிமண்டலம்புகுந்து வண்டமிழ் மதுரைமாநகரி,
    லிசையிறைபோற்றிமலைகொணாட்டுள்ளவிறைவனாலயங்களுமேத்தி,
    நசையினாலாங்காங்கன்பினாலின்பநாதனார்க் கருந்தமிழ்புனைந்தார். 58
    ஆலமுண்டவர்க்குத்தமிழமுதளிப்பா ரருள்விடைமருதில்வந்தடைந்து,
    பாலவெண்டிங்கட்பழைய வற்பணிந்துபற்பலகாலமங்கிருந்து,
    மேல்விடையவரைவிடைகொடுமீண்டு விரைந்து வெண்காட்டிடைப்புகுந்து,
    வாலியசூல கபாலியைநீலமரலினிவாமனைப் பணிந்தார். 59
    ஐயனைவணங்கி வழிபடுங்காலத்தகன்றிடுமந்திரிச் சேந்தர்,
    செய்யசேய்வந்திங்கிவ ரடிபணியச்சேருநீயாரெனச்சேந்தர்,
    கையுறுதுணைய னென்றுபுன் றொழிலாற்கைதளைப் பட்டனன்றாதை,
    வெய்யச்சிறைமீட்டருள்கெனப்பணிந்தான் விரைந்து வெண்காடருமெழுந்தார். 60
    எழுந்துபோந்தண்ணல் சன்னிதிப்புறத்திலிசைந்து மத்தளை தயிர்ப்பாடல்,
    கொழுந்தெழப்பாடி முடித்திடக்கணங்கள் கொழும்புகழ்ச் சேந்தரைக்கொணர்ந்து,
    தொழுந்தகையவர்முன்காட்டிடவருளாற் றொன்மைசால் சேந்தருந்தொழுது,
    விழுந்தெழுந்தாடிப்பாடினரரற்கு மெய்யன்பரிருவருமிவரே. 61
    சேந்தர் வெண்காடரடியிணைபணிந்துதிருவுள மறிந்திடப்பணிந்தீ,
    ரேந்தவிச்சிறைமீட்டென்னுடற்சிறை மீ்ட்டிடுநெறிகாட்டிடவேண்டும்,
    வாய்ந்தநீரென்னவன்னவர் மகிழ்ந்து வனத்தினில்விறகொடித்தெடுத்திட்,
    டாய்ந்தவவ்விற குவிற்றிடும்பொருளாலனந்தினமருவருக்களிப்பீர். 62
    எனுமுபதேசத்தவமளித்தகன்றா ரிவருமத்தவம்புரி காலை, வ
    னவயிற்பொதிசோறொருபுடைதூக்கி வாய்திறந்துறங்கிடவாயிற்,
    கனியனம்பிதிர்ந்து வீழ்ந்திடவாயிற்பயந்துகன்மன்றனுக்கென்றா,
    ரனகமன்றாடுமெங்கடம்பிரானாரமுது செய்தரும்பசியகன்றார். 63
    பொருவிலக்காலத்தொருதிருவளவன்பூசனைகுறை வறப்புனைவான்,
    பரவுமந்தத்திற்கோயிலாராச் சிப்பரூமணிநாதமங்கெழும்பு,
    மருவுமன்றோசைகேட்டிலன யர்ந்துவருந்தினான்கனவினிற்கூத்த,
    ருரைசெயச்சேந்தரன்பினையுணர்ந்திவ்வுல குளோரறிய வாய்திறந்தான். 64
    நீலநீர்வேலிஞாலமேலறிஞர் நிறைபரஞானிகளெவருஞ்,
    சீலமாரன்பர்சேந்தனார்க்கீந்த திருவருட்டிறத்தினைக்கறித்தா,
    ரேலுமன்னவர்தந்தவத்தினைத் துதித்தாரினியவெண்காடரைமதித்தார்,
    பாலனம்புரியும் வளவனைப்பரவிப்பைம்பொனம்பலத்தையும் பணிந்தார். 65
    திருவிசைப்பாவிற்றிருவிடைக்கழியிற்றிருச்சிற்றம்பலமுடையவரை,
    மருவமுன்வைத்த முருகவேடனுக்குமாலுலாமனத்தமிழ்பாடி,
    யுருகு மன்பினராமன்றுணின்றாடு மும்பர்தம்பதமலரடையக்,
    கருணைசெய்தனர் வெண்காடராங்கதனாற், கதியடைந்திடவணித்தானார். 66
    வேறு.

    தோணியம்புரத்துட்புக்குச் சுடர்விடுமழு மான்விட்டுக்
    கோணறநிற்குமின்பக்குழகனையழகுபூத்து
    மாணுறுதோளியாணி மணியணிப்பச்சையாடுங்
    காணுறுங்குரவர்ப்போற்றிக்கண்டுகண்களிக்கலுற்றார். 67
    கருங்கடற்றோணிவிட்டுக்கட்டுமட்டுடைமாணாக்கர்
    பெருங்கடற்றோணிவிட்ட பெரியதங்குரவற்போற்றி
    யொருங்கடற்கோலுநீலமொருமூன்றுமுடைந்துமாற
    வருங்கடற்கண்டநாடுமகிழ்தமிழ்பாடுநாளில். 68
    பண்டினுமதிகசக்திபாதம்வந்தடைதலாலே
    யொண்டி றற்றிருவெண்காடருடற்கலத்துயிர்ச் சரக்கைக்
    கொண்டிடத்தில்லைக்கூத்தர்குறியருணற்றார்பூட்டி
    யெண்டிகழ்சிவந்தபாதத்திருங்கரைசேரச் செய்வார். 69
    ஆதலாற்காழிவாழுமமுதனைவழிபட்டேத்திக்
    கோதுதீர்குரவற்போற்றிக்குறிபற்றி விடைபெற்றண்ணல்
    மாதவம்பெற்றோர்போற்றுமன்றுண் மாணிக்கம்பெற்றே
    யேதமிலின்பாதீதவிலாபமுற்றிருக்கவந்தார். 70
    வந்தவர்மற்றுமுள்ளதலங்களும் வழிபாடாற்றிக்
    கொந்தலர்ச்சிறைவண்டார்க்குங் கொள்ளிடப்பொன்னிபின்னிட்
    டந்தளிர்ச்சோலைவேலியண்ணலூர்கண்டுங்கேட்டுஞ்
    செ்தமிழ்திருவாக்காளர் திளைத்துளங்களித்துவந்தார். 71
    கொள்ளைவெண்கமலக்காடுங் குளிர்செந்தாமரைக்குழாமு
    மள்ளலங்கழனிதோறுமனந்தகோடிகள்வண்டில்லை
    வள்ளனாடகங்கண்டுள்ளவாணிலாவண்ணப்பானு
    தள்ளறத்தலவாசஞ்செய்தன்மைபோன்றனவுங்கண்டார். 72
    தில்லைமாநகரஞ்சுற்றுந்திருமதிற்சிகரிநான்கும்
    நல்லவர்மௌனப்பொற்பும் ஞாயிறுதோன்றிற்றென்னா
    வெல்லொளிநிமிரும்வெற்புமிமையமும்பொதியிலும்போன்
    சொல்லுவகண்டார்தூண்டு முவகையாரு ருட்புக்கார். 73
    வீதிகடொறும்பணிந்துவிதிமுறையந்தணாள
    ராதிமூவாயிரத்தோரங்கிகளனேகஞ்சுற்ற
    மீதிடாநிற்கு ஞானவங்கியைவியந்து காண்பான்
    பேதமைதீருந்தீரப்பெரியவரரிதின் வந்தார். 74
    வேறு.

    நீடுமறையாகமநிரப்பியபெருஞ்சொல்
    லாடியவிதிப்படியமைந்தசதுவீதி
    நாடுமதிலைந்தணவமாகநவமாகுந்
    தேடரியவீடுதரு தெய்வநகர்கண்டார். 75
    கண்டனர்வணங்கினர் கணங்கொள விணங்குந்
    தொண்டரொடுமுட்சிகரி சூழ்ந்தமதில்வாயி
    லெண்டரவிறைஞ்சியுட் புகுந்தனரிலங்கு
    மண்டர்நடமாடுமணியாலையமருங்கே. 76
    ஆலயமிலங்கு வதறிந்தனர்செறிந்தே
    ஞாலநடுவிண்ணுயர்வுபாதலநலக்கீ
    ழேலுமிதுவென்பதுவுமின்பமொடுகண்டா
    ராலமணிகண்டரருள்செய்யிலரிதென்னே. 77
    ஏடவிழ்செழுங்கமலமெங்கணுமிலங்கப்
    பாடுமளியாடுமவர்பாவமெனவோவத்
    தேடுநருஞேயநிலைசேருமவர்நேச
    நீடுசிவகங்கையினெடுந்தவர்படிந்தார். 78
    படிந்துசிவமாமிதெனவோர்ந்துபடர்பாவம்
    விடிந்துசிவமூலமுறைமேதகையசோதி
    முடிந்தபொருளாய் முடிவிலாதபொருள்கண்டார்
    தடிந்திருள்கடிந்தபொருடக்கசபைபுக்கார். 79
    சற்றுமசையாதபொருடானசையமூல
    முற்றநிலையுந்தலைமையுற்றபடிமற்றும்
    பெற்றபடிகொற்றவர்பிறங்குசெயல் கண்டா
    ரற்றமறியானருள்ளிக்கிலரிதென்னே 80
    கஞ்சமலைமஞ்சர்பலகாலரற்றிமூல
    ரிஞ்சுதல்படாவிடபயோகிபுலிபாம்பு
    நஞ்சமுறுதேசிகநடக்கலவிகண்டா
    ரஞ்சலிசெயின்னவருமன்னவரையொத்தார் 81
    அந்தநடுவாதிவிடு மண்ணலவையுண்டாய்
    வந்ததிசயத்தினைவழுத்தினர்தநெஞ்சில்
    முந்துறவிளைந்ததொரு மூத்திவிசயத்தைச்
    சிந்தைசெய்திருந்தனர்திருந்தினர்வருந்தார். 82
    செங்குருநடந்தரிசனஞ் செய்சமயத்தில்
    வெங்ககனலிங்கவுருமேல்விளைதல்பெற்றார்
    அங்கையினிலங்கியவனாடலிசைபாட
    லங்கிசையவோதினரருந்திருவிசைப்பா 83
    வேறு.

    பொன்னாருமணிமார்பன் பூமேலயனறியா
    யென்னாவெடுத்தோதியேவிடைபெற்றேகியபின்
    பன்னாகவாடகப்பொற்பாதமெனப்பாடியிடச்
    சென்னாவுண்சோறளித்தாள் சிவகாமசுந்தரியே 84
    ஞாலமறியவெங்கணாயகியாரீந்தவன்னக்
    கோலவருளுண்டுகுலாப்பெருகிக்கூத்தாடி
    மூலவிலிங்கமமர்முழுச்சுடர்பின்னுந்தொழுது
    சாலமகிழ்ந்துதருக்கினார்தண்டமிழார். 85
    பேசிக்கடைதொறும்போய்ப்பிச்சைகொண்டிங்குண்டிருத்தல்
    வாசிக்களிப்புடைத்தாம்வண்ணமெனத்தண்ணளியார்
    தேசுற்றிருந்தார்சிலகாலஞ்செந்தமிழாற்
    பூசிக்கப்பெற்றார்புனிதனடித்தாமரையே. 86
    வான்றேடுமறையேயோவென்றெடுத்துவண்டமிழ்ப்பா
    நான்றேடநானாரோ நானாரோவெனமுடித்தார்
    தோன்றாப்பொதுச்சூழ்ந்து சோதிவிடைபெற்றேகி
    யேன்றார்வடதிக்கிடைநடக்க வன்பாளர் 87
    வேறு

    ஏயும்பூகமிளநாகமினியகனிசூழ்பனைமரங்கள்
    காயும்போதுங்கலந் தளிப்பக்கனையார்புனல் சேர்தினைநகர்வாய்த்
    தாயுந்தமருந்துறந்தவர்தாந் தம்பிரானார்தாம் வரக்கண்
    டாயும்பெரியோருள முருகியருகாலின்பம்பெருகினரால். 88
    விடைகொண்டகன்றுசிவாலயங்கள் விரவிப்பரவியடிபோற்றி
    படைகொண்டுடையும்புனற்கேடின்மணிநீர்வாவிமலரோடைப்
    புடைகொண்டொருபாதிரித்தருவிற்புணர்சண்பகமும்பலபூவு
    மடையுந்திருப்பாதிரிப்புலியூரடைந்தாருடைந்தமனமுடையார். 89
    அரக்கரனையார்விடுதூணையலைவாய்த்துரும்பினெளிதாக்கி
    பரக்குமந்தக்கற்கலத்தாலொருமாதவரைக்கரையேற்றிப்
    பரக்குங்கடல்வாய்மரக்கலந்தாழ்ப்படுத்தித்தமையுங்கரையேற்று
    மிரக்கம்பெரியோர்தமைக்காணவிளநீர்க்கெடிலம்படிந்தாடி. 90
    கடற்பாற்றிகழந்தசடைஞாழற்கன்னிவனத்தெம்பெருமானை
    யுடற்பாலினிமேலுறவறியாருலவாச்செல்வம்பெறப் பணிந்து
    மடற்பாற்கமலம்வழிபிரசம்வாவிச்செழுநீர் மேன்மிதந்து
    விடற்பாலனவாந் திருவதிகைவியன்மாநகரத்தயல் போந்தார். 91
    கூற்றாயினவாறென்றெடுத்துக் கொழுத்ததமிழான்வழுத்துமவர்க்
    காற்றாவின்பந்திருநாவுக்கரசென்றளித்தாரொளுத்தாள்கள்
    போற்றாவணங்கிமணங்கமழும்பொற்பூவனையதமிழ்ப்பனுவ
    லேற்றாநின்றார்மரகதவீரெட்டானத்தெம்மிறைவனையே. 92
    இறைவாழ்மூலவிலிங்கவடியிறைஞ்சிப்போந்தங்குடைஞாழன்
    பறையார்சோலைத்திருவெண்ணைநல்லூருடையவிடையாரை
    யுறவாடினர்தாமுறவாடியொன்றுமிருடீர்ந்தருள்பெற்றார்
    பிறையார்மின்னற்பின்னலராப்பேணிப்பணிந்தார்பெரியோரே 93
    சோலைகாட்டுங்கரைப்பெண்ணைத்துறையார்மறையார்சுந்தரரை
    மாலைகாட்டுந்தமையிமையோர்மகிழ்ந்துகாணமுறியூசி
    யோலைகாட்டியாண்டாரையோவரவிடைபெற்றோகையினா
    லாலைகாட்டும்பெருந்துழனியண்ணாமலையைநண்ணுவரால். 94
    நெடுந்தூரத்தேவன்னிமலைநிலையைநோக்கிப்பணிந்தெழுந்து
    தடந்தாமரைத்தாணினைந்துருகிச்சந்தம்பெருகுந்தமிழ்வாயார்
    நடந்தாரந்ததொண்டர்ப தநளினம்புளகம்பெறப்போற்றி
    வடந்தாழ்முலையாரெனுங்கொழும்பால்வாரிமுழங்குமவ்வூரே. 95
    ஊருட்புகுந்துவீதிதொறுமுள்ளங்குளிரவொளிவளரப்
    பாருட்பணிந்துதிணிந்தமதிற்பயில்கோபுரவாயிலும்பணிந்து
    வேருட்பழுத்தமலர்க்னியைவிண்ணாட்டமுதைத்தண்ணளிகூர்
    வாருற்றுணாணமுலையாளை மலைசூழ்போந்துவணங்கினரால். 96
    தாழாக்கருணை விடைகொடுபோய்த் தருக்கிப்பெருக்காற்றொழுததென
    வாழாநின்றதிருவிசைப்பாவள்ளலுள்ளங்கரைந்துருகிப்
    பாழாய்ப்பயிலாத்தொழிலாற்றும்பரனாலயங்கள்பலபோற்றிச்
    சூழாவருவாரிடைமருதிற்றோன்றுங்குருவையொருவாதார். 97
    மற்றுமபதிகளாங்காங்கிவணங்கிகுணங்கோணீறணிந்த
    சுற்றுஞ்ச்சடையார்க்கினியதமிழ்த்தொடைமாலகளும்பலசாத்தி
    யெற்றும்புனலும்பெரியோருமிளம்பூவையரும்வளம்பூத்துக்
    கொற்றந்தரும்வேதாகமமுங்குழுமுங்காஞ்சிநகர்புகுவார். 98
    வேறு.

    மாயவளப்பொருடேடமாநீரிற்போய்வருவார்
    நேயவனப்பொருடேடநீணிலத்தின்மேற்படர்வார்
    தூயவனப்பெரியோர்வாழ்தொண்டீரமண்டலத்துத்
    தாயவளெப்போதுமுறைதண்காஞ்சித்தலத்தணைந்தார். 99
    கச்சியாந்தலநலத்தைக் கண்டிரண்டுகைகூப்பி
    யுச்சிவாளிளம்க=பளிங்கையொத்துவளருத்தமனார்
    நச்சியாரணம்பாடி நாடியநற்றவங்காட்டும்
    பச்சைநாயகிசிவந்த பாதநினைந்துட்புகுவார். 100
    மெய்காட்டியாண்டருளும் வித்தகர்மாவடித்தேவர்
    கைகாட்டுந்தொண்டரெலாங் காவிரிப்பூம்பட்டினத்து
    ளைகாட்டும்பெரியோர்வவந் தடைகின்றா ரென்றடைந்தார்
    மொய்காட்டுமிவரவர்கண் முன்பணிந்தாரன்பாளர். 101
    மாடநெடும்பொன்வீதிவண்ணமெலாங்கண்ணுவப்ப
    நீடியநீரார்பணிந்து நீர்மழைகண்ணாற்பொழிந்து
    கோடலுறாவாக்காற்குணம்பாய்கொழுந்தமிழ்கள்
    பாடினார்நாடிப்பரநாதன்முன்பணிந்தார். 102
    ஒன்றாகநின்றுருகி யோங்காரநீங்காம
    னின்றானையேன்றன்பினின் கோலமாயிருப்பக்
    குன்றாவரமளிப்பாயென்றார்குறைவறியார்
    வென்றாளுமம்பிகைவாழ்மெய்க்கோயில் புக்கனரால். 103
    வேறு.

    ஆருயிராமவையார்பெறுவீடுற
    வாரநிலாவியமாதவன்மாதவள்
    சீருறைவாள்விழிசீருறைவாளரு
    ளேருறவேருறவேயிவர்நின்றார். 104
    செங்கழுநீர்மலர்மூன்றொருதீப
    மங்கலர்நான்கொருநான்கெரிதீப
    மெங்கனாமைக்கெனலாமிவையாவுஞ்
    சங்கரனன்பர்தருக்கொடுகண்டார். 105
    தாயவணின்றுதவம்புரி காலைக்
    கோயில்குலாநதிகொண்டமைகண்டார்
    நாயகன்மேனிநஞ்செய்தழும்பை
    யேயெவர்நாத்தழும்பேறமொழிந்தார். 106
    கச்சிநகர்கடலக்கடற்றோன்றும்
    பச்சமுதப்பரையைப்பணிவுற்றார்
    மைச்செறிகட்கடைவைத்தருன்வைத்தா
    லிசிசிறுமைக்கடல்வற்றிடுமென்றார். 107
    என்றுவணங்கிவலங்கொடிணங்கிக்
    குன்றில்விளைந்தகொழுங்கனியுட்கொண்
    டென்றுமிருங்களியின்பநிரம்ப
    மன்றினடந்தொழவந்தவர்வந்தார். 108
    வேறு

    திருவேகம்பமுடையார்க்குத் திகழ்ந்தந்தாதியொருமாலை,
    யிருபான்மெய்த்தொண்டெனவெடுத்தாரியற்றொண்டறியேன் கைத்தொண்டு,
    புரிவாரதனிற் காற்றொண்டுபுரியே னுண்பான்பொய்த் தொண்டாய்,
    வருவேனென்றார் மெய்நாட்டோர் நகைக்கவெனு மலையுமிசைத்தார். 109
    இசைத்தங்கிருப்பாரோரிரவிலெரிவந்துதரம்புகுந்தாற்போ
    லொசிக்கும்பசிவந்தெழவயிறேயூருண்டுறங்கனடந்தனகாண்
    வசிக்குமவர்களனம்பகிராரளியாயென்றுவழுத்திடவும்
    பசிக்குந்தரமேலிடவிளக்குப்படுவீடொன்றிற்படர்ந்தனரால். 110
    காயும்பசியாலருட்பெரியோர்கங்குல்யாமத்தெளியராய்
    வாயுந்திறவாரங்கைகொட்டமனைவாழ்பவன்சற்றறியாம
    லாயுங்காமக்கள்ளனெனவந்தோவந்தோதீங்கிழைப்பத்
    தீயோன்செயலையறிந்தங்கணயலானொருவன்றெரிந்தணைந்தான் 111
    போற்றும்பெரியோரிவர்தமைநீபுடைத்தல்பொல்லாதெனவதனை
    மாற்றிக்கொடுபோயுடற்றடவிமகிழ்பாலன்னங்கறிநறுநெய்
    கோற்றேனிவைகள்கலந்தூட்டிக்குளிர்சாந்தணிந்து பணிந்துசெயல்
    சாற்றியிடநீரவரவர்க்குத்தக்கதடைந்தீரென்றார்பின். 112
    பிரியாவரனைவிடைகொடுபோய்ப்பெருங்காளத்திமலைநோக்கி
    வரியார்சுரும்பர்வரியிசைக்குமலர்க்காவாலங்காட்டம்மைக்
    குரியார்வணங்கிமணங்கமழுமுயர்பூங்கானநெடுஞ்சாரற்
    பெரியோர்தவங்கள் புரிவன வுங்காண்பான் கருதிப்பெயர்ந்தணைந்தார் 113
    தொண்டர்திரண்டோடிப்பணிந்து தொழுதுவீதிச்சினகரத்தைக்
    கண்டுவணங்கிக்கரங்கூப்பிக்கள்ளங்கொள்ளாவுளத்தார்
    மண்டும்பேரன்பெனவறியா வண்ணம்பயிலுங்கண்ணப்பர்
    பண்டைப்பணியைநினைந்துருகிப்பல்காலொல்கிப் பணிந்தனரால். 114
    பணிந்துதிருக்காளத்திமலைப்பரஞ்சோதியையும்பணிந்துபணிந்
    தணிந்துபரஞ்சோதித்திருநின்றன்பென்புருகுமின்பாளர்
    திணிந்தபடிவக்கொடுமுடிகடிசைகடோறுமிசையுமவை
    துணிந்துகருணைத்திறம்பெறுவார்சூழப்போந்தார்வாழ்வுறவே. 115
    போதும்போதின்மணிநகரம்புடையிலாடலிசைநோக்கி
    நாதர்க்கிடுதண்டுடைத்தீபநணியவாகுங்கதிக்காளற்
    கேதமில்லாவுறவேயோவென்பார்முன்போம்பலயானை
    சீதமதியோன்விழாவினுக்குத்திருமுன்படரப்போவென்பார். 116
    ஐயன்றிருமேனியினடங்குமத்தீயுறசவோவெனநினைவா
    ரெய்யுஞ்சிலைவேட்டுவர்திண்ணர்க்கெண்ணுமுறவோபண்ணமைந்த
    செய்யனிவாய்க்குறமளிர்சிவஞ்சேர்கன்னிமார்நேர்வார்
    துய்யசீரர்தமிழிசையோர் சுரும்பின்பாடலாமென்பார் 117
    தவமற்றாமலாற்றுமவர் தம்மைச்சிவகோசரியாரென்
    றுவமானத்தானினைந்துருகியொளிகூர்தென்றிசைக்கயிலைத்
    தவமாமலையைச்சூழ்போந்துதொடர்ந்துபடர்ந்தத்தவத்தவரோ
    டவமாறியலாக்கதியளிக்குமையன்றிருமுன்னடைந்தனரால். 118
    குளிர்கூரருவித்தென்கயிலைக்கோமாற்கில்லுமெனப்பாடி
    யொளியார்திருமுன்விடைகொடுபோயொற்றியூர் கைப்பற்றினராய்த்
    தளியாலயங்கள்பலபோற்றித்தண்டாமரைக்காட்டொடுமாட
    வெளிமாமலைகள்கலைஞானவேலைநிலவப்பதிபோந்தார். 119
    அடியார்திரளவ்வயினோக்ககியடிகளடித்தாமரைபோற்றி
    விடியாவிருளைவிடிவிக்கும்வீதிமதிற்கோபுரம்பணிந்து
    பொடியாடியவொண்டிருமேனிப்புனிதனுனதப்புகழ்பாடி
    நடியாநிற்குநாதாந்தஞானப்பொருளைநணுகினரால். 120
    குருவாய்வந்தென்குறைதீர்த்தகுன்றேகுன்றக்கொழுமணியே
    பெருவாழ்வாகியெனைக்கலந்துபிரியாதிருக்கும்பெருந்தேனே
    யுருவாயருவாயுருவருவாயுரையாடியமூன்றையுமொருவி
    வருவாய்தருவாயென்னுயிர்வாய்மருவாய்மருவாய்மருவாயே. 121
    போற்றிபோற்றிநாயேனைப்பொருளாய்க்கொண்டவருள்போற்றி
    யற்றின்வலிகூர்முகங்கோடியடக்குஞ்சடையாயடிபோற்;றி
    தேற்றியினியாயினுமுனைப்போற்செய்வாய்மெய்வா யருள்போற்றி
    நீற்றினுள்ளேபவளவொளிநிகழுந்திகழ்வேயருள்போற்றி. 122
    என்றென்றருளின்றிறம்போற்றியெள்ளாவுள்ளங்கனிந்திளைப்ப
    மன்றுளாடியெமக்கருளுமணிமாணிக்கப்பதம்பணிந்து
    நின்றுபோந்துவலஞ்சூழ்ந்துநிகழ்ந்துமகிழ்ந்தங்கிருக்கின்றார்
    தென்றல்வந்துசுந்தரரைத்திருவாரூருக்கழைத்தவூர். 123
    மயனாலயனாலியற்றாதமணிச்சங்கிலிக்குத்தூதுபோய்
    வியனாமிருகானடந்தார்க்குவிருந்தாய்வந்தவெண்காடர்
    கயனாணியகட்கணிகையர்காற்கமலச்சில்ம்பினொலிமலியும்
    பயனாரொற்றியூர்பற்றிப்பதிகொண்டிருந்தார்படிபோற்ற. 124
    வேறு.

    இருநிலமடந்தையென்னவெடுத்தவாசிரியச்செய்யு
    ளொருபதுமொன்றுமொற்றியூர்த்தொகையெனப்பேரிட்ட
    திருவிசைப்பாவாற்பாடித்தெளியொளியுளம்விளங்கப்
    பெருநிலையுடையாரின்பப்பேறெலாம்பெற்றுளாரே. 125
    பெற்றவர்திருநீராடித்திருநீற்றின்பெற்றிமுற்றுங்
    கற்றவர்புறங்கண்மூன்றுங்கற்றவர்கருத்துட்கொண்டு
    செற்றவரடிகள்பாடித்தினந்தொறுநியமமாற்ற
    லுற்றனருற்றவாற்றினுண்மையிங்கியம்பலுற்றேன். 126
    நம்மிடைமருதநாதனற்குருவாகிவந்து
    தம்பொருடனக்குத்தந்ததண்ணளிப்பெருமையாலே
    யம்பொனஞ்செழுத்தினாலுமருநியமங்கள்செய்வார்
    சம்புவையொழியாப்பூசைத்தன்மையுமவற்றாற்செய்வார். 127
    கிளர்ந்தகெற்பத்தினுள்ளுங்கெற்பகோளகையிடத்துங்
    கொளுங்கெற்பநிலையத்துள்ளுங்கேவலஞ்சகலங்கூர
    வளந்தறிசகலந்தாமேயதீதம்போன்றதீதமன்றாம்
    வளங்களுங்கண்டுநீங்குமண்டொளிகொண்டுநிற்பார். 128
    அவத்தைகடணந்தவன்றியையனுக்காக்கையாக்கிச்
    சிவத்தொழிலொவ்வெழுத்தாற் சிவலிங்கவடிவமாகிப்
    பவப்பெரும்பிணிதணிப்பார்பரவுயிர்தமக்குளாக்கி
    யவர்க்குளவுடலந்தாமேயாயினரொற்றியூரர். 129
    அவருயிர்தமக்கில்லாக்கியாண்டவாண்டகையார்நிற்ப
    வுவரிவாய்மணற்பரப்பிலொளிவெளியிடத்திற்போந்து
    கவலுறாச்சிறார்கள் சூழக்கண்டவர்தன்மையாகிப்
    பவர்விளையாடலோடும்பாடலும்பயிலலுற்றார். 130
    குறுமகாரணிக்குழாங்கள்குளிர்மணப்புளினப்பாங்க
    ருறுதிமெய்தளர்ந்துபின்னரொன்றும்வெண்காடர்தம்மை
    மறுதரம்புதைத்துத்தொக்கவப்புறம்பரந்துநிற்பார்
    மறுகுழிப்படுத்தபின்னு மன்னவர்விலகிநிற்பார். 131
    பன்முறயித்தன்மைத்தாம்படிபடிமணலிற்காட்டி
    முன்னியபட்டினத்துமுனைத்தவவடிவந்தானே
    சென்னெறியிலிங்கமாகிச்செழுமணறனின்முளைத்தார்
    புன்னெனறிச்சிறார்களோடிப்புரத்துளார்க்குரைத்தாரன்றே 132
    ஒற்றியூருழியுள்ளாருமற்றுளபுரியுளாரும்
    பற்றியூர்ந்தடைந்துகண்டார்பட்டினக்கடவுளாரை
    வெற்றியூர்மூன்றுஞ்செற்றவிமலரேயிவராமென்றார்
    பெற்றியூரதிசயத்தின்பெருமையாருரைசெய்வாரே. 133
    மலர்மழைபிழிந்தவெங்கும்வானதுந்துமிமுழங்க
    நலமலிகணங்கள்சூழநாகநாட்டரம்பைமார்கள்
    பலநடம்பயிலப்பூவிற்பாவையாரடியர்பாட
    விலகியவிதழிமாலையீசனுக்கணிந்தாரன்றே. 134
    புகுவார்வார்த்தைநாத்தகவாப்புவனத்துள்ளுமந்தரத்து
    மகிழுந்தேவருலகுள்ளுமணிநீர்வேலிஞாலத்துந்
    தகுவோர்கேளாவிவர்பேறுந்தமக்குவருமோவெனக்களித்தார்
    நகையானீலப்புரமூன்றுமெரித்தார்பெருமைநவில்வார்யார் 135
    திருவம்பலமேமுதலாயசிவத்தானங்கள்பணிந்தனவு
    மருவும்பொழுதுதிருவிசைப்பாவழுத்துந்திறமுமொற்றுயூ
    ரருளின்றிற்த்தாற்சிவலிங்கமானவாறும்பூம்புகார்
    விரவுங்குலத்தாரறிந்தோகை வெள்ளத்தழுந்தாமிதந்தெழுந்தார். 136
    அழுவார்தொழுவார்சென்னியின்மேலங்கைத்தலவஞ்சலி முகிழ்ப்பார்,
    வழுவாநமதுகுலத்தெய்வம்வருமோகாணவினியென்பார்,
    முழுவாண்மதியிங் கெழுந்தருளப்பெறு மோவென்னமொழிகின்றார்,
    பொழுதோடிவண்விட் டவ்விடம்போய்ப்பணிவோ
    மென்பார் புண்ணியரே. 137
    சொன்னவண்ணங்கிளைகளொடுந்துழனியாய்ப்பவப்பதியோ
    ரன்னபெரியோர்போனநெறியவனிதலமேற்பலர்படர்வா
    ரின்னாவாற்றாலொற்றியூரிடத்திலடைந்தார்சிவபெருமான்
    றன்னைப்பணிந்திச்சிவபெருமாம்றனையும்பணியாநிற்கின்றார். 138
    பேற்றிபோற்றிநின்னிரண்டுபூமென்கமலபதம்போற்றி
    தேற்றமருவும்பரநாதச்சிலம்புபோற்றிநலம்பயிலன்
    பேற்றவரியபுலியதளின்மருங்குல்போற்றிநெருங்கரவந்
    தோற்றுமுதரபந்தமுந்திச்சுழியும்போற்றியெழில்போற்றி. 139
    புரிநூன்மார்பும்வெண்ணீறும்புயமீரைந்தும்புடைபோற்றி
    வரியாரரவம்வச்சிரம்வாண்மழுவோடபயம்வலம்போற்றி
    யரவார்பாசக்கயிறுமணியனலங்குசத்தோளிடம்போற்றி
    கரவாதிருக்குந்திருநீலகண்டம்போற்றியொளிபோற்றி 140
    நடுவுகுணபாற்றென்றிக்குநடக்கும்வடக்குக்கிழக்கிவற்றி
    னடைவுபடிகம்பொன்கருமையாத்தம்பாலாமுகம்போற்றி
    முடிவிலாதமுகங்கடொறுமுக்கட்கமலபதம்போற்றி
    சடையுமுடியும்பொன்னிதழித்தாமத்தொடையுந்தனிபோற்றி. 141
    சிவமொன்றாயச்சதாசிவமைந்தாகித்தெளிவுகூர்வோர்க்குப்
    பவமாற்றவருமகேசமெனப்பரவுமுருவத்தைந்தாகி
    யவமாற்றியமெய்க்கடவுளுடனாகும்பொறுளேயடிபோற்றி
    கவலாதம்மைக்காக்கவருங்கருணாநிதியேயடிபோற்றி 142
    என்றுபோற்றிமாபூசையியற்றிப்பணிகள்பலபுரிந்து
    மன்றல்கமழுமவ்வூரில்வசித்தார்சிலவரிவர்க்காக
    நன்றிபெருகுமிஞ்சியிசைநகரமதனினினிதமர்ந்தார்
    குன்றாச்செல்வமிருமைக்கும்பெற்றார்சற்றுங்குறைவிலரே. 143
    அருளுமிலிங்கமானவன்பர்தங்காதைகேட்போர்க்
    கிருளாறுஞ்செல்வமல்குமென்றுநன்னலங்கணண்ணும்
    பெருமையுமறிவுமென்றும்பிறங்கியகதியுமாகுந்
    திருமகள்கலைமகள்கைசேர்வதுந்திண்ணமாமே. 144

    ஆக-திருவிருத்தம். 336
    பட்டணத்துப்பிள்ளையார் புராணம் முற்றிற்று.

    திருச்சிற்றம்பலம்.