MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    8. 1 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 - 3941)


    திருச்சிற்றம்பலம்

    3939 செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
    மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்
    மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
    பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் 8.1.1
    3940 பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்
    சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற
    பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
    மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் 8.1.2
    3941 ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
    தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
    ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
    பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் 8.1.3
    திருச்சிற்றம்பலம்


Goto Main book